Saturday, February 26, 2022

துவாபரயுகத்து மகாபாரதமும் மனதில் நிகழும் சூட்சும பமகாாரதமும்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

துவாபரயுகத்தில் நடைபெற்ற மகாபாரதத்தின் மையமாக அஸ்தினாபுரம் இருந்தது. அதுவெளியுலக மகாபாரதத்தையும் அஸ்தினாபுரம் என்ற சாம்ராச்சியத்தையும் குறித்தது போன்று ஒவ்வொரு மனிதனின் உள்ளேயும் நுண் மகாபாரதம் நடைபெறுவதாகவும் அங்கு அஸ்தினாபுரம் என்பது மனித உடலைக் குறிப்பதாக பகவான் கூறுகிறார். 

அஸ்தி என்ற சொற்தொடர்‌ உடலிலுள்ள எலும்பைக் குறிப்பதாகவும்  புரம் என்று குறிப்பிடப்படுவதே உடல் என்றும் கூறும் பகவான், எலும்பாலும் தசையாலுமான இவ்வுடலை அஸ்தினாபுரத்துக்கு ஒப்பிடுகிறார்.

உடலினுள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்‌‌ நுண் மகாபாரத‌ அஸ்தினாபர நிகழ்வு போல், ஒவ்வொரு‌ மனிதருள்ளும் நுண் பிரபஞ்சம், நுண் ஆகாயம்‌ என்பன இயங்கிக் கொண்டி ருப்பதாகவும்,  இது "சூட்சுமஹிருதய ஆகாசம்" என்றும் ‌பகவான் கூறுகிறார். 

சூட்சும ஆகாயத்தில் புத்தி அதாவது அறிவுதான் ‌சூடசும சூரியன் எனவும் ஹிருதயம்  தான் சூட்சும ஆகாயம் என்றும் பகர்கிறார்.

மேலும், ஹிருதயம் எனபது தசையாலான உடல் உறுப்பைக் குறிப்பிடவில்லையென்றும் அது உடலை இயக்கும் ஆன்மாவுடன்
 தொடர்பானது என்றும் விளக்கமளிப்பதுடன், அங்கு அறிவு (புத்தி) என்ற சூட்சும சூரியன், சூட்சும சந்திரன் எனப்படும் அன்பு (பிரேமை) என்பன இருப்பதையும் விளக்குகிறார்.

அஸ்தினாபுரத்தில் நடைபெற்ற ஒவ்வொரு சம்பவமும் நமது  உடலினுள்ளே சூக்கும நிலையில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறுகிறார்.

ஒவ்வொருவரிலும் நற்குணங்களும் கெட்ட குணங்களும் அமைந்திருப்பதாகவும், நற்பண்புகள் மாத்திரமோ கெட்ட பண்புகள் மாத்திரமோ எந்தவொரு மனிதரிலும் இருப்பதில்லை என்று கூறும் எம்பிரான், மகாபாரதத்தின் பார்வையற்றவரும் தீய குணங்களைக் கொண்ட துரியோதனன், துச்சாதனன் ஆதியோரின் தந்தையான திருதராஷ்டிரனை மனித மனதின் தீய எண்ணங்களின் வடிவமாகவம், அவரது தம்பியும் தர்மத்தைக் கடைப்பிடித்த பாண்டவர்களின் தந்தையான பாண்டுவை மனித மனதின் நற்குணத்துக்கும் ஒப்பிடுகிறார்.

திருதராஷ்டிரன் பார்வை அற்றவராகவும், அதிக ஆசை பாசங்களுக்கு இடமளித்து, தவறான பாபகரமான செயல்களில் ஈடுபட்ட  தனது புத்திரர்களின் பக்கமே எப்பொழுதும் பக்கச் சார்பாகவே நடந்தததைப் போன்று தீய எண்ணங்களைக் கொண்ட மனதின் பகுதியில் தோன்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ‌‌தீய குணங்களை நோக்கிச் செல்லும் புலன்களைக் கட்டுப்படுத்தாமல்  அவை செல்லும் பாதையிலேயே சென்று மனிதனைப் பாபத்தில் தள்ளுவதாகவும் கூறுகிறார்.

மேலும் சத்தியம், தர்மம், அமைதி, அன்பு. அகிம்சை ஆகிய குணங்களைக் கொண்ட ஐந்து புத்திரர்களைப் பெற்றுத் தானும் தர்மநெறிகளும் தியாகமும் நிறைந்தவரான பாண்டுவை, ஐம்புலன்களையும் கட்டுப்பாட்டில் வைத்தபடி நற்செயலில் ஈடுபடும் மனதின் பகுதிக்கும் எம்பெருமான் ஒப்பிடுகிறார்.

இவ்வாறு நமது மனதினுள் நற்பண்புகளும் தீயபண்புகளும் இருப்பதால் இக்குணங்களுக்கிடையே தொடர்ந்தும் போட்டி நடைபெற்றுக்
 கொண்டிருப்பதாகவும்‌ கூறும் பகவான், மனிதன் பிறக்கும்போதான குழந்தைப்பருவம் தெய்வீக நிலையிலிருப்பதாகவும் புலனறிவு அதிகரிக்கும்போது புலன்களின் கட்டுப்பாடு அதிகரிப்பதால் அப்புலன்கள் நல்வழிகளிலும் தவறான வழிகளிலும் மனநதைச் செலுத்த ஆரம்பிக்கின்றது என்றும் கூறுகிறார்.

எனவே குழந்தைப்பருவத்து உடல் தர்மசேத்திரமாக இருப்பதாகவும், வயது முதிரும்போது உடல் குருச்சேத்திரமாக மாறிவிடுவதாகவும் பகவான் ஒப்பிட்டுக் கூறுகிறார்.

மேலும், மகாபாரதப்போர்‌ 18 நாட்களில் முடிவடைந்தது மாத்திரமன்றி‌ 18 அக்குரோணிச்‌ சேனைகளும் 18 நாட்களில் அழிந்தபோதிலும்‌ மனித மனதில் நடைபெறும் சூட்சுமப் போரானது வாழ்நாள் முழுவதும் தொடர்வதாகவும்‌ கூறுகிறார்.

"சமஸ்தலோகா சுகினோ பவந்து"

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

Friday, February 25, 2022

கலியக் கண்ணன் சாயி பகவான்

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

மகாபாரதம் மற்றும் ராமாயணத்தைப் பற்றிய  அருளுரைகளின்‌ போதும் ஆத்மாராமயணம், ஆத்மா மகாபாரதம் என்பவை பற்றி நமது சாயிநாதன் குறிப்பிடுகிறார்.

ராமாயணம் மற்றும் மகாபாரத நிகழ்வுகளின்போது இந்தப் பிரபஞ்சத்தையே இயக்கும் பரம்பொருளே மனித உருவில் பூமியில் அவதரித்துத் தனது அவதார நோக்கங்களை நிறைவேற்றியுள்ளார்.

திரேதாயுகத்தில்  சிறி ராமனாக அவதரித்து அரக்கர்களை அழித்தது மாத்திரமன்றி வைகுண்டத்தில்    திக்குப் பாலகர்களாக இருந்து, சாபத்தின்காரணமாக இராவணனாகவும் கும்பகர்ணனாகவும் பூவுலகில் பிறவியெடுத்த ஜெய விஜயர்களுக்குச் சாபவிமோசனம் அளித்தார். 

மேலும் தனக்காகக் காத்திருந்த சபரி, அனுமன் மற்றும் ரிஷிகள், தபசிகள், பக்தர்கள் அனைவருக்கும் அருள்பாலித்தார். 
ராமாவதாரத்தில் அவதார நோக்கத்தை நிறைவேற்றினாரே தவிர பால லீலைகளில் ஈடுபடவில்லை.

துவாபரயுகத்தில் கண்ணபிரானாக அவதரித்து அவதார நோக்கங்களை நிறைவேற்றியதுடன் பால லீலைகள் பல புரிந்தார். கோகுலத்தில் பால லீலைகள் புரிந்த கண்ணபிரான், மதுரா நகர் சென்றபின் பால லீலைகளைக் கைவிட்டு மகாபாரதத்தின் சூத்திரதாரியாகச் செயல்பட்டு அதர்மத்தை அழித்துத் தர்மத்தை நிலைநாட்டியதுடன் பூமாதாவின் வேண்டுகோளின்படி பூபாரத்தையும் தீர்த்தருளினார்.

துவாபரயுகத்தில் நடைபெற்ற மகாபாரதத்தில் அஸ்தினாபுரம் மையப் பகுதியாக விளங்கியது. அஸ்தினாபுரம்   அதன் சக்கரவர்த்தியான சந்தனு மகாராஜா,  தனது இராச்சியத்தையே தியாகம் செய்த பீஷ்மர்,  அதன்பின் அஸ்தினாபுர வாரிசுகளான பிறவியிலேயே கண்பார்வையற்ற திருதராஷ்டிரன் மற்றும் சக்கரவர்த்தியாக முடிசூட்டப்பட்ட தருதராஷ்டிரனின தம்பியான பாண்டு ஆகியவர்களைச் சுற்றியும்,  திருதராஷ்டிரனின் 100 புதல்வர்களான கௌரவர்கள் மற்றும் பாண்டு புத்திரர்களான பஞ்சபாண்டவர்கள் பற்றியும் அவர்களின் வீரதீரச் செயல்கள் பற்றியும்  கௌரவர் தரப்பினருக்கும்  பாண்டவர் தரப்பினருக்குமிடையில்‌ நடைபெற்ற‌ மகாபாரதப்போர் பற்றியும், போரினால் ஏற்பட்ட‌பேரழிவுபற்றியும் இறுதியில்‌ அதர்மத்துக்குத் துணைபோன அனைவரும் அழிந்து தர்மம் நிலைநாட்டப்பட்டது பற்றியும் வியாசபெருமான் எழுதிய மகாபாரதச் சரித்திரத்திலிருந்து‌ம் வேறுபல நூல்களிலிருந்தும் நாம் அனைவரும் படித்தறிந்துள்ளோம்.

மகாபாரதத்தில் நாம் அறிந்த விடயங்கள் அனைத்தும் தகுந்த ஆதாரங்களின்றியும் சமஸ்கிருத மொழியிலிருந்து‌ பிறமோழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களிலிருந்தும் நாம் படித்தறிந்தோம். 

மொழிபெயர்ப்புச் செய்தவர்கள் தங்கள் மொழியறிவுக்கேற்ப மொழியாக்கம் செய்தமையால்‌ சம்பந்தப்பட்ட நூல்களுக்கிடையில் வேறுபாடுகளும் விளக்கமின்மையும் காணப்பட்டன.

பாரதப் போரில் ஆயுதமேந்தாமல் பங்குபற்றித் தர்மத்தை நிலைநாட்டிய கண்ணபிரான் பற்றியும் அவரது லீலைகள் பற்றியும் கற்றறிந்து இருக்கிறோம்.

திரேதா யுகத்தில் சிறீ‌ ராமபிரானாகவும், துவாபர யுகத்தில் கண்ணபிரானாகவும் அவதரித்து உலகை‌ இரட்சித்த அதே எம்பெருமான் கலியுகத்தில் சாயிக் கண்ணனாக, சாயிராமனாக, சாயிமகாதேவனாக நம்மத்தியிலே மனித உருவில் அவதரித்து, நம்முடன்‌ வாழ்ந்து, தனது அவதார‌மகிமையை‌ வெளிக்காட்டியது  மாத்திரமன்றி, கடந்த அவதாரங்களில் தான் நிகழ்த்திய லீலைகளையும் ‌அற்புதங்கள் அனைத்தையும் நமக்குத் தெளிவாக விளக்கியுள்ளார். 

மேலும் ‌நமது‌ மனிதப்பிறவியின் நோக்கம் என்னவென்பதையும்,  மிக எளிதாக‌ இப்பிறவிப்‌பெருங்கடவைக் கடந்து பிறப்பு இறப்பற்ற‌ நிலையடைவதற்குரிய‌ வழிகளையும் தெளிவாக விளக்கியுள்ளார்.

சாயினாதனின் பேரருளால் நமக்குக் கடந்த காலத்தில் நடைபெற்ற அவதார‌லீலைகளைப் பற்றி ஆதாரபூர்வமாகத் தெரியவந்துள்ளதுடன் நமக்கென அருளுரைகள் பல வழங்கி‌ நம்மை உய்விக்க வழிவகுத்துள்ளார் நமது கண்கண்ட கலியுகத் தெய்வமான சத்திய சாயிபகவான்.

சமஸ்த லோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ ‌சாயி ராம்.

Thursday, February 24, 2022

புலன்களைக் கட்டுப்படுத்துவதன் அவசியம்

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

இறைவன் நமக்கு ஐந்து புலன்களை அளித்திருக்கிறார். அந்தப் புலன்களை அவற்றின் கட்டுப்பாட்டிலேயே விட்டால் அவை தமது இஷ்டப்படியே செயல்பட்டுப் பல்வேறு தவறான பாதைகளில் நம்மை இழுத்துச் சென்றுவிடும். இதனால் இப்புலன்களை நமது கட்டுப்பாட்டில் வைத்து நல்வழியில் பயன்படுத்துவது நமது கடமையாகும். 

நமது உடல் தேர் போன்றது. மனமே தேர்ச்சாரதி. உயிரே பயணி. இறவனை அடைவதே உயிரின் பயணத்தின் நோக்கம். உடலான தேரை இழுத்துச் செல்லும் குதிரைகளே புலன்கள். புலன் எனப்படும் குதிரைகளைச் செலுத்தும் சாரதியே மனமாகும். 

குதிரைகள் சாரதியின் கட்டுப்பாட்டில் இருக்கும்வரை தான் தேர் உரிய பாதையில் விரைவாகச் சென்று, அடைய வேண்டிய இடத்தை அடைய முடியும். 

ஆனால் குதிரைகள் சாரதியின்கட்டுப்பாட்டில் இருக்காவிட்டால் தேர் சேரவேண்டிய இடத்துக்குச் செல்லாது. 

எனவே மனமாகிய தேர்ச்சாரதி புலன்களாகிய குதிரைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஐந்து புலன்களும் தமது கடமைகளைச் சரிவரச் செய்ய வேண்டும். 

கண்ணால் பார்க்க மாத்திரம் முடியும். அதனால் கேட்க முடியாது. காதுகளால் கேடகமுடியும் ஆனால் பார்க்க முடியாது. எனவே ஒவ்வொரு புலனும் தனக்குரிய கடமையை ஒழுங்காகச் செய்யும்போது எல்லாம் நன்றாகவே நடக்கும். 

கண்கள் நல்லவற்றையே பார்க்கவேண்டும். காதுகள் நல்லவற்றையே கேட்கவேண்டும் மூக்கு நல்லவற்றையே நுகர வேண்டும். கைகள் நல்லவற்றையே செய்யவேண்டும். கால்கள் நல்ல இடங்களுக்கே செல்ல வேண்டும் வாய் நல்லவற்றையே பேச வேண்டும் நா நல்லவற்றையே சுவைக்க வேண்டும்; பேசவேண்டும். 

இப்படி எல்லாப் புலன்களும் நல்ல விடயங்களையே செய்யும்போது மனமும் நற்சிந்தனையுடன் இருக்கும் நாம் தவறெதுவுதும் செய்யாமாட்டோம். 

எனவே புலன்களை அடக்கி இறவனை நோக்கிய நமது பயணத்தைத் தொடர்வோம். அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துவோம்.

சமஸ்த லோகா சுகினோ பவந்து.

ஓம்  ஸ்ரீ சாயி ராம்.

Wednesday, February 23, 2022

கலியுகக் கண்ணன் சாயிநாதனின் விளக்கவுரைகள்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

நன்நடத்தை என்பது ஒரு முக்கியமான பண்பாகும் என்பதை ‌வலியுறுத்தும்‌ நமது சாயிநாதன் ஒற்றுமையும்‌,  உயர்ந்த தியாகமனப்பான்மையும் நம்மிடையே இல்லாமல் போய் விட்டது என்றும்,  அதனால் எல்லா வளங்களும், எல்லா வகையான தர்மங்களும் பயனற்றுப் போய்விட்டதாகவுமா இதன்காரணமாக நம்மை நாமே அழித்துக்கொள்கிறோம் என்றும் கூறுகிறார்.

எனவே நாம் நம்மிடையே ஒற்றுமையை வளர்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்றும்‌, நாம் அனைவரும் ஒரே மானுட இனத்தைச் சேர்ந்தவர்கள் ‌என்ற காரணத்தால் மனிதர்கள் ‌தம்மில் மிருகத்தன்மைக்கு இடமளிக்கக் கூடாது என்றும், நாம் அனைவரும்‌ மனிதர்களே எனும் உண்மை நிலையை உணர்ந்துகொள்வது மிகவும் அவசியம் என்றும் வலியுறுத்துகிறார்
.
மேலும் தனது அருளுரைகளின்போது "அடுத்வருடைய துன்பங்களை நம்முடைய துன்பமாகவே பாவிக்கவேண்டும். மற்றவர்களுடைய கஷ்டங்களையும் நமது கஷ்டங்களாகவே கருதவேண்டும். மற்றவர்கள் அனுபவிக்கும் துன்பத்தை நாமும் அனுபவிக்கும்போதுதான் இந்த உண்மையை உணர்ந்துகொள்வோம். 

ஒன்றுபட்ட உணர்வைப் பெற்று, நம்மிடையே சகோதரத்துவத்தை வளர்த்து ஒற்றுமையாக வாழ வேண்டும். சமுதாயத்திலுள்ள நல்ல விடயங்களைக் கடைப்பிடித்துத் தீயவற்றை ஒதுக்கும் மனோபாவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும். 

சமுதாயத்தில் நல்லதும்‌‌ கெட்டதும் லந்துதான் இருக்கிறது. இதனால் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. நாம் நமது பகுத்தறிவைப் பயன்படுத்தி சமுதாயத்திலுள்ள நல்லவைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு தீயவற்றை ஒதுக்கித் தள்ளவேண்டும். 

யராவது நமக்குத் தீங்கு செய்தால்கூடப் பதிலுக்கு நாம் அவர்களுக்கு நல்லதையே செய்யவேண்டும். 

உதவி செய்தவர்களுக்குப் பிரதி உதவி செய்வதை விடத் துன்பம் செய்தவர்களுக்கும் நன்மை செய்வதில்தான் நமக்குப் பெருமை இருக்கிறது. 

அனைவரும் தீமைசெய்வதன்மூலம் துன்பத்துக்கு ஆளாக்கியவர்களுக்கும் 
நன்மை செய்யவேண்டும் என்ற உயர்ந்த மன நிலையை உருவாக்கிக்கொள்ளவேண்டும். 

ஒருவர் இன்னொருவருக்கு‌ நன்மை‌ செய்வதும் துன்பத்தை ‌ஏற்படுத்துவதும்‌ அப்போது அவரவருக்கு இருக்கும் மனநிலையைப் பொறுத்தது.

அனைவருக்கும் நன்மை செய்வதே நமது கொள்கையாக இருக்கவேண்டும். நமது மனப்பான்மை எப்படி உள்ளதோ அப்படியே தான் விளைவும் இருக்கும். உணர்வுகள் நல்லவையாக இருந்தால்  செயல்களும் நல்லவையாகவே இருக்கும். 

மனதில் நல்லெண்ணம் இருந்தால் நினைப்பவை, செய்பவை எல்லாமே தானாகவே நல்லவைகளாக அமைந்துவிடும் தீய எண்ணங்கள் இருந்தால் செயல்களும் தீயவையாகவே இருக்கும்"
 
பகவவான் தனது அருளுரைகளில்‌ மகாபாரதத்தைப் பற்றிக் குறிபபிடும்  பொழுதும் மகாபாரத நிகழ்வுகள்  பற்றிய அடியாரகளின் சந்தேகங்களை நிவர்த்திப்பதற்கான‌ விளக்கவுரைகளிலும் கலியுகத்தின் சாயிக்கண்ணனான தானே துவாபர யுகத்தின்‌ கண்ணபிரான் என்பதை உறுதிப்படுத்துவதுடன் மகாபாரதத்தைத்தில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தையும் மிகத் தெளிவாக விளக்குகிறார்.

சமஸ்த லோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.




Tuesday, February 22, 2022

வாழ்க்கை என்னும் பாரதப்போர்

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

பர்த்தி நாதன் நமது வாழ்க்கையை மகாபாரதத்தின் நிகழ்வுகளுடன் துல்லியமாகத் தனது அருளுரைகளில் ஒப்பிட்டுள்ளார்.

ஒவ்வோரு மனிதனும் தான் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து சிறிதளவுகூடப் பிசகக் கூடாது என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டுளாளார்.

மகாபாரதத்தில் பாண்டவர்கள் ஐவருக்கும் கௌரவர்கள் நூற்றுவருக்குமிடையில் தொடர்ந்து பகைமையுணர்வு இருந்ததையும் இந்தப் பகைமையை அகற்ற வேண்டிய கடமையைக் கொண்டிருந்த அறவோரும் அறிஞர்களும தமக்குத் தாமே வகுத்துக்கொண்ட சுய தர்மம், சுய நீதிமுறைகளுக்கு மாத்திரமே முக்கியமளித்தது மாத்திரமன்றி இறைவன் வகுத்த  நீதியைக் கடைப்பிடிக்கத் தவறியதாலேயே பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் பயங்கர யுத்தம் ஏற்பட்டுப் பேரழிவேற்பட்டதையும் பகவான் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.

 அதுபோலவே ஒவ்வொரு மனிதனுள்ளும் சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சை ஆகிய ஐந்து நற்குணங்களும் மதம், மாத்சர்யம், லோபம் மற்றும்‌ஆணவம், அகந்தை, பொறாமை, போட்டி ‌போன்ற பல நூறு கெட்ட குணங்களும் உள்ளன. இவை அனைத்துக்கும் காரணம் ஐம்புலன்கள் தமது இச்சைப்படி‌ கட்டுப்பாடின்றி ‌ஓடுவதாகும்.

அதேவேளை ஐம்புலன்களும் மனதின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். மனம் ஆத்மாவின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

ஆனால் மனமென்பது புலன்கள் காட்டும தவறான வழிகளில் செல்ல ஆரம்பித்தால் மனித மனமும் உடலும் தாறுமாறான தவறான‌ பாதைகளில்தான் செல்லும்.
எனவே மனிதர்கள் அனைவருக்கும் மனக்கட்டுப்பாடு மிக அவசியம்.

மனது என்பது எண்ணங்கள் ஒருங்கிணைந்த ஒன்றென பகவான் தனது அருளுரைகளில் கூறி வருகிறார். மனித மனம் என்பதற்கு ஒரு துணியை உதாரணமாக பகவான் கூறுகிறார்.

இதனை விளக்குவதற்கெனத் தான் பயன்படுத்தும் கைக்குட்டையையே பகவான் உதாரணமாக்குகிறார். 

தனது கையிலிருக்கும் கைக்குட்டையைக் காண்பித்து, " இது‌ ஒரு கைக்குட்டை. இந்தக் கைக்குட்டை யிலிருந்து ஒவ்வொரு நூலாக அகற்றினால் கைக்கட்டை மறைந்துவிடும். அதேபோல மனம் என்பதிவிருந்து எண்ணங்களை ஒவ்வொன்றாக அகற்றினால் மனமென்பது மறைந்துவிடும்.
எனவே மனமென்பது ஒரு மாயமான தோற்றம்தான். எனவே எண்ணங்களைப் போக்கிவிட்டால் மனமென்பது தானாக மறைந்துவிடும். இப்படியாக எண்ணங்களைப் படிப்படியாக அழித்துவிட்டால் மனமும் இல்லாமல் போய்விடும்" என்று எடுத்துரைத்த உளளார்.

இங்கு கூறப்பட்ட ஐந்து நற்குணங்களுக்கும் பலநூறு தீய குணங்களுக்குமிடையே மனிதரின் மனதினுள் வாழாநாள் முழுவதும் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பாரதப்போர் 18‌ நாட்களே நடைபெற்றது. ஆனால் மனிதனுள் நற்குணங்களுககும் தீய குணங்களுக்குமிடையில் வாழ்நாள் முழுவதும் யுத்தம் நடந்துகொண்டே இருக்கிறது.

பாரதப்போரில் கண்ணபிரான் பாண்டவர்கள் ஐவருக்கும் துணையாக இருந்த கௌரவர்களை‌அழித்து,‌ வெற்றியை அடையத் துணைபுரிந்தார்.

அதுபோல் நமது உள்ளத்தில்‌ நிகழும் போரில் இறைவன் துணையுடன் கெட்ட குணங்கள் அனைத்தையும் அழித்து நமது இப்பிறவியின் பேற்றை அடைவோம்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

சமஸ்த லோகா சுகினோ பவந்து.

Monday, February 21, 2022

நாமஸ்மரணையின் மகத்துவம்

பணம் வரும் போகும்(MONEY COMS AND GOES), MORALITY COMES AND GROWS- நன்னடத்தை வரும் வளரும். 

ஆகவே நன்னடத்தையை வளர்த்துக்கொள்ளவேண்டும்.. அதுதான் உயர்ந்த வரப்பிரசாதம். லட்சார்ச்சனை செய்தலும், கோடியர்ச்சனை செய்தாலும் அவற்றால் உங்களுக்குத் தற்காலிகத் திருப்திதான் கிடைக்குமேதவிர முழுமையான ஆத்மானந்தத்தைப் பெறமுடியாது.

மக்கள் பலதரப்பட்ட வழிகளில் பணத்தை விரயம் செய்கிறார்கள். வீட்டுக்குப் பசியுடன் வரும் ஏழைகளுக்கு ஒருபிடி உணவு  கூடக் கொடுக்கமாட்டார்கள். 

ஆனால் யாகங்கள் யக்ஞங்கள் செய்வதற்குக்  கோடிக்கணக்கில் செலவுசெய்கிறார்கள். பணத்தைக் கொண்டு கடவுளைவாங்க முடியாது. 

கடவுள்தான் எல்லாச் செல்வங்களையும் அருள்பவர். கடவுளுக்குப் பணம் தேவைப்படுவதில்லை.. அந்தப் பணத்தை ஏழை எளிய மக்களுக்கு உதவிசெய்யப் பயன்படுத்தவேண்டும். 

அதனால்தான் நமது சாயிநாதன் தன்னிடம் வருபவர்கள் அனைவரையும் வெறும் கையுடன் வரும் படியும் திரும்பிச் செல்லும்போது கைநிறைய இறையருளைக் கொண்டு செல்லும்படி கூறுகிறார்.

நாமஸ்மரணையில் மாத்திரமே ஆத்மதிருப்தி கிடைப்பதாக கூறும் சுவாமி அதனால் இறைவனின் நாமத்தை உச்சரிப்பதில் அக்கறை செலுத்தவேண்டுமென்றும்‌ இக்கலியுகத்தில் நாமஸ்மரணை ‌மூலம் இலகுவாக இறையருளைப் பெற முடியுமெனப் பகர்ந்துள்ளார். 

அதுதான் இறைவனை அடைவதற்கு ஒரே வழி. கடவுளை அவரது திருநாமத்தினால் மட்டுமே எளிதில் அடைய முடியும். 

மகாபாரதத்தில் ஆன்றோர்களும் சான்றோர்களும் நிறைந்த திருதராஷ்டிரனின் அரச சபையில் திரௌபதியின் துகிலைத் துச்சாதனன் பலவந்தமாகக் களைய முற்பட்டபோது, திரௌபதி அவையிலிருந்தவர்களிடமும் சூதாட்டத்தில் தோல்வியடைந்த பாண்டவர்களையும் உதவிக்கழைத்தார். கண்ணபிரானின் பல பெயர்களைக் கூறிக் கதறினாள். இறுதியில் இருதயவாசி என்று அழைத்தார்.. அக்கணமே கண்ணபிரான் துரௌபதியின் சேலையை வளரவைத்து அவரைக் காத்தருளினார். 

உண்மையில் இதயமே கடவுள். கடவுள் இதயத்தில் இருக்கிறார். கடவுள் நமக்குள்ளே இருந்தும் கூட நாம் கடவுளை வெளியிலே தேடுகிறோம்.

பணத்தின் மூலம் வெளியில் உள்ள பொருட்களைத்தான் வாங்க முடியுமே தவிரமுடியுமே தவிரக் கடவுளை வாங்க முடியாது. 
கடவுளை நாம் நமக்குள்ளே தான் தேடவேண்டும். அப்பொழுது உள்ளத்தினுள் உறைந்திருக்கும் இறைவனைக் காணலாம். 

"இறைவனை வெளியுலகில் தேடாதீர்கள். கண்களை மூடிக்கொண்டு உங்களுக்குள் இருக்கும் கடவுளைப் பிரார்த்தனை செய்யுங்கள். கடவுள் உங்கள் முன் தோன்றி வரத்தை அருள்வார். கடவுளின் திருநாமத்தால் அவரை வர்ணிக்கலாம், அறியலாம், அடையலாம். 

இப்படிப் பெயெரை உச்சரிப்பதற்கென்றே நகர சங்கீர்த்தனங்கள் தொடங்கப்பட்டன. நகர சங்கீர்த்தனங்களில் இறைவனுடைய தோற்றங்களைப் போற்றவேண்டிய அவசியம் இல்லை. கடவுளை அளவற்ற ரூபங்களால் போற்றினாலும் பயனில்லை. 

கடவுள் ஆத்மசொரூபமானவர். ஆத்மாவுக்கு உருவம் இல்லை. கடவுளிடம் நீங்கள் யார் என்று யாராவது கேட்டால், நான் ராமர். நான் கிருஷ்ணர், நான் சாயிபாபா என்றெல்லாம் அவர் சொல்ல மாட்டார். சாயி பாபா என்பது இவ்வுடலின் பெயர் மட்டுமே. ராமா என்பதும் உடலின் பெயர். சாயி பாபா என்னும் பெயர் தாய் தந்தையரால் வைக்கப்பட்டது. பெயர் என்பது வைக்கப்பட்டதே. உடன் பிறந்தது இல்லை. உடல் பிறந்தது. ஆனால் அதற்குப் பெயர் இல்லை. பிறந்த உடல் ஒருநாள் அழிந்தே தீரும். உடலுடன் பெயரும் அழிந்து விடும். பிறக்காததும் அழியாததும் ஒன்றே ஒன்றுதான். அது தான் ஆத்மா" 

என்று சாயிநாதன் தனது ஆருளுரைகளில் குறிப்பிடுவது நாமனைவரும்‌ அறிந்த விடயமாகும்.

"சமஸ்த லோகா சுகினோ பவந்து"

உலகங்களனைத்தும் நலமாக இருக்கப்  பிரார்த்திப்போம்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

Sunday, February 20, 2022

நாம் யாரென்பதை விளக்கும் எம்பிரான்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

நாம் பேசும்போது இது என் உடல் என்று கூறுவது வழக்கம்.. ஆனால் நான் தான் உடல் என்று கூறுவதில்லை. 

எனது மனம், எனது உடல், எனது தலை, எனது கை, எனது வாய் என்று கூறுகிறோமே தவிர நான் தான் வாய், நான் தான் கை என்று கூறுவதில்லை. இதிலிருந்தே நாம்‌ நம்மை நமது உடலிலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பது தெளிவாகிறது.

நமது உடல், மனம் ஆகியவை நாமல்ல. அவை கடவுள் நமக்கு அருளிய உபகரணம். அவற்றை நாம் மிகக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். 
எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் ஒற்றுமை இருக்கவேண்டும்.

தெய்வீகமான விடயங்களைப் படிப்பதால் மட்டுமே மகிழ்ச்சியாக இருந்துவிட முடியாது. புத்தகங்களின் பக்கங்களைத் திருப்பும்போது இதயத்தின் பக்கங்களையும் திருப்பவேண்டும். படித்தவற்றை இதயத்தில் பதியவைத்து அவற்றை முழுமையாகக் கடைப்பிடித்தல் அவசியம். அப்பொழுதுதான் புத்தகங்களைப் படிப்பதன் பயன் ஏற்படும். 

வெளியில் நாம் காண்பவை அனைத்தும் கற்பனை தவிர உண்மையில்லை. அனைத்தும் மாயையே. உண்மை என்னவென்று உணர முயலவேண்டும். 

நம்மைச் சுற்றி ஆயிரக்கணக்கான சனங்களைப் பார்க்கிறோம். ஆனால் கண்களை மூடிக்கொண்டால் யாரையும் பார்க்க முடியாது. அதுபோல் நம் அகக்கண்களை மூடியிருக்கும் பொழுது நாம் இறைவனின் வடிவம் என்னும் உண்மை புலப்படுவதில்லை. நாம் இறைவனின் வடிவம் என்பதைப் புரிந்து இறைவனின் வடிவமைத்த சோ....ஹம்.....‌ என்னும் ஹம்ச காயத்திரி‌யை உச்சரித்து இறைவனால் பரிந்துரைக்கப்பட்ட நடத்தையைக் கடைப்பிடித்தால் மாத்திரமே நாம் இறைவனின் வடிவமாக வாழ்ந்து கடைத்தேற முடியும்‌ என்பதை பகவான் ‌வலியுறுத்தியுள்ளார்.

நாம் பிறக்கும் பொழுது பெயருடன் பிறப்பதில்லை.
உலக நடைமுறைப்படியே இவ்வுலகில் நமக்குப் பெயர்கள் வைக்கப்படுகின்றன. எனவே நாம் யாரென்பதை நமது பெயருடன் ‌சம்பந்தப் படுத்தாமல் நாம் உண்மையிலேயே யார் என்பதை உணர முயற்சி செய்யவேண்டும்
பிறக்குமுன்பும் ஆத்மா இருந்தது, பிறக்கும் போதும் நமக்கு ஆத்மா இருந்தது, பிறந்த பின்னும்
 ஆத்மா இருந்தது, நாம் இறந்த பின்னும் ஆத்மா இருக்கும் என்பதையும், ஆத்மா அழியாதது உடல் மாத்திரமே அழியக்கூடியது, நிலையற்றது என்பதை நாம் அனைவரும் உணர்ந்துகொள்ள‌ வேண்டும்.

எனவே நமக்கு இறைவன் கொடுத்த கருவியான இவ்வுடலைப் பயன்படுத்தி பிறவிப் பெருங்கடலைக் கடக்க வேண்டும். மீண்டும் இவ்வுலகில் பிறந்து இன்ப துன்பங்களை அனுபவித்து மீண்டும் இறப்பதைத் தடுக்க வேண்டும்.

செய்யும் கருமங்கள் அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்யவேண்டும். செயல்களைப் புரியும்போது நான் செய்கிறேன் என்ற உணர்வைக் கைவிடவேண்டும். 

வினைபுரிபவரும், புரியும் வினையும், புரியும் வினை அனைத்தையும்‌ இறைவனுடையதே என்ற அர்ப்பணிப்புடன் புரிந்தால் வினைப்பயன்களெதுவும் நம்மைப் பாதிக்காது. 
நல்வினையின் பயன் தங்கச் சங்கிலியென்றும், தீவினைகளின் பலன் இரும்புச் சங்கிலியென்றும் குறிப்பிடும் பகவான் பிணைக்கும் சங்கிலிகள் தங்கமாக இருந்தாலும் இரும்பாக இருந்தாலும் அவை நம்மை மீண்டும் பிறவியுடன் பிணைக்கும் ‌சங்கிலியே என்பதையும் இடித்துரைக்கிறார்.

உண்மையே கடவுள். தர்மமே கடவுள். அமைதியேயே கடவுள். அன்பே கடவுள். 

கடவுளில் வாழுங்கள். அந்த அன்பு நமது இதயங்களில் இருந்துவிட்டால் நம்மால் எதையும் சாதிக்க முடியும். அன்பு என்பது தனிப்பட்ட ஒருவருக்குச் சொந்தமானதல்ல. அது தெய்வீகமானது. 

தான் நம்மீது செலுத்தும் அன்பும், நாம் தன்மீது செலுத்தும் அன்புமே உண்மையான ஐக்கியம் என்று பகவான் கூறுகிறார். கடவுள் ஒருவரே. நமது பிறவியின் குறிக்கோளும் ஒன்றே. 

இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் இவ்வுலகில் நம்மால் எதையும் சாதிக்க முடியும். நாம் இவ்வுலகில் மனிதராகப் பிறவியெடுத்ததன் பலனை அனுபவிக்க முடியும்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

Saturday, February 19, 2022

சாயிநாதன் நமக்குக் காட்டும் வழி

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

எம்பெருமான் தனது அருளுரைகளில் மனிதர்கள் அதர்மத்தைக் கை விடுவதாலும் அதர்மவழியில் நடப்பதாலும் ஏற்படும் தீமைகளைப் பற்றித் தெளிவாக விளக்கியுள்ளார்.

அன்பு, சத்தியம், மனச்சாட்சி, தர்மம் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பது பற்றிப் பேசுவது  மாத்திரமன்றி, நாம் அனைவரும் அவற்றை நமது அன்றாட வாழ்க்கையில் கடைப் பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் எம்பிரான் வலியுறுத்துகிறார்.

மகாபாரதத்தில், துரோணர் தனது சீடனான அருச்சுனன் தனது குருதட்சிணையாகப் பாஞ்சால மன்னன் துருபதனைக் கைதியாக வழங்கவேண்டுமென்று கோரினார் அச்செயலின்மூலம் பாஞ்சால அரசனை இழிவுபடுத்தி அதன்மூலம் பாஞ்சாலனைப் பழிதீர்க்கவும் முனைந்தார். இச் செய்கையின் மூலம்‌ தனது‌‌ குருநாதர் என்ற பதவியைத் துரோணர் இழிவுபடுத்திய அதர்மச் செயலையும்கூட‌ப் பகவான்‌ விளக்கமாகக் கூறியுள்ளார்.

எப்போதும் எல்லா உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்துவது அவசியம். பழிவாங்கும்‌ எண்ணத்தை அடியோடு அகற்றிவிட வேண்டும் என்றும்‌ அன்பின்மூலம்  எதையும் சாதிித்து விடலாம் என்பதையும் எடுத்துரைத்துள்ளார்.


எப்பொழுதும் உண்மையையே பேசவேண்டும் என்றும் சத்தியத்தைவிட உயர்ந்த தர்மம் எதுவும் இல்லை என்பதால் சத்தியத்தின் வடிவமே  இறைவன் என்றும் உரைக்கிறார்.


எப்பொழுதும் இறைவனின் திருப்பெயரை உச்சரிக்குமாறும் வழிபாட்டுக்கென வீண்செலவு செய்வதற்குப் பதிலாக உணவற்றவர்களுக்கு உணவு அளித்திடுமாறும், உடையற்றவர்களுக்கு உடையை வழங்குமாறும், பிச்சயிடும்போதுகூட  பிச்சைபெற வந்திருப்பவர் இறைவனே என்ற மன நிலையுடன் இறைவன் நாமத்தை  உச்சரித்தவாறு  ‌பிச்சையிட வேண்டுமென்றும் விளக்கமளிக்கிறார்.

" மனம்தான் அடிமைத்தனத்துக்கும் வீடுபேற்றுக்கும் காரணம். எதை மறந்தாலும் கடவுளின் திருப்பெயரை மாத்திரம் மறக்கக்கூடாது. இறைவனின் திருநாமத்தை உச்சரிப்பதால் துன்பம் விலகும். அமைதியின்மை, கோபம், துன்பம், துயரம் அனைத்தையும் கடக்க இறைவனின் நாமம் ஒன்றே போதுமானது. 

காமம், குரோதம், மோகம், கோபம் போன்ற அனைத்துமே நரகத்துக்கு இட்டுச் செல்பவை.

கோபமுடைய மனிதனை நம்பி எந்தவேலையையும் கொடுக்கக்கூடாது. அவனிடமிருந்து உறவினர்கள் கூட விலகிவிடுவார்கள். கோபம் , பொறாமை ஆகியவை நம்மை அணுகவிடக்கூடாது. 

எப்பொழுதும் அன்புவடிவமான கடவுளின் நாமத்தை உச்சரித்தவண்ண்மே இருக்கவேண்டும். 

இவ்வாறு அமைதியை அனைவரும் கடைப்பிடித்தால் நாடும் நாட்டு மக்களும்  வளம்பெறமுடியும். நாட்டு நலனை விரும்புபவர்கள் எப்பொழுதும் அன்புடன் வாழவேண்டும். 

யாருக்கும் எவ்வித துன்பமும் தராமல் வாழவேண்டும். உலகமனைத்திலும் அனைவரும் சுகமாக வாழவேண்டுமெனப் பிரார்த்திக்க வேண்டும். 
பஜனைகளின் முடிவில் "சமஸ்த லோகா சுகினோ பவந்து" என்பதைச் சொல்லவேண்டும்.

எனவே எப்பொழுதும் அன்புடன் கடவுளை நினைக்கவேண்டும். ஏனெனில் அன்புதான் உலகைக் காக்கிறது. மனிதர்கள் அன்பெனும் பாதையை விட்டு விலகி வாழவே கூடாது. 

பிறர் பரிகசிக்கிறார்கள், ஏளனம் செய்கிறார்கள் என்று அன்பு செலுத்துவதையும்‌ சத்தியத்தைக் கடைப்பிடிபதையும் கைவிடாதீர்கள்.

அன்பு செலுத்தியும், மன்னித்தும் வாழ்வதே சிறப்பான வாழ்க்கை. உங்களுக்கு யாராவது துன்பம் செய்தாலும் அவர்கள் மீது கோபப்படாமல் அன்பு செலுத்த வேண்டும்.

கடவுள் தான் துன்பங்களையும் தருகிறார். சந்தோசத்தையும் அவரே அளிக்கிறார். எல்லாச் சந்தர்ப்பங்களிலும் காப்பது கடவுள்தான். 

எல்லாம் கடவுள் எண்ணப்படியே நடைபெறுகின்றன. அதனால் எல்லாவற்றையும் கடவுளுக்கென அர்பணம் செய்யவேண்டும். எவராவது பழி சொன்னாலும் அதையும் கடவுள் செய்கிறார் என்றே நம்பவேண்டும். 

உங்களுக்கு நடப்பதெல்லாம் கடவுளின் பிரசாதமே. செய்யும் செயல்கள் எல்லாம் கடவுளுக்கு மகிழ்ச்சியுண்டாக்கவே செய்யவேண்டும். 

இவ்வாறு நடந்துகொண்டால் முக்தி நிச்சயம்.
சம்சாரம் என்னும் இக்கடலில் நாம் மிதக்கும் பொருள்போல் இருக்கவேண்டும். அதில் முழ்கிவிடக்கூடாது. 

அன்பெனும் அமுதம் கோபம், பொறாமை எனும் அரக்கர்களை அழித்துவிடும். எப்பொழுதும் எது நடந்தாலும் அது கடவுள் சங்கல்ப்பப்படி நடப்பதாகவே நினைத்துக்கொள்ளவேண்டும். 

பஜனை செய்யுங்கள். கடவுளின் நாமத்தை உச்சரியுங்கள். பஜனை மிக முக்கியமானது. கடவுளின் திருப்பெயரை உச்சரிப்பதே பஜனையின் முக்கிய அம்சம். பலர் ஒன்றுசேர்ந்து நாம ஜெபத்தில் ஈடுபடும்போது கடவுளின் மனம் உருகிவிடும். 

அதிகாலையில் நகர சங்கீர்த்தனம் செய்யும்போது அதைக் கேட்டுக் கண்விழிப்பவர்கள் மனமகிழ்ச்சியடைவர்." 

என்று பகவான் தனது அருளுரைகளில் திருவாய் மலர்ந்தருளியுள்ளதை அறிந்துள்ள நாம் அனைவரும் எம்பெருமானின் சத்திய வாக்கைக் கடைப்பிடித்து உய்வடைவோம், உயர்வடைவோம்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

Friday, February 18, 2022

இம்மையிலும் மறுமையிலும் இன்பம் பெறும் வழி.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

நமது வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள்‌அனத்துக்கும் நாம்‌ தான் காரணம். நமது வாழ்க்கையில் நடைபெறும் நல்லதோ கெட்டதோ அனைத்துக்கும் பிறர் காரணமல்ல.
நாம் இப்பிறவியிலோ அல்லது இதன் முன் கிடைத்த பல பிறவிகளிலோ செய்த கர்மவினைகளின் பலனைத்தான் நாம் இப்பிறவியில் அனுபவிக்கிறோம்.

இரண்டு நாட்களின்முன் நாம் காலை உணவாக என்ன சாப்பிட்டோம் என்பதே நமக்கு நினைவில்லை. அப்படியிருக்க, முற்பிறவிகளில் நாம் செய்தவற்றை எவ்வாறு நினைவில் வைத்திருக்க முடியும் என்று பகவான் கூறுகிறார்.

மேலும் எதை மறந்தாலும் கடவுளின் திருப்பெயரை மாத்திரம் மறக்கக்கூடாதென்றும்‌, கடவுளின் திருநாமத்தை உச்சரிப்பதால் துன்பங்கள் விலகும் என்றும் சொல்லும் பகவான் கலியுகத்தில் வாழும் நாம் அனைவரும் யாகம், யோக நிலை  போன்றவற்றைக் கடைப்பிடிப்பதை விட நாமஸ்மரணை அதாவது இறைவனின் திருநாமத்தை உச்சரிப்பதன் மூலமாக மிக எளிதாக இறைவனின் அருளைப் பெறலாம் என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளார். 

அமைதியின்மை, கோபம், துன்பம், துயரம் அனைத்தையும் கடக்க இறைவனின் நாமம் ஒன்றே ஒரேவழியென்றும் கூறும் எம்பிரான் காமம், குரோதம், மோகம், கோபம் போன்ற அனைத்துமே ராட்சச குணங்களென்றும், நம்மனதில் கோபத்தை அனுமதித்தால் அது கோபப்டுபவரை மாத்திரமன்றி அவரைச் சூழவிருப்போரையும் அழிவுப் பாதையில் தள்ளிவிடுமென்றும் கூறியுள்ளார். 
கோபமும் ஆணவமும் பேராசையும் உள்ளவர்களை நம்பி எந்த வேலையிலும் ஈடுபடக் கூடாதென்றும், அப்படியானவர்களிடமிருந்து அனைவரும் விலகிவிட. வேண்டுமென்றும் கூறியுள்ளார். 

மேலும் நாமஸ்மரணை அதாவது ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவரும் அவர்கள் கடைப்பிடிக்கும் மதத்தில் கூறப்பட்ட அவர்களுக்குப் பிடித்த இறைவனின் திருநாமத்தை உச்சரிப்பதன் அவசியும் அதனால் ஏற்படும் பலனையும் தெளிவாக விளக்கியுள்ளார்.

கோபம் , பொறாமை ஆகியவை நம்மை அணுகவிடவே கூடாது. எப்பொழுதும் அன்பின் வடிவமாகவே இருக்கவேண்டும். இவ்வாறு அனைவரும் அன்பையும் அமைதியையும் கடைப்பிடித்தால் அனவரும் வளமாக வாழமுடியும்.

தனது நலத்தையும் பிறரின்  நலனையும் விரும்புபவர்கள் எப்பொழுதும் அன்புநிறைந்த மனதுடன் வாழவேண்டும். 
யாருக்கும் எவ்வித துன்பமும் ஏற்படுத்தாமல் வாழவேண்டும். 

உலகத்திலுள்ள அனைவரும் சுகமாக வாழவேண்டுமெனப் பிரார்த்திக்க வேண்டும். 

அதற்காகவே அனவரும்
 "சமஸ்த லோகா சுகினோ பவந்து" 
என்று முடிந்தவரை உச்சரித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

அன்புடன் கடவுளை நினைக்கவேண்டும். 
ஏனெனில் இந்த அன்புதான் உலகைக் காக்கிறது. இறைவன் அன்புவடிவானவர்.

மனிதர்கள் எவருமே அன்பெனும் பாதையை விட்டு விலகி வாழவே கூடாது. பிறர் பரிகசிக்கிறார்களே, ஏளனம் செய்கிறார்களே என்று ஒருபோதும் கடவுள் நம்பிக்கையையும் பிறர்மீது செலுத்தும் அன்பையும் சத்தியத்தையும் கைவிடக் கூடாது.
அன்புடனே எப்பொழுதும் வாழவேண்டும்.

கோபம் கேடு விளைவிக்கும். ஆகவே அன்புடன் வாழுங்கள். உங்களுக்கு யாராவது துன்பம் செய்தால்கூட அவர்கள் மீது கோபப்படக்கூடாது. எல்லாமே கடவுளின் செயல் என்பதையும் கடவுள் நமது நன்மைக்காகவே அவ்வாறு செய்கிறார் என்பதையும் ‌புரிந்துகொள்ளவேண்டும். 

கடவுள்தான் எல்லாவற்றையும் செய்கிறார். கடவுள் தான் துன்பங்களையும் தருகிறார். சந்தோசத்தையும் அவரே அளிக்கிறார். எல்லா நேரங்களிலும் காப்பாற்றுவதும் கடவுள்தான். தண்டிப்பதும் கடவுள்தான். 

எல்லாம் கடவுள் எண்ணப்படியே நடைபெறுகின்றன. அதனால் எல்லாவற்றையும் கடவுளுக்காக அர்பணம் செய்யவேண்டும். 

அதனால்தான் நம் செயல்களனைத்தையும் பிரம்மார்ப்பணம் எனறு இறைவனுக்கு அர்ப்பணிப்பதுடன் நமக்கு நடப்பதெல்லாம் நமது நன்மைக்கான கடவுளின் பிரசாதமே‌ என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு நடந்துகொள்பவர்கள்  இவ்வுலகிலும் மறு உலகிலும் மகிழ்ச்சியும், அமைதியும், முன்னேற்றமும் பெறுவது நிச்சயம். 

எனவே உலகம் அனைத்தும் நலமாக வாழ வாழ்த்துவோம்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

Thursday, February 17, 2022

சத்தியத்தின் வலிமை

  ஓம் ஸ்ரீ சாயி ராம்

நமது சாயிநாதன் அன்புடனும்‌ பயமின்றியும் நாம் வாழவேண்டியதன் ‌அவசியம் பற்றிப் பலமுறை தனது அருளுரைகளில் ‌திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.
அவற்றின் சாரத்தை இன்று படித்து உணர்ந்து கொள்வோம்.

"தன்மீதும், கடவுளின்மீதும் திடமான நம்பிக்கை‌  வைத்திருக்கும் மனிதர்களால்  வாழ்க்கையில் எதைவேண்டுமானாலும் சாதித்து விடமுடியும்.

சத்தியத்தைக் கடைப்பிடித்து வாழும் ஒருவர் எதற்காகப் பயப்பட வேண்டும்? சத்தியம் எதைக்கண்டும் அஞ்சுவதில்லை.

வாய்மையே வெல்லும்‌ என்பது ஆன்றோர் கூற்று. 

சத்தியத்தைப் பின்பற்றுபவர்கள்  அன்பபைக் கடைப்பிடிப்பார்கள். என்னுடைய உரைகளில் சத்தியத்தையும், அன்பையும் உரையின் ஆரம்பத்திலும், முடிவிலும் வலியுறுத்திக் கூறிவருகிறேன். 

ஏனென்றால் சத்தியமும் அன்பும் ஒவ்வொருவரின் உயிருக்குச் சமமானவை. இவ்விரண்டும் மூச்சை உள்வாங்குவதும், வெளிவிடுவதும் போன்றவை. அன்பும் சத்தியமும் இல்லாமல் மனிதர்களால் உயிர் வாழ முடியாது. 

 சோ……ஹம்…., என்னும் ஹம்ச காயத்திரி‌மந்திரத்தை எடுத்துக்கொள்வோம்.

 சோ…. என்பது உள்வாங்கும் மூச்சு. அது சத்தியம். ஹம் என்பது வெளிவிடும் மூச்சு. அது எனவே ஒவ்வொரு சுவாசத்தின்போதும் சத்தியத்தை உள்வாங்கி அன்பை வெளிப்படுத்துங்கள். இளம்வயதிலிருந்தே சத்தியத்தையும் அன்பையும் வளர்த்துக் கொள்ளுங்கள். 

சத்தியத்தை நல்வழியில் பயன்படுத்தவேண்டும்.  

அந்நாளில் மன்னர் அரிச்சந்திரன்‌ சத்தியத்தைக் கடைப்பிடித்தார். பல‌ இன்னல்களின் மத்தியிலும் அவர் கடைப்பிடித்த சத்தியத்தின் பாதையிலிருந்து அவரை எந்தச் சகதியாலும் மாற்றமுடியவில்லை. எனவே  இறுதியில் சத்தியம் அவரை வெற்றியடையச் செய்தது.

யாராலும் அவரைச் சத்திய நெறியிலிருந்துமாற்ற முடியவில்லை. 

கலியுகத்தில் வாழும் நாம் எந்தச் சந்தர்ப்பத்திலும் சத்தியத்தைக் கைவிடக்கூடாது.  மேற்கொள்ளும் கடமைகள் அனத்திலும் சத்தியம் உங்களுக்குத் துணையிருக்கும். எனவே சத்தியத்ததையும் அன்பையும் எப்படியான சூழ்நிலையிலும் கைவிடக் கூடாது.

சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை இந்த நான்கிலும் ஹிம்சை என்கிற வன்முறை சிறிதுகூட இல்லை. ஆகவே சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை இந்த நான்கையும் முழுமையாக அனுசரித்தால், அஹிம்சை என்கின்ற கோட்பாடு உங்களிடம் முழுமையாக வெளிப்படும். 

இவ்வுயரிய கோட்பாடுகளைக் கடைப்பிடிக்கத் தவறுவதால்தான் உலகின் பல இடங்களில்வன்முறை தலைவிரித்து ஆடுகிறது. 

வன்முறையானது பத்மவியூகம் போன்று எங்கும் அனைவரையும் திணறடிக்கிறது. 

இறைவனின் சந்நிதானமே பயமற்ற இடம். இறைவனின் முன் பயம் முழுமையாக அகன்றுவிடுகிறது. நீங்களே இறைவன் என்பதை உணர்ந்து உங்களை அன்பினால் நிறைத்து விட்டால் உங்கள் எவருக்கும் பயமென்பதே ஏற்படாது."

ஓம் ஸ்ரீ சாயி ராம்.


Wednesday, February 16, 2022

ஓரே விடயத்தைப் பலமுறை கூறுவதைப் பற்றிய பகவானின் விளக்கம்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

எம்பெருமானின் கருவியான அடியேன் சில விடயங்களைச் சுருக்கமாக் கூறாமல் விரிவாகவும் திரும்பத் திரும்பவும் கூறுவதாக உணர்கிறேன்.

திரும்பத்திரும்ப ஒரேவிடயத்தைக் கூறுவதைப்பற்றி நமது சாயி பகவான் தனது அருளுரையின்போது தெளிவாக விபரித்துள்ளார்.

அந்த அருளுரையின் விபரம் பின்வருமாறு உள்ளது:

"பல விடயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும். சொல்வதை நன்றாகப் புரிந்து கொள்ளும் வரை சொன்னதைச் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆகவேண்டும். 

தினமும் காலையில் சாப்பிடுகிறோம். எனவே மாலையில் எதற்குச் சாப்பிடவேண்டுமென எவரும் நினைப்பதில்லை. ஏனென்றால் உண்ட உணவு ஜீரணமாகிவிட்டு மீண்டும் பசியெடுக்கும். எனவே மீண்டும் உண்ணவேண்டி ஏற்படுகிறது. 

ஒருமுறை கழுவிய முகத்தைச் சிறிது நேரத்தின்பின் மீண்டும் கழுவுகிறோம். 

அதுபோலத்தான் ஓருமுறை கேட்ட விடயத்தை மீண்டும் மீண்டும் கேட்கும் பொழுது அவ்விடயம் மனதில் நன்கு பதியும். 

சொல்லும் விடையங்கள் மனதில் நன்கு பதித்து, நடைமுறைப்படுத்தும் பொழுது மீண்டும் கேட்கவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுகிறது. 

ஆகவே ஒன்றைப் புரிந்துகொள்ளும் வரை சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லவேண்டி இருக்கிறது. 

சிறு குழந்தைகள் ஆரம்பத்தில் ஏ பி சீ டீ யைக் கற்றுக்கொள்கிறார்கள். உதாரணமாக மில்க் (MILK) என்பற சொல்லை குழந்தை மீண்டும் மீண்டும் உச்சரித்தால்தான் அது அக்குழந்தையின் மனதில் பதிகிறது. அப்படி உச்சரித்த பின்னர் தான் அதன் பொருள் குழந்தைக்கு நன்கு விளங்குகிறது. ஆகவே கூறப்படும் விடயங்களின் அர்த்தம் புரியும் வரை, சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லவேண்டும்.. பல விடயங்களைத் திரும்பத்திரும்பச் சொன்னபோதிலும் புதியன போன்றே தோன்றுவது இயற்கையான விடயமாகும். 

காயத்திரி மந்திரத்தைப் பற்றிப் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஒருமுறை சொல்வதற்கும் இன்னொருமுறை சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அதனால் சுவாமியின் வார்த்தைகளும் புதிதானவை போல் தோன்றும்.

ஒவ்வொரு நொடிப்பொழுதும் புதிதானவை என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இறைவன் நித்தியமானவர். அதுதான் தெய்வீகத்தின் தன்மை. அனைவரும் எப்பொழுதும் தெய்வீகத்தில் திளைத்திருக்க வேண்டும். என்றும். புதுப் பொலிவுடன் திகள வேண்டும். பழயதையும், முடிவடைந்தவற்றையும் மனதில் பதித்துக்கொண்டிருக்கக் கூடாது. 

எல்லோரும் எப்பொழுதும் ஆனந்தமாக இருக்கவேண்டும். தெய்வீகத்தின் அடையாளமாக வாழவேண்டும். 

இறைவனுடன் ஒன்றியிருப்பதுதான் உண்மையான ஆனந்தம். HAPPINESS IS UNION WITH GOD. இறைவனுடன் ஒன்றிணையும்பொழுது மகிழ்ச்சி உண்டாகிறது. தெய்வீகச் சிந்தனையும் தெய்வீக அனுக்கிரகத்தையும்‌ பெற்றவர்களின் முகம் கலகலப்பாகவும், ஆனந்தமாகவும் காணப்படுகிறது. 

அவர்களின் முகத்தில் தெவீகக் களை தெரியும். தெய்வீக அம்சத்தின் கதிர் அவர்கள்மீது விழுந்திருப்பது தெளிவாகத் தெரியும்.

தெய்வத்தின் அருளுக்குப் பாத்திரமாகவேண்டுமெனில் தெய்வத்தின்மீது ஆழ்ந்த நம்பிக்கையும் ஈடுபாடும் இருக்கவேண்டும்.

 நம்பிக்கை, அன்பு ஆகிய இரண்டும் இருந்தால்தான் நாம் தெய்வீகத்தை அனுபவிக்கலாம்.  இந்த நம்பிக்கையும் அன்பும் இருந்தால் நம்மால் எதையும் சாதிக்கமுடியும். 

எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். எங்கு வேண்டுமானாலும் போகலாம். 

காட்டிலோ, கிராமத்திலோ, நகரத்திலோ அல்லது கண்காணாத தேசத்திலோ, எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். 

உடலின் உள்ளேயும் வெளியேயும‌ மேலும், கீழும், உங்களைச் சுற்றிலும் இறைவன் இருக்கிறார் என்ற நம்பிக்கை இருந்தால், எங்கு வேண்டுமனாலும் இருக்கமுடியும், செல்லமுடியும். 

இப்படிபட்ட நல்ல உணர்வுகளை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். 

அன்பின் வடிவங்களே, தீய பழக்கங்கள் மற்றும் தீய செயல்களை விட்டு, நல்லெண்ணங்களை வளர்த்துக்கொண்டு, நற்செயல்களுக்கு இட்டுச்செல்லும் நல்லுணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்."

பகவான் தனது அருளுரைகளில் திருவாய்மலர்ந்தருளியுள்ள விடயங்களை நன்கு பரிந்துகொண்டு அவற்றை  நமது  வாழ்க்கையில் கடைப்பிடித்து இம்மையிலும் மறுமையிலும் உய்வடைவோம்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.



Tuesday, February 15, 2022

மோட்சம் பற்றிய எம்பெருமானின் விளக்கம்

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

சாயிபகவான் தனது கீதையில் யோகா என்ற வார்த்தையைப் பலமுறை பயன்படுத்தியுள்ளார். 

மேலும‌ சில இடங்களில் வைராக்கியம் எனப்படும் பற்றற்ற தன்மையைப் போற்றியுள்ளார்.  

வழிபாட்டின் மூலம் ஆன்மீகப் பேரின்பத்தின் உச்ச நிலையை அடையமுடியும் என்பதையும்‌ விரிவாக விளக்கியுள்ளார்..

யோகம் என்பது. இறைவனிடம் பூரண சரணாகதி அடைதல் என்பதே பகவானின் விளக்கம்.

நல்ல செயல்கள் மற்றும் நல்லொழுக்கங்களைக் கடைப்பிடித்தல் என்பவற்றை முக்கிய உண்மைகளாக அடிக்கோடிட்டுக் காடடியுள்ளார்.

துறவற‌நிலை விரும்பத்தக்கதான போதிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையினர் மட்டுமே அதைப் பயிற்சி செய்ய முடியுமென்றும்,

இவ்வுலக  வாழ்க்கை மற்றும் அதன் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள  அனைவரும் அவரவர் சுயதர்மத்தைப் பின்பற்றுவதே உயர்ந்த தர்மம் என்றும்,‌

எந்தச் செயல் முறை அங்கீகரிக்கப்பட்டது என்பதை முடிவு செய்யதைப்பற்றி மனிதரிடம் மனப்போராட்டமுள்ள போதிலும், தகுதியான செயல்களே அங்கீகரிக்கப் படுவதாகவும் பகவான் தனது அருளுரைகளில் கூறியள்ளார்.



 "மன்மனா பவ மத்பக்தோ மத் யஜீ மாம் நமஸ்குரு மாமேவைஷ்யஸி ஸத்யம் தி ப்ரதிஜாநே ப்ரியோ சி மே." 

"ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ அஹம் த்வாம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷ-யயிஷ்யாமி மா"  

என்ற சுலோகங்களில்

 “ உங்கள்  எண்ணங்கள் அனைத்தையும் என்மீதே நிலைநிறுத்துங்கள்.என்னிடம் பக்தியுடன் இருங்கள்.. என்னை வழிபடுங்கள்  என்னிடம் சரணடையுங்கள். இதுவே எனது போதனை. இதுவே எனது அருள் மொழி.. இதுவே என்னை அடையும் வழி. இதுவே நான் உங்களுக்கு உணர்த்தும்  உண்மை. 

என்னைச் சரணடையும் அனைவரையும் கர்மவினைகளால் ஏற்படும் பாப புண்ணிய பலன்களிலிருந்து விடுவித்து மோட்சமாகிய நற்கதியருள்வேன்." 

எனறு உறுதியளித்ததுள்ளார்.

மோட்சமென்பது உடலைத் துறத்தல் அல்லவென்றும்  உடலாலும் உள்ளத்தாலும் தன்னிடம் சரணடைந்து செயல்கள் அனைத்தையும் பலனை  எதிர்பார்க்காமல் திரிகரண சுத்தியுடனும், ஆற்றும் கர்ம பலன்கள் நல்லதாகவோ கெட்டதாகவோ இருந்தாலும் சம நோக்குடன் ஏற்று,  இறைவனிடம் அர்ப்பணித்து வாழ்வைத் தொடர்வதே மோட்சமென்றும் பகவான் தனது அருளுரைகளில் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.
,



"


Monday, February 14, 2022

பிரணவமந்திரம் பற்றிய பகவானின் விளக்கம்

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

பிரணவமந்திரமான ஓங்காரத்தைப் பற்றி நமது சாயிபகவான் தனது அருளுரைகளில் தெளிவாக விளக்கியுள்ளார்.

ஓம் என்பதற்கு அருள்விளக்கம் அளிக்கும்போது ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் மகத்துவத்தை மாத்திரமன்றி இம் மகத்துவமான மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டுமென்றும் விளக்கமளித்து அருளியுள்ளார்.


' ஓம் ' என்ற இரண்டு‌ எழுத்துக்களைக் கொண்டு‌ உச்சரிக்கும் போது அது ஒரு பதம் அதாவது சாதாரணச் சொல்லாக இருப்பதைக் குறிப்பிடும் எம்பிரான், இரண்டு எழுத்துக்களைக் கொண்டு பலகாலம் தாங்கள் உச்சரித்தும்கூட எதிர்பார்த்த பலன்கள்‌ கிடைக்காதது ஏன் எனறு‌ பல பக்தர்கள்  தன்னிடம் கேட்டதையும், அதற்குப் பதிலளிக்கும் போது, அ, உ, ம்‌‌ ஆகிய அகார உகார மகாரங்களைக் கொண்டதே பிரணவ மந்திரம் என்று ‌தான்‌ அவர்களுக்கு விளக்கமளித்ததையும், OM என்று உச்சரிக்காமல் AUM  என்று உச்சரித்தால் மாத்திரமே பிரணவ மந்திரம் பலனளிக்குமென்று கூறியருளியதையும், பிரணவத்தை AUM என்றே உச்சரிப்பது அவசியம் என்றும் தனது அருளுரைகளில் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.

இறைவன் மனிதனாக அவதாரமெடுக்கும்போது‌ அவரின் வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் அனைத்துமே சத்தியமாகும். அவரது செயல்கள் அனைத்துமே தர்மமாகும்.
அதனால்தானல்லவா நமது கலியுக அவதாரதாதின் பெயரே சத்தியம் என்று வழங்கப்படுகிறது.

எனவே எம்பெருமான் கூறிய‌ பிரணவ உச்சரிப்பும்
 சத்தியமானது.

 AUM என்ற பிரணவமே பிரபஞ்சத்தை நிறைத்திருப்பதுடன் பிரபஞ்சமே ஓங்காரத்தின் வடிவம் என்றும் எம்பிரான் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.

ஒருநாள் பகவான் பிரசாந்தி  நிலையத்தில் மாணவர்கள் மத்தியில் தரிசனமளித்தபோது மாணவர்கள் கண்களை மூடியபடி பிரணவத்தை உச்சரித்தனர். அப்பொழுது ஒரு மாணவன் கண்களை மூடாமல் பகவானின் திருவுருவத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். அவனிடம் பகவான், "பிரணவ சொரூபமே உங்கள் அனைவரின்‌முன் காட்சியளிப்பதை உணராமல் எல்லோரும் கண்களை மூடியபடி எதனைத் தரிசிக்கிறார்கள்" என்று 'தானேபிரணவஸ்வரூபம்‌'  என்பதைத் தனது திருவாயாலேயே அறிவித்ததும்‌  அனைவரும் அறிந்த விடயம்.

சாயிநாதன் தனது பிரணவ மந்திரம் பற்றிய அருளுரையில்

 " பிரணவம் எங்கும் நிறைந்தது.‌பிரணவம் இல்லாத இடமேயில்லை. பிரணவம் இல்லாத காலமென்றும் ஒன்றில்லை.‌ பிரணவமில்லாமல் ‌உயிர்வாழ்க்கையில்லை. பிரணவமில்லாத இடம் மனித உடலில் எதுவுமில்லை. பிரணவமே எல்லா ஒலிகளுக்கும் மூலம். பிரணவமே பிரமனின் சொரூபம்.
பிரணவமே ஓங்காரம். பிரம்மம் எங்கும் நிறைந்திருப்பது போல் பிரணவம் எங்கும் நிறைந்துள்ளது. அதேபோன்று ஆத்மாவும் பரப்பிரமத்தின் சொரூபமாகும். எனவே பிரணவமான ஓங்காரம், பரப்பிரம்ம், ஆத்மா என்பவை ஒன்றே அல்லாமல் வெவ்வேறானவையல்ல.' 

என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

Sunday, February 13, 2022

உண்மையான ஆத்மாநந்தம்

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

நமக்குள்ளே இருக்கும் தெய்வீக இயல்பை நாம் புரிந்து கொள்ளாமல் இருப்பதால்தான் தேவையற்ற துன்பங்களுக்கு உட்படுகிறோம், சங்கடப்படுகிறோம், அவமானப்படுகிறோம். 

நம்மை நாமே பாவிகள் என்று பழித்துக்குள்ளுதல் நமது தெய்வீகத் தன்மையல்ல.  அடிப்படையில் நாம் தெய்வீகத் தன்மையுடைய வர்கள்.


ஒருமுறை பிரசாந்தி நிலையத்தில் மாணவர்களுடன் உரையாடும்போது பகவான் மாணவர்களைப் பார்த்து      ‌" நான் கடவுள் என்பதை நீங்கள் அனைவரும் நம்புகிறீர்களா?" எனக் கேட்டார்.

மாணவர்கள் அனைவரும் ஆமாம் சுவாமி என்று பலமாகக் கூறினர்.

அதற்குப் பகவான் "நான் இப்போது ஒரு மந்திரத்தைக் கூறுகிறேன். அதை ‌நீங்களனைவரும் எப்பொழுதும் கூறவேண்டும்" என்று கூறியபின் தனது வசீகரம் சிரிப்புடன் " நான் இந்த உடலல்ல, நான்‌‌ இறைவன், நான் இறைவன் என்று தொடர்ந்து கூறிக்கொண்டேயிருங்கள்" எனறு ஆணித்தரமாகக் கூறினார்.

எம்பெருமானின் இவ்வார்த்தைகளிலிருந்தே  நாம் அனைவரும் இறைவனின் சொரூபங்களென்பது புரிகிறதல்லவா.

மேலும் தான் பூரண அவதாரமென்பதையும் நாம் அனைவரும் அம்சாவதாரங்கள் என்பதையும் தனது அருளுரைகள் பலவற்றில் எம்பெருமான் எடுத்துரைதாதுள்ளார்.

மேலும் நாம் அனைவரும் இறைவனிடமிருந்தே வந்தவர்கள் என்பதையும் இறைவனையே சென்றடைய வேண்டுமென்றும் பலமுறை பகர்ந்துள்ளார்.

மேலும் தன்னுடைய சங்கல்பமின்றித் தன்னை நினைக்கக்கூட முடியாது என்றும் கூறியுள்ளார்.

பகவான்  கொடுத்துள்ள அறிவையும், மனவலிமையையும் பயன்படுத்தி நாம் செயல்பட வேண்டுமென்றும், உலகம், வாழ்க்கை பற்றிய உண்மைகளை நாம் உணர்ந்து, மீண்டும் மீண்டும் பிறந்து இறக்காமல் இறைவனை அடையும்‌முயற்சியில் ஈடுபடவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

நமது முயற்சிகளை இறைவனின் வழிகாட்டலின்படி மேற்கொள்ள வேண்டுமென்றும்,  நம்முடைய முயற்சியில் கவனம் செலுத்தாமல் புலன்களையும், புலன்கள் செல்லும் வழியில் மனதையும், மனவோட்டத்தின்படி நாமும் அலையந்துகொண்டிருந்தால் பலன் ஏதும் கிடைக்காது, நம்மைச் சீர்படுத்திக்கொண்டால் மட்டுமே நமக்கு வீடுபேறு கிடைக்கும். என்றும் கூறுகிறார்.

பிறப்பு வாயிலாக நாம் நமது பயணத்தை எங்கு தொடங்கினோமோ அதே இடத்திற்கு மீண்டும் நாம் செல்லத்தான் வேண்டும். அது தவிர்க்க இயலாத ஒன்றாகும். அந்த இடமே இறைவனாகும். 

ஒரே ஒரு சூரியன்தான் உள்ளபோதிலும் அவர் கோடிக்கணக்கான குளங்கள், கிணறுகள், பானைகள் போன்றவற்றுள் பிரதிபலிக்கிறார். அதைப்போலத்தான் தனி மனித ஜீவிகள் அனைவரும் இறைவனுடைய பிரதிபலிப்பாக இருக்கிறார்கள். 

ஒவ்வொருவருக்குள்ளேயும் ஆத்மா இருக்கிறது. ஒவ்வொருவரின் இதயத்துக்குள்ளும் சுவாமி பிரகாசித்துக்கொண்டிருக்கிறார். இதனை உணர்தலே உண்மையான ஆத்மாநந்தமாகும் என்று வலியுறுத்தும் நமது சாயிநாதன், நமக்குள் இறைவன் இருக்கிறார் என்பதை உணர்ந்துவிட்டால் அதுவே நமது பிறவிப்பிணியிலிருந்து விடுபடும் வழியாகும் என்றும் வலியுறுத்துகிறார்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

Saturday, February 12, 2022

கலியுக அவதாரத்தின் சனாதன தர்மம்

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

பகவான் கூறுகிறார்:

"நீங்கள் எதற்கும் பயப்படவேண்டாம். நான் இருக்கிறேன். என்னைப் பின்பற்றி நடவுங்கள். இறைவன் உங்களுக்கு எபொழுதும் உதவி புரியவே உங்களைச் சுற்றியும், உங்கள் மேலும்,  கீழும், உஙகளின் உள்ளேயும், வெளியேயும் உறைந்துளாளார்.

கடவுள் ஒவ்வொரு நொடிப்பொழுதும் பக்கபலமாக இருந்து நிலையான ஆனந்தத்தை அளித்துக் கொண்டிருக்கிறார். 

ஆகையால் எக்காரணத்தைக் கொண்டும் எவரும் மனத்தளர்ச்சி அடையலாகாது. உண்மையைச் சொல்லப்போனால் மனிதன் மனிதனல்ல, மனிதன் தெய்வமே. 
இதை உணர்ந்து கொள்ளுங்கள்.

உடல்மீது பற்றுக் கொள்ளாமல் உடலைக் கடவுள் தந்த கருவியாக மாத்திரமே உபயோகித்துக் கடமையாற்றுங்கள். கடமையாற்றுவதற்கே உடல் வழங்கப்பட்டுள்ளது. 

செய்யும் செயல்கள் அனைத்தையுமே  சுயநலம் சிறிதுமின்றி, செய்யும் செயல்களின் பலனை‌எதிர்பாராமல்‌ இறைவனுக்கு‌‌ அர்ப்பணமாகவும் சமுதாயத்தின் நலன்கருதிய சேவையாகவும் செய்யுங்கள். சமூக முன்னேற்றத்துக்காகப் பாடுபடுங்கள். திக்கற்றவர்கள் மற்றும் துயரப்படுபவர்களின் துயரைத் துடைக்கச் சேவை செய்யுங்கள். 

எவரிடமும் எக்காரணம் கொண்டும் வெறுப்புக் கொள்ளாதீர்கள். கடவுளை நேசியுங்கள். உங்களுக்குப் பிடிக்காதவரொருவரைச் சந்திக்க நேரும்போது அவரிடம் வெறுப்பாகப் பேசாதீர்கள். அவரை உங்கள்மேவ் மேலும் வெறுப்படையச் செய்யாதீரகள்  அவரிடம், நண்பரே, எப்படி இருக்கிறீர்கள் என்று அன்போடு விசாரித்தால் அவரிடமிருக்கும் வெறுப்பு அகலும். நல்லெண்ணம் ஏற்படும். நல்லுறவும் ஏற்படும். 

அனைவருக்கும் தியாகம் மிக அவசியம். தியாகம் அல்லது நற்குணங்கள் அல்லாதவற்றைத் துறத்தலே யோகமாகும். 

மாறாகப் போகம் இச்சைக்கு வழிவகுக்கும். 

தியாகம் யோகத்தை அளிக்கும். போகம் ரோகத்துக்கு வழிவகுக்கும். எனவே ஒவ்வொரு மனிதரும் எப்பொழுதும் கடவுள் சிந்தனையுடன் செயல்புரியவேண்டும்.'

பகவானின் இவ்வார்த்தைகளை நாம் முழுமனதுடன் பின்பற்ற வேண்டும்.

மனித உருவில் அவதரித்து நம்மிடையே நடமாடும் பெருமானை அறிந்துகொள்ள வேண்டும்.
அவரின் அருள்மொழிகளைச் சிரமேற்கொண்டு அவர் காட்டும் சனாதன தர்மத்தின் வழியில் நடந்து பிரசாந்தி பெறவேண்டும்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

Friday, February 11, 2022

வாழ்க்கையில் இறைவனை உணர்தல்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

நாம் செய்யும் நல்ல மற்றும் தீய கர்மங்களின் பலன்களை என்றோ ஒருநாள் அனுபவித்தே தீரவேண்டும்.
அது மாற்ற முடியாத விதி

நமக்குள்ளே இருக்கும் தெய்வீக இயல்பை நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். 

இதன் காரணமாகத் தேவையற்ற துன்பங்களுக்கு உட்படுகிறோம், சங்கடப்படுகிறோம், அவமானப்படுகிறோம். நமது கோழைத்தனமும் தன்னைத் தானே பழித்துக்குள்ளுதலும் தெய்வீகத் தன்மையல்ல. 

நமது அடிப்படை இயல்பு தெய்வீகமாகும். நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள புத்தியையும், வலிமையையும் வைத்துக்கொண்டு இறைவனுக்கு அர்ப்பணமாக நாம் அனைவரும் செயலாற்ற வேண்டும். 

நாமெல்லாம் பள்ளிக்கூடத்திலும் கல்லூரிகளிலும் படிக்கிறோம். ஒரு கால கட்டத்தில் அந்தப் படிப்புமுடிந்து, பட்டம்பெற்று வெளியுலகிற்குச் செல்கிறோம். பட்டம் பெற்றபின் கல்விச்சாலைகளும் கல்லூரிகளும் நமக்குத் தேவை இல்லை. 

இதைப்போலவே உலகம், வாழ்க்கை பற்றிய உண்மையை நாம் உணர்ந்தவுடன் வீடுபேறு கிடைத்துவிடுகிறது. அதற்குப் பிறகு இந்த வாழ்க்கை நமக்குத் தேவையில்லாமல் போகிறது. 

நாம் பட்டத்தைப் பெற்றே ஆகவேண்டும். நாம் தேர்ச்சி பெறுவதற்குரிய முயற்சியை முறையாக எடுத்துகொள்ள வேண்டும். நம்முடைய முயற்சியில் கவனம் செலுத்தாமல், இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தால் நமக்குப் பலன் ஏதும் கிடைக்காது. 

நாம் நம்மைச் சீர்படுத்திக் கொண்டால் மட்டுமே நமக்கு வீடுபேறு கிடைக்கும். 

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

Wednesday, February 9, 2022

கடமை தவறும் பாபச் செயல்களின் விளைவு

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

செய்யும் கர்மங்களைப்பற்றியும் கர்மத்தின் பலனைப் பற்றியும் சாயி ‌நாதன் தெளிவாக விளக்கியுள்ளார்.

நாம் அனைவரும் பிறந்தது முதல் இறக்கும் வரை வினைகளைப் புரிந்துகொண்டே  ‌இருக்கிறோம். உணர்ந்தோ  உணராமலோ கர்மம் செய்துகொண்டே இருக்கிறோம்.
நாம் சுவாசிப்பது கூட நாம் செய்யும் கர்மமாகும்.

ஒவ்வொருவரும் தமக்குரிய கடமைகளைத் தவறற்ற முறையில் செய்ய‌ வேண்டுமென்றும்‌ தமக்குரிய ‌கடமையைச் செய்யாமலிருப்பதும் தவறு நடக்கும் போது தவறைத் தடுக்கும்‌ கடமையுள்ளவர்கள்‌‌ அத்தவறைத் தடுக்காமல் பார்வையாளராக‌ இருப்பதும் அத்தவறின் பாப பலன்களைத் தவறு செய்தவர்கள் மாத்திரமன்றி தடுக்கத் தவறிப் பார்வயாளர்களாக இருப்போரும் அனுபவிக்க வேண்டுமென்றும் கூறும் பகவான்,  உலகில் எங்கோ ஒரு இடத்தில் ‌நடக்கும் தவறைத் தடுக்குமாறு பிரார்த்திப்பது கூட நற்கருமம் என்கிறார்.

அதனால்தான்‌ நாம் அனைவரும்          " சமஸ்த லோகா சுகினோ பவந்து" என்று முடிந்தளவு‌ பிரார்த்திக்க வேண்டுமென்று  (அதாவது உலகமனைத்தும் நலமாக வாழவேண்டும்) கூறும் பகவான், தானும் இதனைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.


ஒரு அநியாயம் நடக்கும்போது அவ்விடத்திலிருந்தாலும் அத்தவறைத் தடுக்கும் சக்தியுள்ளவர்கள் தவறைத் தடுப்பது அவர்களின் கடமையென்றும், தவறைத் தடுக்கும் சக்தியற்றவர்கள் இறைவனைப் பிரார்த்திபாபதும் அவர்களின் கடமையென்றும் கூறப்படுகிறது.

மகாபாரதத்தில் அஸ்தினாபுர அரச சபையில் திரௌபதி துகிலுரியப்பட்ட சம்பவத்தின் ‌விளைவுகளைப்பற்றி எம்பெருமான் தனது அருளுரையில் குறிப்பிட்டுள்ளார்.

திரௌபதியின் துகிலையுரிந்தவன் துச்சாதனன். துகிலுரியக் கட்டளையிட்டவன் துரியோதனன். மகனின் தவறை, மகன்மீதிருந்த கண்மூடித்தனமான பாசத்தின் காரணமாகக் கண்டித்துத் தடுக்கத் தவறியவன் திருதராஷ்டிரன். இவற்றைத் தடுக்கும் அதிகாரம் தன்னிடமிருந்தும்  தடுக்காமல் மௌனமாக இருந்தவர் பிதாமகர் பீஷ்மர். 

இதனால்தான்  அவர்கள் அனைவரும் செய்த பாபத்திற்குரிய தண்டனைகளை‌ப் பாரதப் போரின்போது  அனுபவித்தனர்.
அதிலும் சபையில் சகல அதிகாரங்களும் பெற்றிருந்த பீஷ்மர் திரௌபதியைக் காக்க வேண்டிய தனது கடமையைச் செய்யத் தவறியதால்‌  அப் பாபத்தின் பலனாகப் போரில் வீழ்த்தப்பட்டு‌ 58 நாட்கள் அம்புப் படுக்கையில் கிடந்து வேதனையை  அனுபவிக்கும் நிலமை ஏற்பட்டதென்றும், சபையில் கடமையாற்றிய காவல் வீரர்கள் சபைக் காவலர்களாகத் தமது கடமையையே செய்தார்களென்றும், திரௌபதியைக் காக்கும் அதிகாரம்‌ அவர்களுக்கு இல்லாததால் அந்தப் பாபத்தின் பலன்‌அவர்களைச் சேரவில்லையென்றும் கூறியுள்ளார்.

எனவே நாம் நமக்குரிய கடமைகளை இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்துகொண்டேயிருப்போம். 

"சமஸ்த லோகா சுகினோ பந்து " என்னும் உலகைக் காக்கும் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருப்போம்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

Tuesday, February 8, 2022

சுயநலமின்றி இறைவனுக்கு அர்ப்பணமாக ஆற்றப்படும் கருமம்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

நம் கண்ட தெய்வமும் கலியுகக் கண்ணனுமான சாயிநாதன் தனது வாகினித் தொடர்களிலும், ஆற்றும் அருளுரைகள் அனைத்திலும்  மனிதனின்‌ பிறப்பின் இரகசியத்தையும், இப்பிறவிப் பெருங்கடலைக் கடந்து இறைவனுடன் இரண்டறக் கலந்து மீண்டும் பிறவா நிலையடையும் வழிகளையும் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டு வருகிறார்.

தனது கடந்த 9 அவதாரங்களிலும் தீயவர்களை அழித்துத் தர்மத்தை நிலைநாட்டியதை உறுதிப்படுத்திய
எம்பிரான், கலியுக மக்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், அனைவருக்குமே நன்மையும் தீமையும், அசுர குணமும் தெய்வீகக் குணமும், நன்மையும் தீமையும் கலந்தே காணப்படுவதால் இவ் அவதாரத்தில் ஆயுதம் ஏந்தாமலும், எவரையும் அழிக்கும் நோக்கமின்றியும்,  உலக மக்கள் அனைவரையும் நல்வழிப் படுத்துவதன் மூலமுமே தர்மத்தை நிலைநாட்டி‌ வருவதாகவும் கூறி உள்ளார்.

மனிதர்கள் ஆற்றும் செயல்கள் அனைத்துமே ‌சுயநலத்தையும் பலனை எதிர்பார்த்தும் "நான்" என்னும் ஆணவத்துடனும் செய்யப்படுவதால், மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் நிலைக்குத் தள்ளப் படுவதாகவும் கூறுகிறார். 

செய்யும் செயல்கள் அனைத்தையும் சுயநலம் இன்றியும்,  பிறருக்கு உதவக் கூடியதாகவும் பலனை எதிர்பார்க்காமலும் இறைவனுக்கு அர்ப்பணமாகவும் செய்யும் போது கர்மத்தின் பலன்கள் அனைத்தும் செய்பவரைச் சேராமல் இறைவனையே சென்றடைவதால் கர்மங்களின் பலன்கள் அனைத்திலிருந்தும் மனிதன் பாதிப்படைவதில்லை என்றும் பகவான் விளக்கமளித்துள்ளார்.

மேலும் நான் செய்கிறேன் என்ற எண்ணத்துடன் செய்யும் நற் செயல்களுக்குரிய பலன்களைத் தங்கச் சங்கிலிக்கும், தீய செயல்களின் பலன்களை இரும்புச் சங்கிலிககும் ஒப்பிடும் பகவான் இருவிதச் சங்கிலிகளும் பிணைக்கும் சக்திகொண்டதெனவும், மனிதனை மீண்டும் மீண்டும் பிறவியெடுக்க வழிவகுக்குமென்றும், நற்செயல்களின் பலன்கள் மறுபிறவியில் நல்வாழ்வுக்கு வழிவகுக்குமென்றும், தீய செயல்கள் இன்னல்கள் நிறைந்த மறுவாழ்வைக் கொடுக்குமென்றும் கூறுகிறார். 

எனவே செய்யும் செயல்கள் அனைத்தும் இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்யப்பட்டால் வினைகளின் பலன்களனைத்தும் இறைவனையே சேர்வதால் பிறப்பற்ற நிலை கிடைக்குமென்றும் எடுத்துரைத்து உளளார்.

மேலும், பூரணமாகச் சரணடையும் அனைவரின் வினைகளையும் அவரே ஏற்றுக்கொண்டு, அவர்களைத் தூய்மையாக்கிக் கஷ்டங்கள் அனைத்திலிருந்தும் பாதுகாப்பதாகவும் கூறுகிறார்.

எனவே நமது செயல்கள் அனைத்தையும் சுயநலமற்றதாகவும் , பிறருக்கான சேவையாகவும் இறைவனுக்கே அர்ப்பணமாகவும் புரிந்து, இவ்வாழ்க்கையில் இன்னல்களின்றி, மீண்டும்‌ பிறவா நிலையைப் பெறுவோமாக.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

Monday, February 7, 2022

கீதையெனும் அழிவற்ற மாளிகை

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

பகவத் கீதையின் அடித்தளம் அருச்சுனன் விஷாட யோகம் என்று நமது சாயிக் கண்ணன் கூறுகிறார்.

பலமான அடித்தளம் அதாவது அத்திவாரத்தின் மேல் கட்டப்படும் கட்டிடம் தான்‌ காலம் காலமாக நிலைத்திருக்கும். 

அதுபோலவே 5000 வருடங்களின் முன் அருச்சுனன் விஷாட யோகம் எனப்படும் பலமான அத்திவாரத்தின் மீது அமைந்துள்ளதால்தான் கீதை என்னும் பெரும் மாளிகை எழுப்பப்பட்டுள்ளதாகவும், ஏனைய யோகங்கள் கொண்ட   கீதை அதனால்தான்‌ அன்றிலிருந்து இன்றுவரை மாத்திரமன்றி இப்பிரபஞ்சம் உள்ளவரை நிலைத்திருந்து அனைத்தையும் வழிநடத்தவுள்ளது எனவும் சாயிக்கண்ணன் கூறுகிறார்.

விஷாட யோகமென்ற பலமான அடித்தளமுள்ள கீதை சன்னியாச யோகத்தில் முடிவடைவதாகக் கூறும் பகவான், விஷாட யோகத்தை விதைக்கும், அவ் விதையிலிருந்து உருவான மாபெரும் விருட்சத்துக்கு சன்னியாச யோகத்தையும் ஒப்பிட்டுள்ளார்.

விஷாட யோகத்துக்கும் சன்னியாச யோகத்துக்கும் இடையிலுள்ள ஏனைய யோகங்களனைத்தையும் கற்றோரும் கல்லாதோரும் தெளிவாகப்புரிந்துகொள்ளும் வகையில் விளக்கியுள்ளார்.

மேலும் இப் பிரபஞ்சத்தைப் பாலுக்கும் இறைவனைப் பால் முழுவதிலும் நீக்கமற நிறைந்துள்ள வெண்ணெய்க்கும் எம்பெருமான் ஒப்பிட்டுள்ளார்.

 பாலைக் காய்ச்சி உறைமோரிட்டுத் தயிராக்கி,  அத் தயிரைக் கடைவதன் மூலம் வெண்ணெயைப் பெறுவது போன்று யோகங்களெனப்படும் சாதனைகள்‌மூலமே பிரபஞ்சமெங்கும் நீக்கமற நிறைந்துள்ள இறைவனைக் காணும் மற்றும் இறைவனின் அருளை அனுபவிக்க முடியுமென்றும் நம்மை உய்விக்கக்  கலியுகத்தில் அவதரித்து நம்மைத் தமது அருளமுதத்தைப் பருகி பிறவாநிலையை எய்தி அருளியுள்ள சாயி பகவான் பகர்ந்துள்ளார்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்

Sunday, February 6, 2022

அர்ஜுனன் விஷாட யோகம்

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

கலியுக அவதாரமும் நமது கண்கண்ட தெய்வமுமான பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா அவர்கள் தனது திருக்கரத்தால் அருளிய கீதா வாகினியிலும், அவரது அவதார நோக்கத்தின் வெளிப்பாடுகளில் அடங்கிய அருளுரைகளிலும் பகவத் கீதையின் பரிபூரணமான அர்த்தங்களைத் தற்போதைய வாழ்வுடன் சம்பந்தப்படுத்தும் வகையிலும், கல்வியறிவற்ற ‌பாமரர்களுக்கும் விளங்கும் வகையிலும் மிகத் தெளிவாக அளித்த விளக்கமல்லவா கீதா வாகினி.

சுமார் 5000 ஆண்டுகளின் முன் துவாபர யுகத்தில்  ஸ்ரீ கிருஷ்ணபகவானாக அவதரித்தபோது அந்த யுகத்து மக்களுக்குப் புரியும் மொழியில், அவர்கள் வாழும் நிலமைக்கேற்ப நிகழ்த்திய கீதோபதேசத்தை, அதே‌ கண்ணபிரான் கலியுகத்தில் சாயிபகவானாக அவதரித்து நாமறிந்த மொழிகளில்  நாமனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய,  நாமனைவரும் அறிந்த உதாரணங்களுடன் நமக்கு வழங்கிய பிரசாதமல்லவா நாம் தற்போது அனுபவிக்கும் கீதா வாகினி.

இக்கலியுக அவதாரம் நிகழும் வரை அருச்சுனனுக்கு  சமஸ்கிருத மொழியில் வழங்கப்பட்ட கீதோபதேசத்தை சமஸ்கிருத மொழியறிந்த‌ பண்டிதர்கள் தமது அறிவுக்கெட்டிய வகையில் தமது மொழியறிவுக்கேற்ப தமக்குப் புரிந்தவற்றேயே மக்களுக்குப் போதித்து வந்தனர்.

சமஸ்கிருத மொழியில் ஒவ்வொரு சொல்லும் சந்தர்ப்பத்துக்கேற்பவும் வசனத்துக்கேற்பவும் பல்வேறு அர்த்தங்களைக் கொண்டது. எனவே விளக்கங்களும் விளக்குபவர்களின் அறிவுக்கேற்ப வெவ்வேறாக இருந்தது.

விளக்கமளித்த பலர் தமது பெருமையைத் தககவைத்துக் கொள்ளும் வகையிலும் விளக்கங்களைத் திரிபு படுத்தியுள்ளனர்.
எல்லோரும் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் பகவான் தனது கீதா வாகினியை நமக்கு அருளியுள்ளார்.

துவாபர யுகத்தில்த்தில்  கண்ணபிரான் உபதேசித்த பகவத் கீதை 18 அத்தியாயங்களுடன்  மொத்தம் சுமார் 700 ‌சுலோகங்களைக் கொண்டது.

அதே கண்ணபிரான் தனது கலியுகத்தின் சாயிக் கண்ணன்  அவதாரத்தின் போது 27 அத்தியாயங்களில் நம் அனைவருக்கும் ஏற்ற வகையிலும் புரியும்வகையிலும் கீதா வாகினியை அருளியுள்ளார்.

கீதோபதேசத்தின் முதலாவது அத்தியாயத்தில் மகாவிஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் வியாச பகவான் கூறியதாகச் சொல்லப்படும் அருச்சுனன் விஷாட யோகத்தை நமது சாயிநாதனும் தமது கீதா வாகினியின் முதலாவது அத்தியாயத்தின் நடுப்பகுதியில் குறிப்பிட்டுள்ளதுடன் அருச்சுனன் விஷாட யோகத்தின் விளக்கத்தையும் நமக்குத்  தெளிவாக அருளி இருக்கிறார்
.(மீண்டும் தொடரும்).

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

Saturday, February 5, 2022

உண்மையும் சத்தியமும்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்..

பகவான் தனது கீதை வாகினியின் முதலாவது அத்தியாயத்தில், கௌரவர்கள் என்ற பதம் அசுர குணம், அநீதி, அசத்வ. குணம் என்பவற்றுக்கும், பாண்டவர்கள் என்பதை தெய்வீகம், நீதி, சத்வகுணம் என்பவற்றுக்கு ஒப்பிடுகிறார்.

மேலும், ஒவ்வொரு மனிதனிலும் பாண்டவர்களுக்குரிய தெய்வீகத் தன்மை, நீதி, தர்ம நெறி, சாத்வீகம் என்ற தன்மைகளும், கௌரவர்களின் குணமான அசுர குணம், அநீதி, அசத்வம், அதர்ம எண்ணங்கள் காணப்படுவதாகவும் கூறுகிறார். 

பாரதப்போரில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தம் போன்று ஒவ்வொரு மனிதனின் மனதிலும் நீதிக்கும் அநீதிக்குமிடையிலும், தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையிலும் யுத்தம் நடைபெறுவதாகவும், நீதி மற்றும் தர்ம வழியைப் பின்பற்றுபவர்களுடன் தான் இருப்பதாகவும் கூறுகிறார். அதாவது  நீதியும் தர்மமும் இருக்குமிடத்திலேயே தான்  இருப்பதாகவும் அதேவேளே தான் எங்கும் நிறைந்திருப்பதாகவும கூறியுள்ளார்

மேலும் "சத்யமேவ ஜெயதே" அதாவது எப்பொழுதும் சத்தியமே வெல்லும் என்றும் கூறுகிறார். சூரியனை மேகம் மறைப்பதுபோல் தர்மத்தை அதர்மம், சத்தியத்தை அசத்தியம் மறைப்பதுபோல் தோன்றினாலும் என்றும் சத்தியமே வெற்றிபெற்று நிலைத்து நிற்கும், வெற்றிபெறும் என்றும் சொல்கிறார்.

உண்மைக்கும் சத்தியத்திற்கும் இடையில் உள்ள வேறுபாட்டையும் தெளிவாக விளக்கியுள்ளார்.
சத்தியம் காலத்தால் அழியாதது, மாறாதது என்றும் உண்மை காலத்துக்கேற்ப மாறக்கூடியது என்றும் கூறுகிறார்.

அதாவது நமது உடல் உண்மையல்ல, நிலையானதல்ல, உலகில் பிறந்த அனைத்துமே உயிர் பிரிந்தவுடன் அழிந்துவிடுமென்பதையும், உடலில் இருக்கும் ஆன்மாவே நிலையானது என்றும், உடலின் இயக்கத்துக்குக் காரணமான ஆன்மா உடலைவிட்டு நீங்கியவுடன்‌ உடல் இயங்காதென்றும் உடல் அழிந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.

மேலும்  கண்ணபிரான் அருச்சுனனிடம், " உன்னை ஆரம்பத்தில் குழந்தை என்றனர், பின்னர் இளைஞன் என்றனர், இரண்டுமே உண்மை. ஆனால் சத்தியமல்ல என்றும், "உனது இளம்பராயத்து உடல் தற்போது எங்கே?"  என்றும்  "உடல் காலம் செல்லச் செல்ல உருமாற்றமடைகிறது, இளைஞனாக இருந்த நீ தற்போது வில்லேந்தி நிற்பது உண்ம, அழியாத உனது ஆத்மாவே சத்தியம்" என்றும் கூறியுள்ளார்.

அதற்கு அருச்சுனன் ‌"பரந்தாமா,  தாத்தா ‌பீஷ்மர்,  குரு துரோணர் போன்றர்  என முன்னே என்னை எதிர்த்துப் போராட வந்திருப்பது உண்மையில்லையா"  என்று கேடடான்.

அதற்குக் கண்ணபிரான் அவர்கள் அனைவரினதும் ஆன்மாக்கள் இதற்கு முன் இருந்ததும்,  தற்போது இருப்பதும், இனியும்‌ இருக்கப்போவதும் சத்தியம் என்றும் அவர்களது உடல்கள் தற்போது இருப்பதும்‌ பின்னர் அழியப்போவதுமே உண்மை என்றும கூறியுள்ளார்.

அதாவது அழிவற்ற அனைத்துமே சத்தியம் என்றும் அழியக்கூடியவை இருப்பதாகத் தோன்றுவது உண்மையென்றும் கூறியுள்ளார். 

பிரபஞ்சமனைத்திலும் தானே நிலையானவர், சத்தியமானவர். அழிவற்றவர் என்றும் படைக்கப்பட்ட அனைத்தும் என்றோ ஒருநாள் அழிந்துவிடும் என்றும் எடுத்துரைக்கிறார்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்..

Wednesday, February 2, 2022

அஞ்ஞானமெனும் மாயையை வெல்ல உதவும் கீதை

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

கீதா வாகினியின் முதலாவது அத்தியாயத்தில், ஒருவர் எவ்வளவு அறிவாளியாகவோ, புத்தி ஜீவியாகவோ இருந்தாலும் மாயையால் ஏற்படும் அஞ்ஞானத்தின் மூலம் ஏற்படும் தடுமாற்றம், குழப்பநிலை என்பவற்றிலிருந்து தப்பிக்க முடியாது  என்று பகவான்  கூறியுள்ளார்.

மேலும் மாயையால் ஏற்படும் பற்று, பாசம், கோபம், ஆணவம் போன்றவற்றால் விளையும் துன்பத்திலிருந்து தப்புவதும் கடினம் என்றும் நமது கடமைகளைச் சிறப்பாகச் செய்வதற்கு இவையே தடை என்றும்  பகவான் கூறுகிறார்.

பலகலைகளும் பேரறிவும் கொண்டவனும்,  கண்ணபிரானின் தோழனும் மைத்துனனுமான அருச்சுனனே பந்த பாசங்களுக்காட்பட்டுத் தனது கடமை எதுவெனறு அறிய முடியாமல் தடுமாறிவிட்டான்.

அவனே உடலுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள வேறுபாட்டை மறந்து‌ தானும் தனது ஆன்மாவும் ஒன்றென்ற‌‌ எண்ணத்தில் தடுமாறினான். தனது ஆன்மாவே உலகபந்தத்தின் அடிப்படை என்று குழப்பமடைந்தான். உடலியக்கம் மாத்திரமே ஆத்ம தர்மம் என்றும் குழம்பிவிட்டான்.

இப்படியான தவறான முடிவுகள் அருச்சுனனுக்கு மாத்திரமன்றி உலக மாந்தர் அனைவருக்கும் ஏற்படுவதாகவும்,  அதன் காரணமாகவே மனிதர்கள் பிறவிப் பிணியில் மீண்டும் மீண்டும் சிக்கித் தவிப்பதாகவும் பகவான் கூறியுள்ளார்.

கீதை மாயையெனும் அஞ்ஞானக் கடலைக் கடக்க உதவும் கருவியெனவும் பகவான் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொருவரும் தமக்குரிய கடமையை மனதில் பதித்து அக்கடமையெனும் தர்ம நியதிப்படி செயலாற்ற வேண்டுமென்றும் பகவான் வலியுறுத்துகிறார்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்..







Tuesday, February 1, 2022

கலங்கிய அருச்சுனனுக்கு‌க் கண்ணபிரான் அளித்த விளக்கம்

ஓம் ஸ்ரீ சாயி ராம்..

யுத்தபூமியில் எதிர்த்து நிற்கும் இருபுறத்துச் சேனைகளின் மத்தியில் மனம் சோர்ந்து நின்ற பார்த்தனிடம் பகவான் கூறிய அறிவுரைகள் அவனுக்குப் பரிந்தபோதிலும் அவனது சந்தேகங்களும் குழப்ப நிலையும் முழுமையாகத் தீரவில்லை. 

இதனையுணர்ந்திருந்த பகவான் "அருச்சுனா, நான் நீ ஆற்ற வேண்டிய கடமைகளான கருமங்களைத் தெளிவாகக் கூறினேன். நீ புரிந்த போர்களைப் பற்றியும் அப் போர்களில் எத்தனையோ போராளிகள் உன்னால் கொல்லப்பட்டதும் உனக்கு நன்கு தெரியும்.

அப்படியிருக்க, தற்போது ஏன் தயங்குகிறாய்? உன் முன்னே உன்னை எதிர்த்துப் போரிட த் தயாராக நிற்கும் அனைவரும் யாராலாவது கொல்லப்படப் போகிறார்களா? அவர்கள் என்னால் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டனர். செத்த பாம்பை அடித்துவிட்டு ‌நான் கொன்றேன் எனறா கூறப்போகிறாய்?

இம்மண்ணில் பிறந்தபோது நீ யார்? பிறக்கும்போது‌  நீ குழந்தை. பெரியவர்கள் பெயரிட்ட பின்னரே நீ அருச்சுனன் என அழைக்கப்பட்டாய்.
அப்போது உனக்குக் குழந்தைப்பருவம். அதன்பின் நீ சிறுவனானாய். அதன்பின் வாலிபனானாய். வாலிபப் பருவத்தில் துரோணரின்‌ குருதட்சணையாகத் திருஷ்டத்தூய்மனைத் தேர்க்காலில் கட்டிய‌ உனது வாலிப உடல் எங்கே.

குழந்தை உடல் அழிந்து சிறுவனின் உடலாகியது. சிறுவனாக இருந்த உடல் எங்கே? அதன் பின்னர் வந்த வாலிப உடல் எங்கே. தற்போதுள்ள உடலுக்குப் பதில் வயோதிப உடல் ஏற்பட்டு, அதுவும் அழிந்து அவ்வுடலில் இருந்த ஆன்மா இன்னுமொரு உடலை எடுத்து வாழ்க்கையைத் தொடர்கிறது.

குழந்தையின் உடல் மறைந்து விட்டதென்றோ‌ பின்னர் வாலிப உடல் மறைந்துவிட்டதென்றோ யாராவது அழுது புலம்புகிறார்களா? உடலில் ஆன்மா வாசம் செய்யும்‌பொழுது ‌செய்யும்‌ கருமங்கள் அனைத்தையும்
பரமாத்மாவுக்கு அர்ப்பணமாக்கி விட்டால்‌ செய்யும் கருமங்களின் பலன்கள் அனைத்தும் ‌பரந்தாமனையே சென்றடையும்.
இதனால் ‌ஜீவாத்மா கர்மபலன்களுக்கு உட்படாமல் பிறவிப்பிணியிலிருந்து விடுபட்டு இறைவனுடன் இரண்டறக் கலந்து விடும்" எனறு விளக்கமளித்தார்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்..

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...