Thursday, March 31, 2022

உலகவாழ்வின் துன்பங்கள் பற்றிப் பட்டினத்தாரின் விளக்கம்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

உலகில் நாம் காணும், செய்யும்  மற்றும் அனுபவிக்கும் பல விடயங்களைப் பற்றியும் ‌நமது எண்ணத்துக்கேற்ப புரியும் செயல்கள் பற்றியும் அவற்றால் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகள் பற்றியும் நாம் மிக அவதானமாக இருக்கவேண்டுமென்றும், நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் தர்மநெறிப்படியானதா, இதனால் சமுதாயத்துக்கு நன்மை கிடைக்குமா, நமது செயலை இறைவன் அங்கீகரிப்பாரா என்றெல்லாம் ஆராய்ந்து செயற்படுத்த வேண்டும்.என்றும், மேலும் நாம் செய்யும் அனைத்தையுமே இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்யவேண்டும் என்றும் நமது சாயிபகவான் நமக்கு அறிவுறுத்தி வருகிறார்.

நாம் கவனக்குறைவாகப் பாத அணியின்றி கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில் நடந்துசென்றால், குத்திய பிறகுதான் முள் குத்திவிட்டது என்று தெரிகிறது. கல்லில் கால் தடுக்கிய‌பிறகுதான கல் இருந்ததை உணர்கிறோம்.
வழுக்கி விழுந்த பின்னரே அது வழுக்கல் நிலம் என்று புரிகிறது. 
சில சமயம் உண்டபின்தான் அது உறைப்பு என்று உணருகின்றோம். 

நாம் செய்யும் பவ செயல்களை மகிழ்ச்சியுடன் செய்ய ஆரம்பித்தபோதும் அவற்றின் விளைவுகள் சிலசமயங்களில் துயரத்தில் முடிவதை அவதானித்துள்ளோம். 

உலகவாழ்க்கையில் நாம் புரியும் பல விடயங்கள் ஆரம்பத்தில் மகிழ்ச்சிகரமாக‌ இருக்கும் போதிலும் இறுதியில் அதன் முடிவு துயரமாக இருப்பதனால் பலர் கலங்குவதுணடு.

மகிழ்ச்சிகரமானவை என்ற எண்ணத்தில் ஆரம்பிக்கும் பல உறவுகள் இறக்க முடியாத சுமைகளாக மாறுவதால் அவற்றிலிருந்து விடுபடமுடியாமல் தவிக்கும் பலர் நம் மத்தியில் வாழ்கின்றார்கள். 

கால்கள், கைகள் எல்லாம் விலங்குகள் பூட்டப்பட்டுக் கழற்ற முடியாத நிலைபோன்ற சூழ்நிலையில், வாழவும் முடியாத, சாகவும் முடியாத குழப்பத்தில் வாழ்பவர்கள் ஏராளமாக உள்ளனர்.
பலர் இன்று துயரங்களின் மொத்த உருவமாகக வாழ்கின்றார்கள். 

நமக்குக் கிடைத்த இந்தப் பெறற்கரிய மனிதவாழ்க்கையை  எப்படிப் பயன்படுத்துவது என்று மகான்கள் பலரும், இறைதூதர்களும், இவ்வுலகில் மனிதனாக  அவதரித்த அவதாரபுருஷர்களும் தொடர்ந்தும் அறிவுரை வழங்கிக்கொண்டே இருக்கிறார்கள்.‌

ஆனால் அவற்றைக் கடைப்பிடித்து உய்வடையும் வழிகள் தெரிந்தும், மாயைநிறைந்த இவ்வுலக வாழ்க்கையில்  சிக்கிக்கொண்டு மீட்சிபெற முடியாமல் பலரும் தவிக்கிறார்கள். 

உண்மைகளை அறிந்தும் அல்லது தெரிந்தும் அவற்றை  உதாசீனம் செய்து துன்பத்தில் உழலுகிறார்கள்.. 



 "நாப்பிளக்க பொய் பேசி
 நவநிதியம் தேடி 
நலமொன்று மில்லாத 
நாரியரைக் கூடி 
பூப்பிளக்க வருகின்ற 
புற்றீசல் போலப், 
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களை பெறுவீர், 
காப்பதற்கும் வழியறியீர், 
கைவிடவும் மாட்டீர், 
கவர் பிளந்த மரத்துளையில் 
கால் நுழைத்துக் கொண்டே, ஆப்பதனை அசைதிட்ட குரங்கு நிலைபோல. 
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீர் நீரே " 
என்று உலகவாழ்க்கையின் இன்னல் நிலையைப்பற்றிப் பட்டினத்தார் அழகாகப் பாடியிருக்கிறார்.

எனவே நாம் பிறந்த நோக்கத்தை உணர்ந்து நல்வழியில் வாழ்வோம். 

உலகம் அனைத்தும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்

சமஸ்தலோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

Wednesday, March 30, 2022

சத்தியமே மிக வலிமை வாய்ந்தது.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

நமது சாயிநாதன் தனது உரையாடல்களின்போதும் அருளுரைகளின்போதும் சத்தியத்தின் மகத்துவத்தைப்பற்றி வலியுறுத்திவருகிறார்.

இவ்வுலகில் மனித உருவில் அவதரிக்கும் போது அந்த அவதார புருஷரின் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியத்தியமே என்பதை நமக்கு உணர்த்திவரும் எம்பெருமான், சத்தியத்தைவிட  உயர்ந்த தர்மம் எதுவுமே இல்லை,  அதனால் எப்பொழுதும் உண்மையையே பேசவேண்டும், சத்தியமே இறைவனின் திருவுருவம், திருவாய்மொழி, வடிவம் என்பதை வலியுறுத்துகிறார்.

மேலும் தனது பெயரே சத்தியம், அதனால் தனது வாழ்க்கையும் வார்த்தைகள் அனைத்துமே சத்தியம், சத்தியம் சத்தியம் என்று கூறியுள்ளார்‌. 'ஸத்யமேவ ஜெயதே' அதாவது 'சத்தியமே எப்பொழுதும் வெற்றிபெறும்' என்பதை வலியுறுத்துகிறார்.

எப்பொழுதும் இறைவனின் திருப்பெயரைச் சொல்லவேண்டியதன் அவசியத்தையும், வழிபாட்டுக்கென வீண்செலவு செய்யவது தேவையற்றது என்றும் கூறிவரும் பகவான் தன்னிடம் வரும் பக்தர்களிடம் வெறும் கையுடன் வந்து வீடு திரும்பும்போது தனது அருளால் நிரம்பியபடி செல்லும்படி சொல்லி வருகிறார்.

மேலும் உணவற்றவர்களுக்கு உணவு அளித்திடுமாறும், உடையற்றவர்களுக்கு உடையைக் கொடுக்குமாறும் கூறிவரும் பகவான், கடவுளின் பெயரை உச்சரித்தபடியே எல்லா வேலைகளையும்  செய்யுமாறும், நமது நாமஸ்ரணையை வெளியில் உரக்கச் சொல்லாமல் மனதுக்குள்ளாகச் சொன்னாலே போதும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

பிச்சயிடும்போதுகூட உங்கள் மனுதுக்குப் பிடித்த இறைவனின் பெயரைச் சொல்லிக் கொண்டே பிச்சையிடவேண்டுமென்றும், பிச்சை கேட்டுவருபவர்களும் இறைவனின் சொரூபங்கள்தான் என்றும் கூறிவரும் சாயிநாதன் பிச்சையெடுப்பவர்களைத் தரித்திர நாராயணர்கள் என்றும் அவர்கள் நாராயணரின் வடிவங்களே என்றும்‌ கூறுகிறார்.

மனம் தான் அடிமைத்தனத்துக்கும் காரணமாக இருப்பதாகவும், வீடுபேற்றுக்கும் மனமே காரணமென்றும், எதை மறந்தாலும் கடவுளின் திருப்பெயரை மாத்திரம் மறக்கக்கூடாது என்றும் வலியுறுத்துகிறார்.

எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களது மதத்தில் சொல்லப்பட்டுள்ள இறைவனின்  திருநாமத்தைச் சொல்வதால் அவர்களது  துன்பங்கள் விலகுமென்றும், அமைதியின்மை, கோபம், துன்பம், துயரம் அனைத்தையும் கடக்க இறைவனின் திருநாமம் போதுமானது என்றும் சாயிநாதன் வலியுறுத்திவருககிறார்.

மதம், மாச்சரியம், காமம், குரோதம், லோபம், மோகம் ஆகியஅனைத்துமே இராட்சச குணம் கொண்டவை என்பதையும், இந்த‌ அரக்ககுணங்களை நாம் நம்மை அண்டவிடவேகூடாது என்றும் இந்த அரக்க குணங்கள் நம்மை அணுக அனுமதித்தால் அவை நமது மனிதப் பிறவியின் பயனையே அழித்துவிடும் என்றும் கூறியுள்ளார்.

கோபப்படும் மனிதர்களை நம்பி எந்தவேலையையும் கொடுக்கக்கூடாதென்றும் அவர்களிடமிருந்து உறவினர்கள் கூட விலகிவிடுவார்களென்றும்,
எப்பொழுதும் அன்பைக் கடைப்பிடித்து அன்பு சத்தியம் என்பனவற்றின் வடிவமான கடவுளின் நாமத்தை உச்சரித்தவண்ணமே இருக்கவேண்டுமென்றும் எமது சாயிநாதன் தமது அருளுரைகளில் கூறி வருகிறார்.

இவ்வாறு சத்தியத்தையும் அன்பையும்  அனைவரும் கடைப்பிடித்து வாழ்ந்தால் நாடும், நமது வீடும், நாமும் வளம்பெறமுடியுமென்றும், 
யாருக்கும் எவ்வித துன்பமும் ஏற்படாமல் அனைவரும் நலமாக வாழமுடியுமென்றும் எம்பெருமான் எடுத்துரைத்து வருகிறார். 

அனைவரும் நலமாக வாழவேண்டுமெனப் பிரார்த்திப்போம். 

சமஸ்தலோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

Tuesday, March 29, 2022

பலமதத்தினரும் இறவன் ஒருவரையே பலபெயர்களைப் பயன்படுத்தி வணங்குகிறார்கள்.

ஓம் ஸ்ரீ சாயிராம்.

ஆன்மீகப் பயிற்சி என்றால் என்ன என்று நமது சாயிநாதன் தனது அருளுரைகளில் தெளிவாகக் கூறியிருக்கிறார்.

பொதுவாக உலக மக்கள் ஜபம், தியானம், தவம் ஆகியவைதான் ஆன்மீகப் பயிற்சி முறையென்று எண்ணுகிறார்கள்.  

தியானம் என்றால் என்ன என்பதன் உண்மையை அறிந்து‌கொள்ளாமல் தியானத்தில் ஈடுபடுகின்றனர்.  தாங்கள் கடவுளின் மேல் ஈடுபாட்டுடன் தியானத்தில் ஈடுபடும் பலர் கடவுள் யாரென்று தெரிந்துகொள்ளாமலேயே ஆன்மீகத்தில் முன்னேற்றமடைய முயற்சி செய்கின்றனர்.

ராமா, கிருஸ்ணா, யேசு, அல்லா, புத்தா, ஜொராஷ்டிரா என்ற அவர்களுக்குப் பிடித்த பெயர்களை உச்சரித்தவாறு அவர்கள் தியானத்தில் ஈடுபட முயற்சி செய்கிறார்கள்.  ஆனால் அவர்கள் பலரும் தாங்கள் உச்சரிக்கும் பெயர்கள் அனைத்தும் கடவுள் என்னும் ஒருவரையே‌ குறிப்பிடுகிறது ‌என்ற உண்மையை உணர்வதில்லை.

திருக்குரானில் சொல்லப்பட்டுள்ள அல்லா என்னும் சொல்லின் பொருள் எல்லாம் வல்ல இறைவன் என்பதாகும்.  இராமர் என்னும் பெயர் திரேதாயுகத்தில் மனித உருவில் அவதரித்த இறைவனுக்கு வசிஸ்ட‌மகரிஷி இட்ட பெயராகும்.

கிருஷ்ணர் என்னும் பெயர் துவாபர யுகத்தில் இறைவன் மனித உருவில் அவதரித்தபோது அவரது மனித உடலுக்குக் கொடுக்கப்பட்ட பெயராகும்.

ஜேஹோவா என்பது யூத மொழியில் இறைவனைக் குறிக்கும் சொல்லாகும்.

அதேபோல் ஒவ்வொரு மதத்திலும் அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தமது நாட்டில் வழக்கிலிருந்த இறைவன் என்னும் சொல்லைக் குறிக்கும் பெயரையே கூறிக்கொள்கிறார்கள்.

உதாரணமாக நாம் தாகத்துக்கு அருந்தும் தண்ணீரை எடுத்துக்கொள்வோம்.

வேவ்வேறு மொழிகளில் தண்ணீருக்கு வெவ்வேறு பெயர்களைச் சொல்கிறார்கள்.

ஆங்கில மொழியில் தண்ணீரை வாட்டர் (water) என்றுகூறுகிறார்கள். 

சிங்கள மொழியில் 'வத்துற' என்று அழைக்கிறார்கள்.

கன்னட மொழியில் 'நீரு' என்கிறார்கள்.

ஜப்பானியர்கள் 'மிசு' எனக்ககூறுகிறார்கள்.

ஆனால் அனைவரும் அவர்களது மொழிகளில் சொல்லும் வார்த்தைகள் அனைத்தும் தாகத்தைப் போக்கும் ஒரே  பொருளான தண்ணீரையே குறிக்கிறது.

அதுபோல்தான் நம்மைப் படைத்துக் காத்து வீடுபேறளித்து அருள்புரியும் இறைவனாகிய ஒருவரையே வெவ்வேறு மதத்தினர்ஙள் தமது மொழிக்கும் கலாச்சாரத்துக்கும் உரிய பெயர்களால் வெவ்வேறு பெயரிட்டு அழைக்கின்றனர்.

சீரடி சாயிபகவான் ஒருமுறை தனக்குத் தாகமாக இருப்பதாகக் கூறியபோது அவரது அருகிலிருந்த இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய பக்தர்கள் அவர் பருகுவதற்கு நீர் கொடுத்தனர். அப்போது பாபா இஸ்லாமியர் கொடுத்த நீரையும்,‌‌இஸ்லாமியர் கொடுத்த நீரையும், இந்து பக்தர் கொடுத்த நீரையும் தான் வைத்திருந்த ஒரேகுவளையில் ஊற்றி, இந்தக் குவளையில் இஸ்லாமிய நீர் எது,இந்து நீர் எது, கிறிஸ்தவ நீர் எது என்று கேட்டபடியே அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் கொடுத்தது தாகத்தைத் தணிக்கும் ஒரேநீர்தான் என்பதை விளக்கி எல்லோரும் பல்வேறு பெயர்களில் வணங்குவது இறைவன் ஒருவரைத்தான் என்று கூறி, அவர்களுக்கு மதங்கள் என்பதன் பொருளை விளக்கினார்


அன்பெனும் உணர்வோடு செய்யப்படும் அனைத்துமே தியானமென்று பகவான் கூறுகிறார். .மணிக்கணக்காக ஒரே இடத்தில் அமர்ந்து தியானம் செய்வதைவிட  சக மனிதர்களிடம் அன்பு செலுத்துவதும் உதவுவதுமே இறைவனை மகிழ்விக்கும் செயல் எனவும் பகவான் கூறுகிறார்.

உண்மையான ஆன்மீக சாதனை என்பது அனைவருடனும் கைகோர்த்துச் சமுதாயம் முழுமைக்குமாக உழைப்பது தான். அதன் மூலமே சமுதாய முன்னேற்றம் ஏற்பட முடியும். 

அன்பபுதான் கடவுள். ஆகவே நாம் அன்பு நிறைந்தவர்களாக வாழவேண்டும். அன்பற்ற இதயம் வறண்ட தரிசு நிலத்திற்குச் சமம் என்று பகவான் இடித்துரைக்கிறார். நம் அனைவரினதும் அனைத்துச் செயல்பாடுகளும் அன்புடன் செய்யப்படவேண்டும்.  

புதிதாகப் பிறந்த குழந்தை எப்படி உடனடியாகப் பட்டப் படிப்புக்கான வகுப்புக்களுக்குச் செல்ல முடியாதோ அதே போலத்தான் எவரும் உயர்ந்த பிரேமைத் தத்துவத்தை உடனடியாக அடைய முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக ஆன்மீகப் பயிற்சிகளைச் செய்து படிப்படியாகத்தான் முன்னேற வேண்டும் 

ஒருவர் :நிவ்ருத்தி' எனப்படும் தனது உள் நோக்கிய பார்வையைச் செலுத்தத் தயாராகும் வரை. இந்த 'ப்ரவ்ருத்தி' எனப்படும் வெளிப்புறப் பார்வை வழிமுறைகளை மேற்கொள்ளத்தான் வேண்டும் என்பதையும் பகவான் விளக்கியுள்ளார்.

எந்த ஒரு செயலையும் ஆன்மீகப் பார்வையோடு அணுகவேண்டும். சத்தியம். பிரேமை என்பவற்றைப் பின்பற்றிச் செய்வதைவிடச் சிறந்த ஆன்மீகப் பயிற்சி முறை வேறெதுவும் கிடையாது என்றே நமது சாயிபகவான் கூறவருகிறார். சத்தியமும். பிரேமையும் இறைவனின் மறு பெயர்களாகும். ஆகவே இவை இரண்டுமின்றி ஆன்மீக சாதனைகளை மேற் கொள்வதில் அர்த்தமில்லை என்பதே எம்பெருமானின் அருள்வாக்கு.

சாயிநாதனின் வழிகாட்டலைக் கடைப்பிடித்து நாம் அனைவரும் இம் மனிதப்பிறவியின் பேற்றை அடைவோம்.

அகில உலகும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.

சமஸ்தலோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

Monday, March 28, 2022

நமது எதிர்காலம் இளைஞர்கள் யுவதிகளின் கைகளிலேயே தங்கியிருக்கிறது.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

இவ்வுலகம் எதிர் காலத்தில் அபிவிருத்தியடைந்து நலமாக இருப்பதும்  அல்லது தவறான வழியில் வழிநடத்தப்படுவதும்‌ நம் அனைவரின் நடத்தையைப் பொறுத்தே அமையப் போகிறதுு என்று நமது சாயிபகவான் தனது அருளுரைகளில் குறிப்பிட்டு வருகிறார்.

இவ்வுலகம் பாதுகாப்பாகவும், பவித்திரமாகவும், அமைதியாகவும், வளமாகவும் இருக்க வேண்டுமானால் நம் அனைவரின் நடத்தையும் ஒழுக்கத்துடனும் நன்நடத்தையுடனும இருக்க வேண்டியது அவசியமென்பதையும் பகவான் வலியுறுத்தி வருகிறார்.

" இவ்வுலகத்திற்குத் தற்போதைய முக்கிய தேவை, ஆடம்பரமும், உலகியல் சுகங்களும் அல்ல, மேன்மையான குணங்களும், நல் ஒழுக்கமும் நிறைந்த ஆடவரும், பெண்டிரும் தான். 

சரியான வழிமுறைகளில், இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் நடவடிக்கைகள் அமையாமல் போகுமானால் எதிர்காலத்தில் மகிழ்ச்சியும் சமாதானமும் இருக்காது 

சத்தியம், தர்மம், தியாகம் ஆகியவற்றைப் பின்பற்றி நடப்பவர்களே உண்மையான மனிதர்களாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்

சத்தியம் என்பது நீதி; தர்மம் என்பது ரீதி; தியாகம் என்பது கியாதி, இவை மூன்றும் சேர்ந்ததே மானவஜாதி. (மனித குலம்). 

இந்த மனித குலம் சத்தியத்திலிருந்தே உருவாகியது.. இந்தப் படைப்புகள் அனைத்தும் சத்தியத்திலிருந்தே பிறந்து உருவாகிக் கடைசியில் சத்தியத்திலேயே ஐக்கியமாகிறது. சத்தியம் இல்லாத இடமே இவ்வுலகில் இல்லை. 

இந்தத் தூய கலப்பற்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். இதை ஆதாரமாகக் கொண்டே உண்மையையே பேசுங்கள், இனிமையாகப் பேசுங்கள் என்று அறிஞர்களும், ஞானிகளும் கூறியுள்ளார்கள். '

ஸத்யம் ப்ருயாத்' என்பது நேர்மை என்னும் குணநலனைக் குறிப்பிடுகிறது. நீதி எனப்படும் நேர்மை மற்றும்ஒழுக்கம் இன்றி மனிதகுலம் தழைத்தோங்கவோ  வாழவோ முடியாது. 

அநியாயம். பொய்மை. அதர்மம். என்பவை அனேக மனிதர்களின் மனதில் வேரூன்றியிருப்பதால்  இன்றைய உலகம் பிரச்சினைகளில் அகப்பட்டுத் தத்தளித்து வருகிறது. வெகுவாகக் குறைந்துவரும்  வரும் மனிதர்களின் உயர்குண நலன்களை மீட்டு, இவ்வுலகை நன்நெறியில் நிலை நிறுத்த இளைஞர்களாலும். யுவதிகளாலும் மட்டுமே முடியும். 

மனிதர்கள் நேர்மையைக் கடைப்பிடித்து அதன் வழியே நடக்கும் போது தான் சமத்துவம். சகோதரத்துவம். சுதந்திரம் ஆகியவை சமுதாயத்தில் நிலவமுடியும். நேர்மையைத் தங்கள் உயிர்மூச்சாகக்‌ கைக்கொள்ள வேண்டுமானால் மனிதன் சத்தியத்தைக் கடைப்பிடித்து நடக்க வேண்டும். இதனால் தான் ‘சத்தியம் ப்ருயாத்’ எனக் கூறுகிறார்கள்

இது தான் மனிதனின் தலையாய கடமையாகும்.

அடுத்ததாக‌வருவது ‘ப்ரியம் ப்ருயாத்’ என்பதாகும். இனிமையாகப் பேசுங்கள்‌என்பதே இதன் பொருள். இது 'தர்மம்' என்னும் குண நலனைக் குறிக்கிறது. 

இதை அடிப்படையாகக் கொண்டுதான் பகவத் கீதையில் “சத்தியத்தை இனிமையாகவும் முழுமையாகவும் பேசுங்கள், உங்களது பேச்சு. மற்றவர்களது உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் தூண்டிவிடுவதாக அமையக் கூடாது, ஆன்மீகக் குண நலன்களைக்க் கடைப்பிடிக்கவேண்டும், ஆன்மீகப் பாதையில் செல்ல இந்தக் குணநலன்களை மனிதன் கைக்கொள்ள வேண்டும்" என்று சொல்லப்பட்டுள்ளது" 

என்று பகவான் தனது அருளுரையில் திருவாய்மலர்ந்தருளியிருப்பதை‌ நாம் அனைவரும் நமது வாழ்க்கையில் கடைப்பிடித்து எம்பெருமான் நமக்கு வழங்கியுள்ள மனிதப்பிறவியின் பலனை அடைவோம்.

அகில உலகும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.

சமஸ்தலோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

Sunday, March 27, 2022

பகவான் படைத்த சுயநலமற்ற‌ இயற்கை.

 ஓம் ஸ்ரீ சாயி ராம்

நாம் அனைவரும் வெவ்வேறு வடிவத்தைக்    கொண்டிருந்தாலும்.   வெவ்வேறு மொழிகளைப் பேசினாலும் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நாம் அனைவரும் இறைவனின் வடிவங்களே. 

பல்புகள் வெவ்வேறாக இருந்தாலும் அவற்றினூடாகப் பாயும் மின்சாரம் ஒன்றுதான்

அதைப் போலவே நாடுகள், உடல்கள், உணர்வுகள் இவையெல்லாம் வேறு வேறாக இருந்தபோதும் நம் அனைவரினதும் ஆத்ம தத்துவம்  ஒன்றுதான். 

ஆகவே ஜாதி. மதம். தேசியம் ஆகியவற்றின் பெயரால் நம்மிடமுள்ள வேறுபாடுகளைத் துறந்து. ஒற்றுமையின் மகத்துவத்தை எல்லோரிடத்தும் பரவச் செய்யவேண்டும். 

நாடுகள் பலவாக இருந்தபோதிலும் அவை இருக்கும் பூமி ஒன்றுதான். நகைகள் பல்வேறு வடிவங்களில் இருந்தாலும் அவற்றிலிருப்பது தங்கம்தான். பசுக்கள் பலவாக இருந்தாலும் அவற்றிலிருந்து கிடைக்கும் பால் ஒரே தன்மையானதே.

உடல்கள் பலவாக‌இருப்பினும் அனைத்திலும் இயங்கும் மூச்சுக் காற்று ஒன்றே!. 

இவ்வாறு அனைத்து உயிரினங்களிலும் இருக்கும் ஒற்றுமையைப் புரிந்து சேவை புரியும் போது தான் பரமானந்தத்தை‌அனுபவிக்க முடிகிறது. நாம் அனைவரும் அன்பிலேயே பிறந்தவர்கள், அன்பிலேயே வளர்ந்தவர்கள். அன்பிலேயே ஐக்கியமாகியுள்ளோம்.

பஞ்சபூதங்கள் சுயநலமற்ற தன்மைக்கு முழுமையான வடிவங்களாகத் திகழ்கின்றன. சூரியன், சிருஷ்டிக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்துக்கும் ஒளியையும் வெப்பத்தையும் அளித்து நாம் அனைவரும் ,நலமாக  வாழ  வளிவகுக்கிறது.

மரங்கள் கரியமில வாயுவைத் தன்னுள்ளே ஏற்றுப் பிராணவாயுவை வெளியிட்டு உயிர்கள் வாழ உதவுகின்றன.

தாய் போன்ற‌பூமி பொறுமைக்கும், தியாகத்துக்கும் எடுத்துக்காட்டாய் நமக்குப் பாடம் போதிக்கிறது. எந்த விதமான பிரதியுபகாரமும் எதிர் பாராமல் இவை மனித குலத்திற்குத் தொண்டாற்றுகின்றன. 

சுயநலமற்ற அன்பிற்கு இயற்கையை விடச்சிறந்த உதாரணம் வேறெதுவும் இல்லை.

இயற்கையில் பிறந்து, இயற்கையினாலேயே போற்றிப் பாதுகாக்கப்படும் மனிதன், இயற்கை வெளிப்படுத்தும், இத்தகைய நற்குணங்களைத் தன்னககத்தே கொள்ளாமல், சுயநலமும், சுயலாபமும் கொண்ட வாழ்க்கை வாழ்வது மிகவும் அவமானகரமானது. 

இளைய தலைமுறையினர் சுயநலத்தையும், சுயலாபத்தையும் ஒரு சிறிய துளி கூட மிச்சமிராமல் வேரோடு களையவேண்டும். உலக மாந்தர் அனைவரும்  நலமாக இருக்க வேண்டும் என விரும்பவேண்டும். 

ஸமஸ்த லோகா ஸூகினோ பவந்து (உலகம் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்)

Friday, March 25, 2022

பிரபஞ்சமே இறைவனில் அடங்கியுள்ளது என்பதை உணர்த்தும் அவதாரங்கள்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்

இறைவன் அன்பே வடிவானவர் இந்தப்பிரபஞ்சமே இறைவனுள் அடங்கியுள்ளது.

இவற்றை ‌இறைவனது மனித அவதாரங்கள் அனைத்திலிருந்தும் நாம் அறிந்துள்ளோம்

திரேதா யுகத்தில் இறைவன்‌ இராமபிரானாக அவதரித்தபோது தனது வாயைத்திறந்து பிரபஞ்சம் முழுவதும் தனது வாயினுள் இருப்பதைத் தாயார் கௌசல்யாதேவிக்குக் காட்டினார்.

துவாபரயுகத்தில் கண்ணபிரானாக அவதரித்து  தேவகி வயிற்றில் பிறந்து யசோதை மகனாக வளர்ந்தபோது  அவர் மண்ணை உணபதாகப் பலராமர் தாயாரிடம் கூறினார். அப்போது தான் மண்ணை உண்ணவில்லையென்றும் சந்தேகமிருந்தால் தனது வாயினுள் பார்காகும்படியும் கூறி‌ வாயைத் திறந்தார். அப்போது பாவகனான கண்ணபிரானின் வாயினுள் யசோதை பிரபஞ்சம் முழுவதையும் கண்டார்.

சீரடிபகவான் சிவலிங்கத்தை விழுங்கியபோது தன்னைத் தண்டிக்க வந்த பெண்ணிடம் தனது வாயைத்திறந்து பிரபஞ்சத்தைக் காட்டித் தன் தெய்வீகத்தை வெளிப்படுத்தினார்.

நமது சாயிநாதன் தாயார் ஈஸ்வரம்மாவிடம் தனது வாயைத் திறந்து பிரபஞ்சம் தனக்குள் அடங்கியிருப்பதைக் காட்டியுள்ளார்.

அன்ன்பையும், தியாகத்தையும நமது உயிர் மூச்சாகக் கடைப்பிடிக்கும்படி நமது பகவான் நமக்கு அறிவுறுத்தி வருகிறார்.

மேலும் நமது புலன்களை அடக்கி அதனை  நமது .கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்படியும்,‌ எந்த ஒரு ஆன்மீக சாதனையாக இருந்தாலும் அச்சாதனையில்  வெற்றி பெற வேண்டுமானால் புலனடக்கம் அவசியம் என்பதையும், புலனடக்கத்தின் மூலம் தெய்வீகத் தன்மையை அடையமுடியும்                என்பதையும் வலியுறுத்திவரும் நமது சாயிபகவான், கோபம் என்பது நாயின் இயல்பு என்றும் சலனப்பட்டுக் கொண்டேயிருப்பது குரங்கின் குணம் என்றும் கூறுகிறார். 

நமக்குக் கோபம் வரும் போது நான் நாயல்ல, நான் மனிதன் என்று நினைவு படுத்திக் கொள்ளவேண்டுமென்றும், அதைப் போலவே மனம் அலை பாயும் போது  நான் குரங்கல்ல, நான் மனிதன் என்ற திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள்ளவேண்டுமென்றும் எம்பிரான் அறிவுறுத்தி வருகிறார். 

சத்தியம். தர்மம். சாந்தி. பிரேமை. அஹிம்சை ஆகியவை தான் மனிதரின் உண்மையான  உயர் குணமென்றும் பகவான் வலியுறுத்தி வருகிறார்.

பிராண. அபான. வ்யான. உதான மற்றும் சமான என்பவையே பஞ்சப்பிராணன்கள் என்றும இவற்றில் ஏதாவது ஒன்றை இழந்தாலும் கூட வாழ்க்கையையே இழந்து விடுவதைப் போன்றது என்றும் எம்பிரான் எடுத்துரைக்கிறார். 

இக் குணநலன்களை இழந்து விட்டதால்தான்  மனிதன் இன்று வாழும் பிணமாக இருக்கிறான். எனவே நம்பிக்கையுடன் இக்குண நலன்களை நாம் அனைவரும்  வளர்த்துக் கொள்ளவேண்டும். அவற்றைப் போற்றி வளர்த்து, அவற்றிடமிருந்து கிடைக்கும் ஆனந்தத்தை அனுபவிக்கவேண்டும். 

எங்கே நம்பிக்கை இருக்கிறதோ, அங்கே அன்பிருக்கிறது. எங்கே அன்பிருக்கிறதோ, அங்கே அமைதியிருக்கிறது. எங்கே அமைதியிருக்கிறதோ, அங்கே சத்தியம் இருக்கிறது. எங்கே சத்தியம் இருக்கிறதோ, அங்கே கடவுள் இருக்கிறார். எங்கே கடவுள் இருக்கிறாரோ, அங்கே ஆனந்தம் நிறைகிறது. 

எனவே புலன்களைக் கட்டுப்படுத்தி அவற்றை இறேவனையடையும் பாதையில் திருப்பி நாம் பெற்ற இந்ந மனிதப்பிறவியின் பலனான 'நாம் இறைவனே' என்ற உண்மையை உணர்ந்துகொள்வோம்.

ஒவ்வொரு சுவாசத்தின் போதும் நம்மையறியாமலே நாம் "சோ...ஹம்" , "சோ...ஹம்" அதாவது நான் இறைவன், நான் இறைவன்  என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்பதை நினைவில் வைத்து பகவானின் அருளில் திளைத்திருப்போம்.

அகில உலகும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.

சமஸ்தலோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

Thursday, March 24, 2022

பகவானையே கொலைசெய்ய முயன்று பகவானிடமே சரணடைந்த தீவிரவாதி

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

இந்தச் சம்பவம் 1967ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி நடைபெற்றது.

தீவிரவாதப் போக்கைக் கொண்ட கம்யூனிஸ்ட் இளைஞர்கள் சிலர் இறைவனின் பெயரைச் சொல்லி உலகை ஏமாற்றும் போலிச்சாமியார்கள் என அவர்கள் கருதிய 27 சமயத் தலைவர்களைக் கொலை செய்யத் திட்டமிட்டனர்.

அவர்களின் திட்டத்துக்குக் காரணம் பல போலிச் சமயத்தலைவர்கள் பல மடங்களை ஸ்தாபித்து,  ஊழல்புரியும் அரசியல்வாதிகள் மற்றும் சமூகத்தில் உயர் அந்தஸ்திலுள்ளவர்களின் துணையுடன் இந்தியாவின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருப்பதாக அவர்கள் கருதியதாகும். எனவே அவர்கள் 27 சமயத் தலைவர்களின் பெயர்களைத் தெரிவு செய்தனர். குலுக்கல் முறை மூலம் யார் எந்தச் சமயத் தலைவரைக் கொலைசெய்யவதென அவர்கள் முடிவு செய்தனர்.

அவர்களின் இந்த முடிவு எதிர்காலத்தில் இந்தியா தடைகளெதுவுமின்றி‌‌ முன்னேற்றமடையவேண்டும் என்ற கருத்துடனேயே எடுக்கப்பட்டது. அவர்களின் நோக்கம் சரியானதாக இருந்தபோதிலும் அவர்களது கொலை முயற்சி தவறானது என்பதை அவர்கள் உணரவில்லை.

அவர்களுடைய திட்டப்படி 27 சமயத் தலைவர்களேயும் 1967ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி ஒரேசமயத்தில் கொலைசெய்வதாக முடிவு செய்யப்பட்டது. 

குலுக்கல்முறையின்போது கேரளத்தைச் சேர்ந்த இளைஞரொருவருக்கு நமது சாயிநாதனின் கதையை முடிக்குமம்படியான துண்டுச் சீட்டுக் கிடைத்தது. 

அதற்கென உள்ளே குத்துக் கத்தியுடனும் கத்தியைச் உடலினுள் ஊடுருவச்செய்து உயிரைப்பறிக்கும் பொத்தானும் வைத்து அமைக்கப்பட்ட 'மவுத் ஆர்கன்' (mouth organ) போன்று வடிவமைக்கப்பட்ட ஆயுதமும் அவரிடம் கொடுக்கப்பட்டிருந்தது.

தனது செயலை நிறைவேற்றுவதற்கு இரண்டொரு நாட்களின் முன்னேயே அவர் பிராசாந்தி நிலையத்துக்கு வந்து பக்தர்களுக்கு மத்தியில் அமர்ந்து நமது பகவானின் நடவடிக்கைகளைக் கண்காணித்துக் கொண்டிருந்தான்..

பகவானும் எதுவும் அறியாதவர் போலப் பக்தர்களுக்குத் தரிசனமளித்தார். இது நடைபெற்றது 1967.17 அன்றாகும்.

அன்று இரவு யாரின கண்களிலும் படாமல் பிரசாந்தி நிலைய மாடிக்குச் சென்று பகவானின் படுக்கையறைக்குள் நுழைந்து நோட்டமிட்டான் அந்த இளைஞன். பகவான் வழக்கம்போல் தனது சிறிய படுக்கையறையில் படுத்திருந்தார். ஆனால் நமது மாயச் சாயிக்கண்ணன் படுத்திருந்தது அந்த இளைஞனின் கண்களுக்குத் தெரியவில்லை. எங்கும் தேடியும் பகவான் படுக்குமிடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் இளைஞன் திரும்பி  வந்துவந்துவிட்டான்.. 

அடுத்தநாள் பகதர்களுக்குத் தரிசனமளிக்கும்போது தனது தனிப்பட்ட நேர்காணலுக்கென (interview) அந்த இளைஞனை பகவான் அழைத்தார். அந்த இளைஞன் அதனை மறுக்க முயன்றும் முடியாத நிலையில் பகவானின் இன்ரவியூ அறையினுள் சென்றான்..

இனரவியூவின்போது சாயிநாதன் புன்சிரிப்பொன்றை உதிர்த்தபடி "உண்மையில் இறைவன் இருக்கிறாரா" என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞன் " இவ்வுலகில் இறைவன் என்றொருவர் இல்லவேயில்லை" என்று பதிலிறுத்தான். பகவானும் சில வினாடிகள் மௌனமாக இருந்துவிட்டு "நீ சொல்வது நூறு சதவீதம் உண்மை"  என்று கூறினார். இதனால் ஆத்திரமும் எரிச்சலும் அடைந்து " அப்படியானால் நீ ஒரு பொய்யன். உலகை ஏமாற்றுபவர். வித்தைக்காரன்" எனச் சத்தமிட்டான் இன்ரவியூவைப் புன்சிரிப்புடன் பகவான் முடித்துக் கொண்டார்.

இது நடைபெற்றது  18ம் திகதி பகலில். 

அன்றிரவு வழக்கத்துக்கு மாறாக, பகவான் ஒரு கட்டிலில் பிரசாந்தி நிலைய பஜனை மண்டபத்தில் படுத்திருந்தார். அப்போது குல்வந்த் ஹால் அமைக்கப்படவில்லை.

பகவானின் அருகில் அந்த இளைஞன் படுத்திருந்தான். சரியாக மண்டபத்தில் இருந்த சுவர்மணிக்கூண்டு பத்துமணியை ஒலித்தவுடன் பகவான் எழுந்து உட்கார்ந்து, அருகில் தூங்காமல் படுத்திருந்த அந்த இளைஞனிடம் நேரத்தைக் கேட்டார். இளைஞனும் பத்து மணி என்று சொல்லிவிட்டுக் கண்களை மூடியபடி படுத்திருந்தான். அவனருகில் அவனது ஆயுதம் இருந்தது.

10.30 மணிக்குச் சுவர்க்கடிகரம் ஒலியெழுப்பியது. உடனே பகவான் எழுந்து உட்கார்ந்தார் இதனை எதிர்பார்க்காத இளைஞனும் எழுந்து உட்கார்ந்தான். ஆனால் அவனது ஆயுதத்தைக் காணவில்லை. 


பகவான் கையை அசைத்தார். இளைஞனின் மவுத் ஆர்கன் ஆயுதம் பகவானின் கையிலிருந்தது. அதைப்பார்த்த அந்த இளைஞன் "அது என்னுடையது" என்று சப்தமிட்டான். 

பகவான் தனது மனதைமயக்கும் புன்னகையுடன் "இப்பொழுது சரியாகப் பத்துமணி முப்பது நிமிடம். நீ இன்றிரவு 10.30 க்கு எனது இதயத்தில் பாய்ச்சி என்னைக் கொலைசெய்யப் போவதாக‌ உனது டயரியில் எழுதி வைத்துள்ளாயல்லவா?  செய்வதாகத் தீர்மானமெடுத்த செயலைச் செய்து முடிக்க வேண்டியது உனது கடமை. எனவே இந்த மவுத் ஆர்கனை எனது மார்பில் இதயத்தின் நேராக வைத்து இந்த பொத்தானை அழுத்து. உடனே உள்ளேயிருக்கும் கத்தி எனது இதயத்தைத் துளைத்துவிடும். தாமதிக்காதே. தீர்மானித்த வேலையை முடித்துவிடு, தயவு செய்து என்னைக் கொன்றுவிடு. கொன்றுவிடு" என்று அந்த இளைஞனிடம் கூறினார்.

இளைஞன் நடுங்கத் தொடங்கினான். அவனது உடல் குளிர ஆரம்பித்தது. தனது பலம் அனைத்தையும் இழந்த அவனது கரம் பகவானின் மடியில் விழுந்தது. 
அதேவேளை பகவானின் கையிலிருந்து மவுத் ஆர்கன் நழுவி அந்த இளைஞனின் கால்விரலின்மேல் விழுந்தது. ஆயுதம் கால்விரலில் ஏற்படுத்திய காயத்திலிருந்து இரத்தம் வழிந்தது.

உடனே பகவான் தனது அங்கியின் துண்டொன்றைக்கிழித்து.அவனது காயத்தில் கட்டினார்.

 தலையை அன்புடன் வருடிய பகவான், தனக்கேயுரிய தெய்வீகக் கருணையுடன் "நீங்கள் நாட்டைக் காக்க முடிவு செய்தது மிகவும் சரியானதே. ஆனால் நீங்கள் அதனை நிறைவேற்றத் தீர்மானித்த முறைதான் தவறானது. நீ இனி உனது தாய் தந்தையரிடமோ வேறெங்கோ போகாமல் என்னுடனேயே இரு" என்று அவனது கண்களுள் உற்று நோக்கியவாறே கூறினார்.

இளைஞன் மனம் திருந்தினான். அவனது கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது.

அந்த இளைஞனைத் தனது  சேவையில் அமர்த்தினார் எம்பெருமான். 

இப்போது அவனுக்கு வயது சுமார் 65. இன்னும் புட்டபர்த்தியிலேயே இருக்கிறான்.

சுமார் ஒருவாரத்தின் முன் சாயிநாதனின் பள்ளி மற்றும் கல்லூரி நிகழ்ச்சியொன்றின்போது
 முதலாவது தடவையாகத் தான் யாரென்பதையும் பகவானின் கதையைமுடிக்கவென்று பிரசாந்தி நிலையத்துக்கு 1967 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வந்த தனது கதையை முடித்த பகவானுடைய கருணையால் இன்றும் புட்டபர்த்தியில் வசிப்பதாகத் தனது வாயாலேயே கூறியுள்ள தகவலை அந்த நிகழ்ச்சியில் பங்குபற்றிய சாயிபக்தர் ஒருவர் சில‌நாட்களின்  முன் வெளியிட்டுள்ளார்.

மேலும்  ஏனைய மதத் தலைவர்களைக் கொலைசெய்யும் நோக்கத்துடன் புறப்பட்ட ஏனைய 26 இளைஞர்களும் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், சாயிநாதனின் கருணையால்தான் அவர் சாயிநாதனைக் குறிவைத்துப் புட்டபர்த்திவந்து சாயி சேவகனாக மாற்றப்பட்டதையும் அவர் உயிர் பிழைத்திருப்பது பகவானின் கருணையால்தான் என்பதையும் மனமுருகிக் கூறியுள்ளார்.

எம்பெருமானின் கருணையே கருணை.

சமஸ்த லோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்
.

மனிதர்கள் பேரின்பவாழ்வை அடையும் வழி.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

கடவுள் எங்கும் நிறைந்தவர். எல்லாம் வல்லவர். எல்லாம் அறிந்தவர். நம் அனைவருக்கும் என்ன தேவை, எபாபொழுது தேவை போன்ற அனைத்தையும் அறிந்தவர். 

கடவுளின் சங்கல்பம் என்ன என்று யாராலும் அறிந்துகொள்ள முடியாது. கடவுள் எங்கும் நீக்கமற 
நிறைந்துள்ளார், எங்கு பார்த்தாலும் அங்கெல்லாம் வியாபித்துள்ளார் என்பதை நாம் ஒருபொழுதும் மறக்கக் கூடாது. 

அப்படிப்பட்ட கடவுளை ஜபம், யாகம், தியானம் போன்றவை மூலமாக மாத்திரம் நம்மால் அடைந்துவிட முடியாது. மனிதன் பலவீனங்களின் வடிவானவன் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் மனிதன் பாவியல்ல,‌ பலவீனமானவனல்ல. இறைவனின் வடிவமே மனிதன் என்றும்‌ மனிதனிடம் 85 விழுக்காடு தெய்வீகமும் 5 விழுக்காடு பலவீனங்களும் உள்ளதாகப் பகவான் கூறுகிறார்.

மனிதர்களின் மனத்தை ஐம்புலன்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து  புலனின்பங்களை நோக்கி இழுத்துச் செல்வதால், மனித மனமும்  உடலை இறைவனை நோக்கிப் பயணம் செய்யாமல் தடுத்துத் தவறான பாதையில் வழிநடத்திச் செல்கிறது.  இதனால் தீய நடவடிக்கைகளில் ஈடுபடத்தூண்டப்பட்டு இறைவனை நோக்கிச் செல்லும் பாதையிலிருந்து விலகி இறைவன் படைத்த தன் நோக்கத்தைத் தவறவிட்டுவிடுகிறான்  

இதனால் இறைவன் கொடுத்த 85 விழுக்காடு தெய்வீகம் குறைந்து தீய குணங்களால் நிரப்பப் படுகிறான். இதனால் தான் தனது கடவுளை நோக்கிய பாதையைத் தவறவிட்டு மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். 

கடவுள் எப்படிப்பட்டவர் என்று யாராலும் சொல்லமுடியாது. கடவுள் ஒருவரே. ஒவ்வோரு மொழியிலும் கடவுளைக் குறிக்கும் சோல்லைப் பயன்படுத்தி வழிபடுகிறார்கள். 

உதாரணமாக உலகுக்கு ஒரு சூரியன்தான் ஒளிகொடுக்கிறார். ஆங்கிலேயர் சூரியனை 'சன்' ன்று கூறுகிறார்கள். தமிழர்கள் சூரியன் என அழைக்கிறார்கள். இந்தியில் 'ரவி' என அழைக்கிறார்கள். ஜப்பானியர்கள் 'ரயோ: என அழைக்கிறார்கள். ஆனால் எல்லாப் பெயர்களும் ஒரே சூரியனைத்தான் குறிப்பிடப்படுகிறது.

அதே போல் நீங்கள் எந்தப் பெயர், எந்த உருவம் என்பவற்றை பயன்படுத்தி வணங்கினாலும் அந்த வணக்கம் ஒரே இறைவனையே சென்றடைகிறாது. இந்த ரகசியத்தை மனிதர்கள் புரிந்துகொள்வதில்லை. 

அதிகமான மக்களுக்கு ஆன்மீகத்தில் நோக்கம் இல்லை. சாதாரண மனிதர்களிலிருந்து மகான்கள் வரையில் யாக யக்ஞங்களில் திருப்தியடைந்து விடுகிறார்கள். கடவுள் நன்நடத்தையையும் ஆன்மீகத்தையும் தான் எதிர்பார்க்கிறார். 

இவ்வுலகில் செல்வமும் சிபார்சும் தான் முதலிடம் பெறுகின்றன. இது மிகுந்த அறியாமையாகும். இந்த அறியாமையிலிருந்து வெளியேறாத வரை கடவுளைப் புரிந்துகொள்ள முடியாது. 'நான்' என்னும் ஆணவமும் 'என்னுடையது' என்னும் அகம்பாவமும் உள்ள இதயங்களைக் கடவுள் விரும்புவதில்லை.

.உலகில் நாமும் நாம் சேர்த்து வைப்பது அனைத்தும் என்றோ ஒருநாள் அழிந்துவிடும். 

மனித உடலும் ஒருநாள் அழிந்துவிடும். எனவே பிறந்து இறக்கும் இவ்வுலக வாழ்வின் துயரங்களிலிருந்து விடுதலை பெற்று இறைவனுடன் இரண்டறக்கலப்பதற்கான சத்தியம், தர்மம், சாந்தி, பிரமை, அகிம்சை, திரிகரணசுத்தி என்பவற்றைக் கடைப்பிடித்து பிறவிப் பெருங்கடலிலிருந்து மீட்சியைப் பெறுவோம்.

உடலுக்கு உணவளிப்பது போன்று நமது ஆத்மாவுக்குரிய உணவையும் அளித்து இறைவனுடன் ஒண்றிணைந்து பேரின்பத்தை அடைவதே நமது நோக்கமாக இருக்கவேண்டும்.. 

அனைத்து உலகும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.

சமஸ்த லோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

Wednesday, March 23, 2022

நமது செயல்கள் அனைத்தும் பிறரின் நன்மைக்காக இருக்க வேண்டும்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்

நமது சாயிநாதன் தனது அருளுரைகளில் 

"எந்த ஒரு செயலைச் செய்யும்போதும், அனைவருடைய நலனைக் கருத்தில் கொள்ளுங்கள். வாழ்க்கையில் ‌சுயநலத்தைக் கடைப்பிடிக்காதீர்கள்.

உலக மக்கள் அனைவருடைய நலனையும் கருத்தில் கொண்டு கடமைகள் அனைத்தையும் செய்யுங்கள். உங்களுக்குக் கிடைக்கக்கூடிய தனிப் பட்ட பலன்களை மட்டும் கருத்தில்கொண்டு செயல்களைப் புரியாதீர்கள். 

ஜபம், தியானம் போன்றவற்றைச் சுயநல நோக்கத்துடன் செய்யாமல் உலக நன்மைக்காகச் செய்யுங்கள். உஙகளுக்குப் பிடித்த இறைவனுடைய பெயரைச் சொல்லியவாறு, நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்யுங்கள்.

நீங்கள் ஒருவருக்கு உதவும் போது "நான் உதவி செய்கிறேன்" என்ற எண்ணமில்லாமல் சமுதாயத்தின் ‌நலனுக்காகச் சேவை புரியவேண்டும். இதுவே உண்மையான சாதனையாகும். நீங்கள் யாருக்குச் சேவை செய்தாலும், இறைவனுக்குச் செய்யும் சேவையாகக் கருதியே‌ செய்யுங்கள். 

இதயத்தில் ‌அன்பு‌ம், கருணையும் நிரம்பியிருந்ததால் ஒரு உயிரற்ற சவம், ஒரு நோயாளி, வயது முதிர்ந்த ஒரு மனிதன் ஆகியவர்களைப் பார்த்ததுமே புத்தருக்கு உலகின் நிலையற்ற தன்மை பரிந்து அவரால் பரிநிர்வாண நிலையை அடையமுடிந்தது. 

நீங்கள் எத்தனையோ சவங்களையும், வயது முதிர்ந்தோரையும், நோயாளிகளையும் பார்க்கிறீர்கள்.. ஆனால் பலரிடம் அத்தகைய மனமாற்றம் ஏற்படாதது வருந்தத்தக்கது"
என்று கூறுகிறார். 

மேலும், துரதிஷ்டவசமாக, பலரின் இதயங்கள் கடினமான பாறைகளாக மாறிவிட்டிருப்பதாகவும்,. பிறரின் துயரங்களை நமக்கு ஏற்படும் துயரமாகக் கருதிப் பிறரின் துயர்களைத் துடைக்க வேண்டும் என்றும்  பரிநிர்வாணம் அல்லது பந்தவிடுதலை அடைய வேண்டுமென்றால், அடுத்தவரது துயரத்துடன், தன்னையும் இணைத்துப் பார்த்து, அவர்களது துயர்களைக் களைய முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்‌என்றும் நமது சாயிபகவான் தனது அருளுரைகளில் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

எனவே நாம் அனைவரும் தன்னலமற்ற, தியாக மனப்பான்மையுடன் கூடிய செயல்களைப் புரிவதன் மூலம் நமது சாயிநாதனின் பரிபூரண அருளைப் பெறுவோம்.

உலகம் முழுவதும் நலமாக வாழ வாழ்த்துவோம்.

சமஸ்தலோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

Sunday, March 20, 2022

சந்திரனில் சாயிநாதனைத் தரிசித்த விண்வெளி வீரர் ஆம்ஸ்ரோங்கின் அனுபவம்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்

இன்று மனிதன் சந்திரனில் கால் பதித்து தனது விண்வெளி ஆராய்ச்சியின் வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளான். ஆனால் சந்திரனில் கால் பதித்து நடந்ததாகக் கூறும் விஞ்ஞானிகள் அதன் மூலம் எதனையும் சாதிக்க முடியவில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.

நீல் ஆம்ஸ்றோங் சந்திரனில் கால் பதித்து நடந்த முதலாவது மனிதன் என்ற பெருமையைப் பெற்றவர்வர். ஆனால் நீல் ஆம்ஸ்ரோங்கும் எட்வின் அல்ட்ரினும் பயணம் செய்து சந்திரனை அடைந்த விண்வெளிக் கலசத்திலிருந்து உடனடியாகச் சந்திரத் தரையில் இறங்கிக் கால்பதிக்காமல் பாரம்பரியமான இறைவணக்கத்தில்தான் ஈடுபட்டனர்.

மேலும் சந்திரனிலிருந்து மீண்டும் பூமியை நோக்கிப் பயணம் செய்ய முயற்சித்தபோது அவர்களின் சந்திரக் கலசம் இயங்கவில்லை‌. 

எனவே அவர்கள் இருவரும், தாய்க்கலத்தில் இருந்தபடி சந்திரனைச் சுற்றியபடியே இருந்த அந்த விண்வெளிப் பயணத்தின் தலைவர் மற்றும் அமெரிக்காவின் சந்திரப்பயணக் கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்த விஞ்ஞானிகள் அனைவரும் தமது முழுத் திறமையையும் பயன்படுத்தி சந்திரனிலிறங்கிய கலத்தை இயக்க முயற்சித்தனர். 

ஆனால் அவர்களால் சந்திரனிலிருந்த விண்கலத்தைப் புறப்படச் செய்த முயற்சிகளெதுவும்
வெற்றியளிக்கவில்லை. எனவே இறைவனிடம் உதவிகோருவதைத் தவிர அவர்களால் வேறெதுவும் செய்ய முடியவில்லை.

எதேசமயம் அந்த அற்புதம் நிகழ்ந்தது.

நீல் ஆம்ஸ்ரோங் விண்கல யன்னல் வழியே வெளியே   பார்த்தபோது செந்நிற ஆடையணிந்து தலை முழுவதையும் கூடைபோல் மூடிய கரும் முடி நிறைந்த ஒருவர் கைகளில் ஏதோவொரு பொருளைத் தூக்கியபடி  சந்திரக்கலத்தின்கீழ் சென்றதைக் கண்டார். அதன்பின் என்ன நடந்தது என்று அவருக்கு எதுவும் தெரியவில்லை. 

ஆனால்  விண்வெளி உடை அணியாமல் ஒரு மனிதர் சந்திரத் தரையில் நடந்து சென்றதை அவரால் நம்பமுடியவில்லை. இதைக்கண்டு அதிர்ச்சியும்‌ பயமும் அடைந்த ஆம்ஸ்ரோங் விரைவில் அங்கிருந்து புறப்படுவதற்கு முயற்சித்தார். எனவே மீண்டும் விண்கலத்தை இயக்க முயன்றார்.

உடனடியாக விண்கலம் இயங்க ஆரம்பித்துச் சந்திர த் தரையிலிருந்து புறப்பட்டுத் தாய்க்கலத்துடன் இணைந்து பூமிக்குத் திரும்பியது. விண்வெளிவீரர்கள் மூவரும் பாதுகாப்பாகப் பூமிக்கு வந்து சேர்ந்தனர்
.
பூமிக்கு வந்தபின் தான் சந்திரனில் பார்த்த மனிதன் யாராக இருக்க முடியும் என்று ஆராயத் தொடங்கினார்.  அப்போது பிரசாந்தி நிலையத்தைப்பற்றியும்  நமது சாயிநாதனைப்பற்றிய விபரத்தையும் அறிந்த அவர் பிரசாந்தி நிலையதாதுக்கு வந்து சுவாமியைத் தரிசித்து எம்பெருமானின் அருள் பெற்றுப் பெரும் பேறுபெற்றார்.

மேலும் சந்திரனிலிருந்த கற்களைச்சேகரித்து வந்த விண்வெளி வீரர் ஒருவர்,  தனது  சந்திரப் பயணத்தின்மூலம் சாதாரண கற்களையே எடுத்துவர முடிந்ததையும் நமது சாயிநாதனைத் தரிசிக்கப் பிரசாந்தி நிலையம் வந்த பயணமே தனது வாழ்க்கையின் பெரும்பேறு என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.

சமஸ்த லோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

Saturday, March 19, 2022

சாயிநாதனே சத்தியம்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

சுவாமி தனது அருளுரைகள் அனைத்திலும் சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை,  அகிம்சை ஆகிய நற்பண்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறி‌வருகிறார்.
அதேவேளை மனம், வாக்கு, செயல் என்பன ஒருங்கிணைந்திருப்பதன் அவசியத்தை ‌அதாவது திரிகரண‌சுத்தியைப் பற்றியும் வலியுறுத்தி வருகிறார்.

சத்தியத்தைப்பற்றிக் குறிப்பிடும்போது பாண்டவர்களில் மூத்த சகோதரரான தர்மராஜரின் செயல்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

திரேதாயுகத்தில் கண்ணபிரானாக அவதரித்த அதே சாயிக்கண்ணன் தனது திருவாயால் உரைத்தவற்றை விட  வேறெவை உண்மையாக இருக்க முடியும்.

திரதராஷ்டிரனின் கபட அழப்பை ஏற்றுச் சூதாடச் சம்மதித்த தருமராஜன் தனது மனைவி துரௌபதி,  தம்பிமார் மற்றும் சகலவற்றையும் இழந்து கானகத்துக்குச் சென்ற விடயம் அனைவருக்கும் தெரிந்ததே.

சூதாட்டத்தின் ஆரம்பத்தில் துரியோதனன் தனக்குப் பதிலாகச் சகுனியைச் சூதாட நியமித்தான். ஆனால் தருமர் தான் சூதாடுவது கண்ணபிரானுக்குத் தெரியக்கூடாதென்றே நினைத்தார். அதனால்தான் நடந்தவை, நடைபெறுபவை, நடக்கவிருப்பவை அனைத்தையும் அறிந்தவரும் இப்பிரபஞ்சத்தையை இயக்குபவருமான கண்ணபிரான்  சூதாட்ட மண்டபத்துக்குள் நுழையாமல் தன்னிடம் உதவி கோரும்வரை காத்திருந்தார.


தருமர் கண்ணபிரானைத் தனக்காகச் சூதாட அழைத்திருந்தால் மகாபாரதமே திசைமாறியிருக்கும்.

அதேவேளை துச்சாதனன் தனது துகிலை உரியமுயன்றபோது தன்னைக் காக்கும்படி பரிபூரண சரணாகதியடைந்து "இதயநிவாசா காத்துருள்வாய்" என்று திரௌபதி கூவியழைத்தபோது துச்சாதனன் மயங்கிவிழும்வரை சேலையை வளரவைதுக் காத்தருளினார்.

.அதேவேளை அதர்மத்தைவேரறுத்து தர்மத்தைக் காக்கவென்று
 அவதரித்த கண்ணபிரானின் அவதார நோக்கமும் இங்கு  குறிப்பிடப்பட வேண்டியதே.

நமது சாயிக்கண்ணனும் சத்தியத்தைப்பற்றிய தனது அருளுரைகளின்போதெல்லாம் தானே சத்தியம், தனது வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் அனைத்துமே சத்தியம் என்று வலியுறுத்தி வருகிறார்.

எனவே சாயிநாதனின் அருளுரைகள் அனைத்தும் நம்மை உய்விக்கவே கூறப்பட்ட வார்த்தைகள் என்னும் நம்பிக்கையுடன் வளம்பெறுவோம்.

சமஸ்த லோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

Friday, March 18, 2022

குடும்ப வாழ்விலிருந்தபடியே இறைவனை அடையும் வழி.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

சதுர்யுகங்கள் எனப்படும் நான்கு யுகங்களில் கடைசியான கலியுகத்தில் மனிதவாழ்க்கை உலகவாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டு, சுயநலம், ஆணவம், அகங்காரம், கஞ்சத்தனம், பேராசை என்பன அதிகரித்துக் காணப்படுகிறது. 

அதனால் இயற்கை அனர்த்தங்களான பூகம்பம், சூறாவளி, ஆழிப்பேரலை போன்றவற்றாலும், கொரொணா போன்ற மனிதரால் ஏற்படுத்தப்படும் தொற்றுநோய்கள், அணு ஆயுத யுத்தங்கள் போன்ற மனிதரால் ஏற்படுத்தப்படும் செயற்கை அனர்த்தங்களாலும் மனித இனம் பாதிக்கப்படுகிறது.

முந்தைய யுகங்களிலும் போர் நடைபெற்றது. ஆனால் யுத்த நியதிப்படியே போர்கள் நடைபெற்றன‌. போர்கள் போர்க்களத்தில்தான் நடைபெற்றது.
ஆனால் கலியுகத்தில் நடைபெறும் யுத்தங்களில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். யுத்த களத்தில்தான் யுத்தம் நடைபெறும் என்ற வரையறை கைவிடப்பட்டு விட்டது.

முந்தைய யுகங்களில் கடவுளை அடைய நோன்புகள். துறவறம் போன்ற விஷயங்களில் ஈடுபடவேண்டியிருந்தது. ஆனால் கலியுகத்தில் நாமஸ்மரணம், பஜனை என்பன மூலமாக இலகுவாக இறைவனை அடையமுடியும். 

அதுமட்டுமன்றி துறவறத்தில் இருக்கக்கூடிய கடுமையான நெறிமுறைகளைக் கைக்கொள்ளாமலேயே சமுதாயத் தொண்டு புரிந்து, அதனையே இறைவனுக்குச் செய்யும் சேவையாக அர்ப்பணித்து இறைவனை மிக எளிதாக அடைந்துவிடலாம்.

சத்தியம், தர்மநெறிமுறை, அமைதி, அன்பு, அகிம்சை என்பவற்றைச் சிறிதும் சுயநல நோக்கமின்றிக் கடைப்பிடிப்பதன் மூலம் இறைவனின் அனுக்கிரகம் கலியுகத்தில் மிக எளிதாகக் கிடைத்து விடும் என்று சுவாமி பலமுறை தனது அருளுரைகள் மூலம் கூறியிருக்கிறார். 

தனிப்பட்ட நபர்கள் சமுதாயத்தை மேம்படுத்துவதற்காகத் தியாகம் செய்வதன் மூலம் தமது சேவையை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்றும் சுவாமி சொல்கிறார். 

HANDS THAT SERVE ARE HOLIER THAN THE LIPS THAT PRAY என்று சுவாமி கூறுகிறார். 

அதாவது பிரார்த்தனை செய்யும் உதடுகளைவிடச் சமுதாயத்துக்குச் சேவை செய்யு கரங்களே புனிதமானவை என்பதே சுவாமியின் வாக்கு. 

தனி மனிதனுக்கு அளவற்ற ஆசைகள் இருக்கின்றன. ஆசைகளுக்கு வரம்பே கிடையாது. அளவும் கிடையாது. 

ஆனால் தமது ஆசைகளை நிறைவேற்றுவதில் முழு அளவில் ஈடுபடும் மனிதர்கள் தமது வாழ்நாளில் இன்பத்தையும், சுகத்தையும் சாந்தியையும் அனுபவிப்பதே இல்லை. 

அவர்கள் சுக துக்கங்களுக்கு இடையே மாட்டிக்கொண்டு விழிக்கிறார்கள். அவர்கள் தம்மை  உயர்த்திக் கொள்ள வேண்டுமென்றால், அளவுகாகுமீறிய ஆசைகளையும் பற்றுக்களையும் கைவிடவேண்டும். 

சாதாரண உலக வாழ்க்கையில் துறவறத்தை எப்படிக் கடைப்பிடிக்க முடியும் என்பதையும் பகவான் HANDS IN THE SOCIETY AND HEADS IN THE FOREST என்று கூறுகிறார். 

நாம் குடும்பவாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதிலும், நமது சிந்தனை, இறைவன் மீதே இருக்கவேண்டும் என்பது இதன் பொருள். 

தாமரை தண்ணீரில் வளர்கிறது. ஆனால் தாமரை இலையில் தண்ணீர் சிறிதளவுகூட ஒட்டிக்கொள்வதில்லை. அதேபோல குடும்பம் மற்றும் உலக இன்பங்களுக்கு மத்தியில்
 வாழ்ந்து கொண்டே பற்றற்ற ‌வாழ்வை நம்மால்  கடைப்பிடிக்க முடியும் என்று சுவாமி நமக்கு வழிகாட்டுகிறார்.

சமஸ்தலோகா சுகினோ பவந்து.

Thursday, March 17, 2022

பரமனுடன் பக்தன் தொடர்பேற்படுத்தும் வழி.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

அன்பின் திருவுருவங்களே,

பகவான் ‌நமக்கு ஐம்பொறிகளான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய தேகத்தின் அங்கங்களை அளித்துள்ளார். அவற்றின் மூலம் ஒலி, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய ஐம்புலன்களை உணர்கிறோம்.

நமது ஐம்புலன்களும் ஐம்பொறிகளும் நல்வழியிலேயே செயல்பட வேண்டும்.

இறைவனுடைய நாமத்தை உச்சரித்தபடி நம்மாலியன்ற அளவு பிறருக்குச் சேவையாற்ற வேண்டும். நமது சேவைகளை சுயநலமற்றதாகவும் இறைவனுக்கு அர்ப்பணமாகவும் செய்யவேண்டும்.

 மனிதர்களாகிய நாம் இந்தச் சமுதாயத்தின் அங்கங்கள் என்பதை உணர்ந்து சமுதாயத்தின் பிற அங்கங்களான அனத்து உயிரினங்களுக்கும் பயன்படக்கூடியபடி பொதுநலத்துடன் செயல் புரிய வேண்டும். எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும். மனதால் கூட எவருக்கும் தீங்கு நினைக்கக் கூடாது.

சமுதாயம் இந்த பிரக்ருதியின் அங்கம், பிரக்ருதி கடவுளின் அங்கம். இதன் மூலம், தனிப்பட்ட மனிதனுக்கும், இறைவனுக்கும் இடையே உள்ள அத்தியந்த உறவு பற்றிய உண்மையை நாம் புரிந்து கொள்ளலாம். 

உயிரற்ற ஜடங்களான தொலைபேசி போன்றவைக்கு இணைப்புகள் ஏற்படுத்த முடியுமென்றால்> மனிதனுக்கும், இறைவனுக்கும் இடையே அறுக்கமுடியாத இணைப்பு இருப்பதை மறுக்க முடியுமா? 

தொலைபேசி போன்ற இணைப்புகள் எல்லாம் செயற்கையானவை. ஆனால் இறைவனுக்கும் பக்தர்களுக்கும் இடையேயான இணைப்பு இதயம் சம்பந்தப்பட்டது. 

தோலைபேசி இணைப்புக்களில் ஒன்று நம்பர் மூலம் அழைக்கும் முறை. அதனை யார் வேண்டுமானாலும் ஏற்றுப் பேசலாம். இரண்டாவது தனிப்பட்ட நபருக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்டது. இவ்வழைப்பை நாம் அழைக்கும் நபர் மாத்திரமே எடுத்துப் பேச முடியும்.

அதைப்போல உங்களது இணைப்புகள் எல்லாம் நேரடியான இறைவனுடனான இணைப்பாக இருக்க வேண்டும். 

உங்களுக்கு இறைவன் வேண்டும் என்ற உண்மையான உணர்வு மட்டும் இருந்தால் இறைவனே நேரில் உங்களிடம் வந்து பேசுவார். 

நீங்கள் நம்பரைக் கொண்டு அழைப்பது போன்று பேசமுயன்றால், இறைவன் பதில் கூறமாட்டார். இங்கே நம்பர் கால் என்பது எதிர் மறையான எண்ணங்களாகும் ஆகவே எதிர் மறையான (நெகடிவ்) எண்ணங்களை விட்டு விட்டு நேர்மறையான (பாஸிட்டிவ்) எண்ணங்களை வளர்த்துக் கொண்டால் இறைவன் நேரடியாக நம் முன்னே தோன்றுவார். நம்முடன் பேசுவார். நாம் முன்செய்த கர்ம வினைகள் அனைத்தையும் அகற்றி மறுபிறவியற்ற பெறற்கரிய பெரும்பேற்றை அருள்வார்.

அகில உலகும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.

சமஸ்த லோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

Wednesday, March 16, 2022

புலனடக்கத்தின் மகத்துவம்

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

அன்பின் அவதாரங்களே,

நாம் அனைவரும் அன்பையும், தியாகத்தையும் நமது பிராணனாக, மூச்சுக் காற்றாக எண்ணவேண்டும்.

புலன்களை அடக்கவேண்டும்.

.எந்த ஒரு ஆன்மீக சாதனையாயினும் அதில் வெற்றி பெற வேண்டுமானால் புலனடக்கத்தை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். இதன் மூலமே தெய்வீகத் தன்மைக்கு உயரமுடியும். 

இலங்கை வேந்தன் இராவணேசன் 64 கலைகளிலும் தேர்ச்சிபெற்றவன்.
மிகுந்த அறிவாளி. பலசாலி. தனது புலன்களை எளிதாக அடககியதன் காரணமாகச் சிவபெருமானின் தரிசனம் பெற்று, அவரிடமிருந்து வரங்கள் பல பெற்றவன்.

ஆனால் மனிதர்களால தன்னை வெல்லமுடியாது என்ற ஆணவமும் அகம்பாவமும் அவனிடமிருந்த காரணத்தால் ஈசனிடம் வரம் பெறும் பொழுது, மனிதர்களால் தனக்கு மரணமேற்படக்கூடாது என்ற வரத்தை அவன் கேட்கவில்லை. எனவே எம்பெருமான் மனிதனாக அவதரித்து அவனை வதம்செய்தார்.

மேலும் ஐம்புலன்களையும் ஐம்பூதங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இராவணன் தனது தங்கை சூர்ப்பனகையின் வார்த்தைகளால் புலன் அடக்கத்தைக் கைவிட்டுக் கடும் கோபமடைந்து பழிவாங்கும் மூர்க்க குணத்துக்கு ஆட்பட்டுச் சீதாதேவியாரைக் கடத்தியதன் காரணமாக இராமபிரானால் வதம் செய்யப்பட்டான். அவன் மாத்திரமன்றி, அவன் தம்பி கும்பகர்ணன், அவனது புதல்வர்கள் மற்றும் அரக்கர்குலமே அழிக்கப்பட்டது.

இராவணனை இராமர் வதம் செய்தார் என்பதைவிட‌ இராவணனுக்கும் கும்பகர்ணனுக்கும் சாபவிமோசனம் அளித்தார் என்பதே உண்மை.

கும்பகர்ணனும் இராவணனும் வைகுண்டத்தில் திக்குப்பாலகர்களாக இருந்தனர். அவ்வேளை இறைதரிசனத்துக்காக வைகுண்டம் வந்திருந்த முனிசிரேஷ்டர் ஒருவரை சன்னிதிக்குச் சென்று பகவானைத் தரிசிக்க முடியாதபடி தடுத்தனர். இதனால் கோபமடைந்த அம்முனிசிரேஷ்டர் இரு திக்குப் பாலகர்களையும் பூவுலக வாசிகளாகப் பிறக்கும் படி சபித்துவிட்டார். சாபம் பெற்ற இருவரும் தமது தவறையுணர்ந்து முனிவரிடம் மன்னிப்புக் கேட்டு சாபவிமோசனத்துக்கு மன்றாடினர்.

அதேவேளை அங்கு வந்த வைகுந்தவாசனின் கோரிக்கையை ஏற்ற முனிவர், இறைபக்தி நிறைந்த ஐந்து பிறவிகள் அல்லது மகாவிஷ்ணுவைத் தூற்றும் மூன்று அரக்க குணம் கொண்ட பிறவிகளைப் பெற்று  மகாவிஷ்ணுவால் வதம்செய்யப்பட்டு  மீண்டும் வைகுந்தத்தை அடையும் வரத்தைப் பெற்றனர்.

மிக விரைவில் வைகுந்தம் திரும்ப விரும்பிய திசைபாலகர்கள் மூன்று அசுரப் பிறவியை விருமபிப்பெற்று, மகாவிஷ்ணுவால் வதம்செய்யப்பட்டு வைகுந்தம் திரும்ப விரும்பினர். எனவே இதன் முன்  இரண்டுமுறை மகாவிஷ்ணுவால் வதம் செய்யப்பட்டு, மூன்றாவது முறையாக இராவணனாகவும் கும்பகர்ணனாகவும் பிறந்து இராமபிரானால் வதம் செய்யப்பட்டுச் சாபவிமோசனம் பெற்று மீண்டும திக்குப்பாலகர்களாக வைகுந்தத்தை அடைந்தனர்.

கோபம் என்பது நாயின் இயல்பு. சலனப்படுத்திக் கொண்டே இருப்பது குரங்கின் இயல்பு. 

எனவே கோபம் வரும் போது நான் நாயல்ல, நான் மனிதன் என்றும், அதைப் போலவே மனம் அலை பாயும் போது திரும்பத் திரும்ப நான் குரங்கல்ல, நான் மனிதன் என்றும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள்ளுங்கள்

. சத்தியம். தர்மம். சாந்தி. பிரேமை. அஹிம்சை ஆகியவை தான் உண்மையான மனித உயர் குண நலன்கள். இந்தக் குணநலன்களைப் பஞ்ச பிராணன்களுக்கு ஒப்பிடலாம். பிராண. அபான. வ்யான. உதான மற்றும் சமான என்பவையே பஞ்ச‌ பிராணன்கள். 

இந்தக் குணநலன்கள் ஏதாவது ஒன்றை இழந்தாலும் கூட வாழ்க்கையையே துறந்து விடுவதைப் போன்றதாகிவிடும்.

இக் குணநலன்களை இழந்து விட்டதால்தான் மனிதர்கள் இன்று வாழும் பிணங்களாக இருக்கிறார்கள்..

குண நலன்களை நம்பிக்கையுடன் வளர்த்துக்கொள்ளவேண்டும்.

. அவற்றைப் போற்றி வளர்த்து, அவற்றின் மூலம் கிடைக்கும் ஆனந்தத்தை அனுபவியுங்கள். 

எங்கே நம்பிக்கை இருக்கிறதோ, அங்கே அன்பிருக்கிறது. எங்கே அன்பிருக்கிறதோ, அங்கே அமைதியிருக்கிறது. எங்கே அமைதியிருக்கிறதோ, அங்கே சத்தியம் இருக்கிறது. எங்கே சத்தியம் இருக்கிறதோ, அங்கே கடவுள் இருக்கிறார். 

எங்கே கடவுள் இருக்கிறாரோ, அங்கே ஆனந்தம் நிறைகிறது. 

அகில உலகும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.

சமஸ்தலோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

Monday, March 14, 2022

கடவுளை இலகுவாக அடையும் வழி

ஓம் ஸ்ரீ சாயி ராம்

கடவுள் எங்கும் நிறைந்தவர். எல்லாம் அறிந்தவர். எல்லா வல்லமைகளும் கொண்டவர்.

எப்பொழுதெல்லாம் கடவுள் மனிதனாக அவதரித்தாரோ அந்த அவதாரங்கள் அனைத்திலும் எந்த மனிதராலும் தன்னை முழுமையாகப் புரிந்து கொள்ளவோ அறிந்துகொள்ளவோ முடியாதென்றும் தன்னை முழுமையாக அறிந்துகொள்ள முயற்சிப்பது ஒரு சிறு எறும்பு சமுத்திரத்தின் ஆழத்தை அறிய முயல்வது போன்ற செயல் என்றும் கூறியிருக்கிறார்.

மனித உருவில் தான் ஒவ்வொரு யுகத்திலும் அவதரிக்கும்போது மனிதர்களிடையே ஒரு மனிதனைப்போல் நடந்துகொள்வதாகவும், தேவையான சந்தர்ப்பங்களின்போது மாத்திரமே தனது தெய்வீக ஆற்றலை வெளிப்படுத்துவதாகவும் கூறியிருக்கிறார்.

நமது சாயிநாதன் இதனை நமது கண்முனேயே நிகழ்த்திக் காட்டியுள்ளார்.

மாணவர்களுடனோ பக்தர்களுடனோ உரையாடும்போது எதுவும் அறியாத அப்பாவிபோல உங்கள் பெயரென்ன, நீங்கள் எந்த ஊரிலிருநது வந்திருக்கிறீர்கள் என்று பல கேள்விகள் கேட்பார்.

அடுத்த கணமே உங்களையும் உங்கள் குடும்பத்தவர் அனைவரைப்பற்றிய அனைத்தும் பல ஜன்மங்களாகத் தனக்குத் தெரியும் என்று குடும்பரகசியங்கள் பற்றியெல்லாம் கூறுவார்.

பலவருடங்களின் முன் ஒருதடவை பிரசாந்தி நிலையத்தில் தங்கியிருந்த பக்தர் ஒருவர் மந்திருக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு அனந்தப்பூருக்குச் சென்றிருந்தார். அங்கிருந்து வரும் வழியில் அவர் பயணம் செய்த வண்டி விபத்தில் சிக்கியதால் காலில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு பகவான் விபூதிப்  பிரசாதத்தை வேறொரு பக்தர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பியருளினார். இதனால் மனம் நெகிழ்ந்த மருத்துவ‌மனையில் அனுமதிக்கப்பட்ட பக்தர், தனக்குச் சுவாமியின் பிரசாதம் கொண்டுவந்த பக்தரிடம் "சுவாமி,  தங்கள் கருணைக்கு நன்றி. நீங்கள்தான் எனது டாக்டர், உங்கள் சங்கல்பப்படி நடக்கச் சித்தமாக இருக்கிறேன்" என்று ஒரு சிறு கடிதம் கொடுத்தனுப்பியிருந்தார்.

சிகிச்சைமுடிந்து பிரசாந்தி நிலையம் திரும்பிய பக்தர் தானாகவே நடக்கமுடியாத நிலையில் முறிவேற்பட்ட இடத்தில் கட்டு அகற்றப்படாமலேயே தரிசனத்துக்கு வந்திருந்தார்.

சுமார் இரண்டுவாரங்களில் நவராத்திரி வைபவத்தின்போது சுவாமியின் அருகாமையில் நவராத்திரி வைபவத்தில் நடக்கும் யாகத்தில் பங்குபற்றுவதே அவரது பேரவா.

அன்றைய தரிசனத்தின்போது பகவான் அந்தப் பக்தரிடம் சென்று டாக்டர் என்ன சொன்னார் எனக் கேட்டார். அதற்கு அந்தப் பக்தர் இன்னும் இரண்டு வாரங்களின் பின்தான் காலிலுள்ள கட்டை அவிழ்க்க முடியும் என்றும் அதுவரை எழுந்து நடக்க முடியாது என்றும் டாக்டர் சொல்லியுள்ளதாகச் சொன்னார். அப்படியா என்று கூறிவிட்டு பகவான் அங்கிருந்து சென்றுவிட்டார்.

அடுத்தநாளும் தரிசனத்தின்போதும் ‌பகவான் அந்தப் பக்தரிடம்‌ சென்று டாக்டர் என்ன சொன்னார் என்று மீண்டும் கேட்டார்.

இன்னும் இரண்டு வாரங்களின் பின்தான் காலிலுள்ள கட்டை அவிழ்க்க முடியும் என்றும் அதுவரை எழுந்து நடக்க முடியாது என்றும் டாக்டர் சொல்லியுள்ளதாக அந்தப் பக்தர்‌  மீண்டும் சொன்னார். அப்படியா என்று கூறிவிட்டு பகவான் அங்கிருந்து சென்று விட்டார்.

மூன்றாவது நாளும் தரிசனத்தின் போது அதே பக்தரிடம் சென்ற பகவான் இரண்டுநாட்களும் கேட்ட அதேகேள்வியை மீண்டும் கேட்டார். பக்தரும் தொடர்ந்து தான் வழமையாகச் சொல்லும் பதிலையே சொன்னார். பகவானும் வழமையான பதிலையே சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

ஆனால் அந்தப் பக்தருக்கும் வழமையாக அவருக்க
 அருகில் அமரும் ஏனைய பக்தர்களுக்கும் பகவான் ஒரேகேள்வியை எதற்காககத் தினமும் கேட்கிறார் என்ற குழப்பமும் அந்தக் கேள்விகளின் பின்னே ஏதோ காரணம் இருக்கவேண்டுமென்ற உறுதியான எண்ணமும் ஏற்பட்டது.

தரிசனம் முடிந்து வீட்டுக்குச் சென்றவுடன் குழப்பமான மன நிலையுடன், கடந்த மூன்று நாட்களும் பகவான் தன்னிடம் கேட்ட கேள்வியையும்,  தான் சொன்ன பதிலையும் அதற்கு பகவான் சொன்ன பதிலையும் தனது மனைவியிடம்  கூறி, பகவான் இவ்விதக் கேள்வியும் தன்னிடம் தனது பதிலுக்கு பகவான்  பதிலளிக்கும் முறையும் தனக்குக் குழப்பபத்தையும் அதேவேளை காரணமின்றி பகவான் இவ்வாறு நடந்துகொள்ள மாட்டாரென்பதையும் சொல்லி,  தனது மனக்குழப்பத்தையும் எதற்காக பகவான் தன்னிடம் அவ்வாறு நடந்துகொள்கிறார் ஏன்பதையும் தெரிவித்தார்.

கணவனும் மனைவியும் இது பற்றிசய சிந்தனையில் சிறிது நேரம் மூழ்கி இருந்தனர்.

திடீரென அப் பக்தரின் துணைவியார் தனது கணவரிடம் அவர் விபத்து நடைபெற்றதன் பின் மருத்துவ மனையிலிருந்து பகவானுக்கு எழுதிய கடிதத்தில் என்ன குறிப்பிட்டிருந்தீர்கள் எனக்கேட்டார். அதற்கு அந்தப் பக்தர் "சுவாமி, நீங்கள்தான் எனது டாக்டர். நீங்கள்தான் என்னைக் குணப்படுத்த வேண்டும்." எனறு எழுதியதைக் குறிப்பிட்டதுடன், பகவான் தொடர்ந்தும்‌ ஒரே கேள்வியைத் ‌திரும்பத் தரும்பக் கேட்டதன் அர்த்தத்தை திடீரெனப்‌ புரிந்து கொண்டனர்.

அடுத்த நாளும் தரிசனத்தின்போது பகவான் அந்தப் பக்தரிடம் வந்து டாக்டர் என்ன சொன்னார் எனக்  கேட்டார்.

உடனடியாக அந்தப் பக்தர் பகவானின் திருக்கரங்களைப் பற்றியபடி மிகப் பக்தியுடன்
 கண்களில் நீர்மல்க "சுவாமி, நீங்கள்தான் எனது டாக்டர். உங்கள் சங்கலாபபடியே செய்யுங்கள்" என்றார்.

அதற்கு எமது சாயிக்கண்ணன் அந்தப்பக்தரைப் பார்த்து, பிரபஞ்சத்தையே மயக்கும் தெய்வீகப்புன்னகையுடன் மிகச் சந்தோஷம் என்று கூறிவிட்டுச் சென்றார். 

பூரண குணமடைய இரண்டு வாரங்களுக்கு மேலாகும் என்று டாக்டர் கூறியிருந்த போதிலும் அடுத்த சில நாட்களிலேயே அந்தப்பக்தர் தானாகவே எழுந்து நடந்தது மாத்திரமன்றி, நடைபெற்ற நவராத்திரி யாகத்தில் பங்குபற்றினார். யாக பருஷோத்தமரான‌ பகவான் யாகத்தை ஏற்றுக்கொண்ட வைபவத்திலும் எம்பிரானின் திருவூஞ்சல் வைபவத்திலும் கலந்து கொள்ளும் பெரும் பேற்றையும் பெற்றார்.

கடவுளின் சங்கல்பம் என்ன என்று யாராலும் அறிந்துகொள்ள முடியாது, கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார்,. நீங்கள் எங்கு பார்த்தாலும் அங்கெல்லாம் கடவுள் வியாபித்துள்ளார், அப்படிப்பட்ட கடவுளை ஜபம், யாகம், தியானம் போன்றவை மூலமாக மாத்திரம் அடைந்துவிட முடியாது, பலவீனங்கள் நிறைந்த மனிதர்களால் கடவுள் எப்படிப்பட்டவர் என்று சொல்லவோ புரிந்துகொள்ளவோ முடியாது என்பதையும், எந்தப் பெயரையோ வடிவத்தையோ நீங்கள் வணங்கினாலும் கடவுளை அடைய முடியும் என்பதையும், இந்த ரகசியத்தை மனிதர்கள் புரிந்துகொள்ளாததால்  ஆன்மீகத்தில் ஈடுபடாமல் யாக யக்ஞங்களில் திருப்தியடைந்து விடுகிறார்கள் என்றும் பகவான் தனது அருளுரைகளில் எடுத்துரைத்து வருகிறார்.

கடவுள் நன்நடத்தையையும் ஆன்மீகச் சிந்தனையையும் தான் எதிர்பார்க்கிறார். இவ்வுலகில் செல்வமும் சிபார்சும் தான் முதலிடம் பெறுகின்றன. இது மிகுந்த அறியாமையாகும். இந்த அறியாமையிலிருந்து வெளியேறாத வரை கடவுளைப் புரிந்துகொள்ள முடியாது. '

நான்' என்னும் ஆணவமும் என்னுடையது என்னும் அகம்பாவமும் உள்ள இதயங்களைக் கடவுள் விரும்பமாட்டார். உலகில் சேர்த்துவைப்பதெல்லாம் ஒருநாள் அழியத்தான் வேண்டும். மனித உடலும் ஒருநாள் அழிந்துவிடும். எனவே இவ்வுலக வாழ்வின் துயரங்களிலிருந்து விடுதலை பெற்று இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கான சத்தியம், தர்மம், சாந்தி, பிரமை, அகிம்சை, திரிகரணசுத்தி என்பவற்றைக் கடைப்பிடித்துப் பிறவிப் பெருங்கடலிலிருந்து மீட்சியடைவோம். 

உடலுக்கு உணவளிப்பது போன்று நமது ஆத்மாவுக்குரிய உணவையும் அளித்து இறைவனுடன் ஒண்றிணைந்து பேரின்பத்தை அடைவோம். 

உலகம் அனைத்தும் நலமாக வாழ வாழ்த்துவோம்.

சமஸ்தலோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

Friday, March 11, 2022

சத்தியத்தைக் கடைப்பிடிப்பதே மனிதரின் கடமை.

ஓம் ஸ்ரீ சாயி ராம்

எப்பொழுதும் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதே மனிதர்கள் அனைவரினதும் கடமையாகும் என்று பகவான் தனது அருளுரைகளில் வலியுறுத்தி வருகிறார்

நமது எண்ணமும், சொல்லும் செயலும் ஒன்றாகவே இருக்கவேண்டும் என்றும் நினைப்பவற்றையே‌ சொல்லவேண்டுமென்றும் சொல்லியதையே செய்யவேண்டும்.என்றும் வலியுறுத்தி வருகிறார். 

மேலும் எண்ணங்கள் அனைத்தும் தூய்மையானவையாக இருக்க வேண்டும, அதனால் நம் சொல்லும் செயலும் தூய்மையாக இருக்கும். என்றும் அனைவரும் எப்பொழுதும் சத்தியத்தையே கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சொல்வது மாத்திரமன்றி சத்தியம் ஒருபோதும் மாறாதது என்றும் இடத்துக்கிடமோ காலத்துககுக் காலமோ சத்தியம்‌வேறுபடாதது என்றும் வலியுறுத்துகிறார்.

"அமெரிக்கச் சத்தியம், இந்தியச் சத்தியம், ஜப்பான் சத்தியம் என்று நாட்டுக்கு நாடு சத்தியம் வேறுபடாது. 
சத்தியம் என்றுமே நிரந்தரமானது. மாறாதது.சத்தியத்தின் வழியே நடக்கும் அனைவரின் வாழ்க்கையும் தூய்மையமானதாக இருக்கும். 

எப்பொழுதும் சத்தியத்தையே பேசவேண்டும். சத்தியம் ஒருபோதும் எவருக்குமே தீங்கு விளைவிக்காது. 

பொய்யே தீங்குகளுக்குக் காரணம்" என்றும் வலியுறுத்தியுள்ளார். 

எனவே அனைவரும் சத்தியத்தைக் கடைப்பிடிப்போம். இனிமையாகப் பேசுவோம். 

எவருடைய மனத்தையும் புண்படுத்தாமல் அனைவருக்கும் உதவியாக வாழ்வோம். உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழப் பிரார்த்திப்போம்.

Thursday, March 10, 2022

அன்பின் மகத்துவம்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

பகவான் தனது அருளுரைகள் அனைத்திலும் அன்பின் மகத்துவத்தைப்பற்றித் தொடர்ந்தும் கூறி வருகிறார்.

அன்புடன் கடவுளை வணங்கவேண்டும் என்று கூறும் எமது சாயிநாதன்  இந்த அன்புதான் உலகைக் காக்கிறது என்றும் பக்தர்கள் அன்பெனும் பாதையை விட்டு விலகி வாழவே கூடாது என்றும் கூறுகிறார்.

பிறர் பரிகசித்தாலும் ஏளனம் செய்தாலும், அன்புடனே எப்பொழுதும் வாழவேண்டுமென்று தொடர்ந்தும் எடுத்துரைககும் பகவான், அன்பு செலுத்திப் பிறைரை மன்னித்து வாழ்வதன் சிறப்பைப்பற்றியும், . கோபத்தினால் கேடு விளையும் என்பதையும் வலியுறுத்தி, அன்புடன் வாழும்படியும்.  யாராவது துன்பம் செய்தாலும் அவர்கள்மீது கோபப்படக்கூடாது என்றும்் கூறுகிறார்.

"அன்புடன் நாளைத்தொடங்குங்கள்.
அன்புடன் நாள் முழுவதையும் கழியுங்கள்.
அன்பினால் நாள் முழுவதையும் நிறையுங்கள்.
அன்புடன் நாளை நிறைவு செய்யுங்கள்."
என்பதே எம்பெருமானின் தாரக மந்திரம்.

நமது வாழ்வில் நடைபெறும் அனைத்துமே நாம்  செய்த கர்ம வினைகளின்படியே நடைபெறுவதாகவும், நமக்கு எற்படும் இன்பதுன்பங்கள் அனைத்துக்கும் நாம் செய்த கர்மவினைகளே காரணமென்பதால் நமக்கு ஏற்படும் துன்பங்களுக்கும் தோல்விகளுக்கும் பிறரையோ கடவுளையோ நிந்திக்கக் கூடாதெனவும் தனது அருளுரைகளில் எம்பெருமான்‌ வலியுறுத்தி உளளார் .

எல்லாம் கடவுள் சங்கல்பப்படியே நடப்பதாகக் கூறும் பகவான் கடவுளை ஒரு தபால் காரருக்கு ஒப்பிட்டுள்ளார். நல்வினைக்குரிய நற்பலனையே ஒருவருக்குக் கடவுள் வழங்குவதாகவும் முன் செய்த தீவினைகளின் பயனே நமக்குத் துன்பமாக வந்து‌  சேருவதாகவும் பகவான் கூறுகிறார். 
.
முன்செய்த கர்மவினைகளின் பயனையே கடவுள் வழங்கூவதாகவும் முன்வினைகளின் தீயவிளைவுகளிலிருந்து மீட்சிபெற வேண்டுமெனில் நமது செயல்கள் எல்லாவற்றையும் கடவுளுக்கு அர்பணமாகச் செய்யவேண்டுமெனவும் அறிவுறுத்துகிறார். 

நம்மீது யாராவது பழி சொன்னாலும். அதையும் கடவுள் நமது நன்மைக்காகவே செய்கிறார் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ளவேண்டும். 

உங்களுக்கு நடப்பதெல்லாம் கடவுளின் பிரசாதமென்ற மனநிலையுடன் நாம் செயற்பட்டால் நல்வாழ்வு நிச்சயம் கிடைக்கும்.

அன்பபெனும் அமுதத்தினால் கோபம், பொறாமை, கஞ்சத்தனம், ஆணவம், சுயநலம் போன்ற அசுர குணங்களை அழித்துவிடும். எப்பொழுதும் எது நடந்தாலும் அது கடவுள் சங்கல்ப்பப்படி நமக்கு நன்மையளிப்பதாகவே நினைத்து இறைவனின் பிரசாதமாக ஏற்றுக் கொள்ளவேண்டும். 
பஜனை செய்யவேண்டும். 
கடவுளின் நாமத்தை உச்சரிக்க வேண்டும்.பஜனை மிக முக்கியமானது. கடவுளின் திருப்பெயரை உச்சரிப்பதே பஜனையின் முக்கிய அம்சமாகும். பலருடன் சேர்ந்து பஜனை செய்யும்போது ஒருவராவது கடவுளின் மனதை உருகச் செய்துவிடுவார். பலர் ஒன்றுசேர்ந்து நாம ஜெபத்தில் ஈடுபடும்போது நற்பலன்லன் அதிகரிக்கிறது. 

அதிகாலையில் நகர சங்கீர்த்தனம் செய்யும்போது அதைக் கேட்டுக் கண்விழிப்பவர்கள் மனமகிழ்ச்சியடைவர். 

உலகம் அனைத்தும் நலமாக வாழ்ப் பிரார்த்திப்போம்.

சமஸ்தலோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

Tuesday, March 8, 2022

சாயிநாதன் சொன்ன‌ கர்ம விதியின் நியதி.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

இவ்வுலகில் மனிதர்கள் செய்யும் வேலைகள் எல்லாமே கர்மவிதிக்கு உட்பட்டதாகும்.

இன்று உலகில் வாழும் மனிதர்கள் அனைவருமே ஏதோவொரு வகையில் சுயநலம், பலனை எதிர்பார்த்தல் மற்றும் அகம்பாவம் போன்றவற்றில் ஆட்பட்டுள்ளனர். மனிதர்கள் தமக்காகவே வாழ்வதால் இப் பிறப்பு இறப்பு என்னும் சுழலில் சிக்கி அல்லல் படுகின்றனர். மனிதர்கள் தமது கர்மவினைகளில் சிறைப்பட்டுள்ளனர்.

இறைவனுக்கு அர்ப்பணமாகப் புரியும் எந்தச் செயலும்  மனிதரை எவ்விதப்பாதிப்புக்கும் உள்ளாக்குவதில்லை. தெய்வார்ப்பணமாகச் செய்யும் எல்லாச் செயல்களும் கர்மயோகமாகவே பரிணமிக்கிறது.

ஒருவர் செய்யும் கர்மத்துக்கும் கர்மயோகத்துக்கும் பெரிய வேறுபாடு உள்ளது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒருவர் தனது சுயலாபத்தையும், பலனையும் எதிர்பார்த்து,  நான் என்ற எண்ணத்துடன் செய்யும் காரியங்கள் சாதாரண கர்மமாகக் கருதப்படுகிறது.

சிறிதளவுகூடச் சுயநல எண்ணம் இல்லாமலும், எவ்விதப் பலனை எதிர்பார்க்காமலும், நான் என்ற அகம்பாவம் சிறிதுகூட இல்லாமலும் இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்யப்படும்‌ செயல்கள் அனைத்தும் கர்மயோகமாகும்.

ஒவ்வொருவரும் தான் ஒரு கர்மயோகியா, செய்த கர்மவினைகளின் பயனாகச் செயல்படுபவரா அல்லது உலக இன்பதுன்பங்களுக்கு ஆட்பட்டுக்  கர்மங்களைப் புரிகிறாரா என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.

மனிதர்கள் அனைவரும் எப்பொழுதும் ஏதோவொரு செயலில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கின்றனர். அவற்றுள் அதிக அளவு சுயதேவைக்கான செயல்கள் இருந்தபோதிலும், சுயநலமற்ற பிறர் நலத்துக்கான செயல்கள் அடங்கியிருக்கவேண்டும்.
மனிதர்கள் அனைவரும் சுயநலமற்ற சேவையில் ஈடுபடவேண்டும்.

பிறருக்குப் பயன்படவேண்டும் என்பதற்காகவே இம்மனித உடலை இறைவன் நமக்குக் கொடுத்திருக்கிறார் என்ற உண்மையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

சுயநலமின்றிச் சேவை புரியும்போது நமக்குள் இருக்கும் நமது தெய்வீகத் தன்மையை நம்மால் உணரமுடியும. எனவே இதயபூர்வமான  பரிபூரண  அன்புடன் பிறருக்கான சேவையைச் செய்யுங்கள்.

நீங்கள் யாருக்குச் சேவை செய்தாலும் நாம் வணங்கும் இறைவனுக்கே சேவை செய்வதாகக் கருதிச் செயல் புரிய வேண்டும். 

சத்திய சாயி சேவை நிறுவனங்களில் மாத்திரமே பரிபூரணமான, நான் செய்கிறேன் என்ற ஆணவ உணர்வற்ற சேவையைக் காணமுடிகிறது.

நான் என்ற அகம்பாவமற்ற சேவை தூய அன்புநிறைந்த இதயத்திலிருந்தே வெளிப்படுகிறது.
உங்கள் இப்பிறவிக்கான காரணம்  நீங்கள் செய்த கர்மவினைகளே. அனைவரும் குறிப்பிட்ட காரணத்துக்காகவே பிறவியெடுத்துள்ளனர்.

கரமவினையால் கிடைத்துள்ள இப்பிறவியுடன் தர்மநெறிகளும் சேர்ந்தே வந்துள்ளன.

மனினாகப் பிறந்துள்ள அனைவருக்கும் மனிதத் தன்மையே தர்ம நெறியாகும். 

மனிதத் தர்மம் என்றால் மனதில் உதிக்கும் எண்ணம், சொல்லும் வார்த்தை மற்றும் செய்யும் செயல்கள் என்பனவற்றின் ஒருங்கிசைவான திரிகரணசுத்தியாகும்.

மனதில் உதித்த எண்ணம் ஒருவரது சொல் மற்றும் செயலிலிருந்து வேறுபட்டால் அந்த மனிதப் பிறவி பயனற்றதாகிறது.

எனவே திரிகரணசுத்தியுடனான வாழ்வே உண்மையான மனித வாழ்வாகும்.

ஆனால் இன்றைய நிலையில் மனிதர்கள் தம்மைத்தாமே அறிவதற்குப்  பதிலாக வெளியுலகை அறிய முயற்சி செய்கின்றனர். தற்போது  வாழும் மனிதர்கள் தாங்கள் யார் என்பதையே அறியாமலிருக்கிறார்கள்.தான் யாரென்பதை அறிந்துகொள்ளாமல் வெளியேயுள்ள பிறவற்றை அறிந்துகொள்வதில் என்ன பயன் உள்ளது.

எனவே ஒவ்வொரு மனிதனும் தான் யார் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

கர்மவினையென்றால்
 என்னவென்று அறிந்துகொள்ள வேண்டும். எப்படியான கர்மத்தை ஒருவர் கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொருவரும் புனிதமானதும் பிறருக்குப் பயனளிக்கக் கூடியதுமான செயல்களைச் செய்யவேண்டும்.

செய்யும் செயல்களனைத்தும் பிறருக்கு ஆனந்தமளிக்கக் கூடியனவாகவும் பிறருக்கு எவ்வித வேதனை அளிக்காதனவாகவும இருக்கவேண்டும். அச்செயல்கள் அவருக்கோ பிறருக்கோ வேதனை அளிக்காதவையாக  இருக்கவேண்டியது அவசியம். 

புராணங்கள் 18 ம் இதனையே வலியுறுத்துகின்றன. பிறருக்குப் பயனாக வாழ்வதே புண்ணியம் என்றும் பிறருக்குத் தீங்கிழைப்பது பாபமென்றும் இப்புராணங்கள் அனைத்தும் வலியுறுத்துகின்றன. சுருக்கமாகச் சொல்வதானால் 'எப்பொழுதும் பிறருக்கு உதவியாக இருங்கள், எவருக்கும் தீங்கிழைக்காதீர்கள்' என்பதே அவற்றின் சாரம்.

மேலும் ஒருவருக்கு நன்மை செய்யும்போது அச்செயலால் இன்னொருவருக்குத் தீங்கு விளையாதபடி அவதானத்துடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு செய்யும் சேவையே பவித்திரமான சேவையாகும்.

எனவே இறைவனின் புனிதமான நாமத்தை மனதில்பதித்தபடியும்  உங்கள் தெய்வீகத்தன்மையை உணர்ந்தும் பல்வேறு பரோபகார சேவைகளைச் செய்வதன்மூலம் மனிதப்பிறவியெடுத்ததன் பரிபூரண பவனையடைய முடியும்.

சமஸ்தலோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்









Monday, March 7, 2022

இறைவன் ஒருவரே அவரை நம்புங்கள

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

அனைவருமே இறவனை நம்புகிறோம். நாஸ்திகர்கள் கூட இறைவன் இல்லை என்று சொல்லும் பொழுது இறைவன் என்ற நாமத்தைப் பயன்படுத்துவதால் இறையருளைப் பெறுகின்றனர். ஆனால் அவர்கள் அதனை உணர்ந்துகொளதில்லை. 


கடவுள் ஒருவரே. அவரை நாடு, கலாச்சராம், மொழி,‌ மதம்,  விருப்பு வெறுப்புப் போன்றவற்றின் காரணமாகப் பல பெயர்களால் அழைக்கிறோம். 


எந்தப் பெயரைப் பயன்படுத்தினாலும் அந்தப்பெயரை இறைவன் ஏற்றுக்கொள்கிறார். அதனால் ஒருவர் எந்தச் சமயத்தைச் சார்ந்தவர் என்ற கேள்வி எவருக்குமே எழக்கூடாது. 


ஒருவர் இந்து சமயத்தைச் சார்ந்தவராக இருந்தால் அவர் உண்மையான இந்துவாக இருக்கவேண்டும். இந்து மதத்தில் கூறப்பட்டுள்ளவற்றைக் கடைப்பிடிக்கவேண்டும். 


கிறிஸ்தவ சமயத்தைக் கடைப்பிடிக்கும் ஒருவர் உண்மையானா கிறிஸ்தவராக வாழவேண்டும். இயேசு பகவானின் கொள்கைகளைக் கடைப்பிடித்து வாழ வேண்டும் 


புத்தசமயத்தைப் பின்பற்றுபவர்கள்   புத்தபகவானின் போதனைகளைக் கடைப்பிடித்துச் சிற்ந்த புத்தமதத்தவராக இருக்கவேண்டும். 

 இஸ்லாமியர்கள் அனைவரும் திருக்குரானைப் பின்பற்றிச் சிறந்த இஸ்லாமியராக வாழவேண்டும். 

அதே போல் எந்தச் சமயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்  அந்த்ச் சமயக் கொள்கைகளைப் பின்பற்றவேண்டும். 


எல்லாச் சமய நூல்களும் அன்பு, பண்பு, கருணை, தியாகம், பிறருக்கு உதவுதல், அகிம்சை போன்ற நற்குணங்களையே போதிக்கின்றன. 


எல்லா மதங்களும் வன்செயல், கோபம், ஆணவம், வெறுப்பு போன்றவற்றை விலக்கவேண்டுமென்றே போதிக்கின்றன. 


அதனால் ஒரு மதத்தவர் பிற மதத்தவரைப் புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது. 

அனைவரும் இறைவனின் வடிவங்களே. எல்லோர் மனதிலும் இறைவன் வாழ்கிறார். எனவே ஒருவரது மனதைப் புண்படுத்துவது அவருக்குள் குடியிருக்கும் இறைவனைப் புண்படுத்துவதாகும். 


எனவே அனைவரும் முடிந்தவரை அனைவருக்கும் உதவவேண்டும். உதவமுடியவிட்டாலும் யாரையும் புண்படுத்தக்கூடாது.

உலகில் இருப்பது ஒரயொருே சூரியனே. இந்தியாவுக்கென்று ஒரு சூரியனும், அமெரிக்காவுக்கு என்று இன்னொரு சூரியனும், ஆப்பிரிவுக்கு என வேறுரு சூரியனும் கிடையாது. 

ஆங்கிலேயர் சூரியனைச் 'சன்' என்று அழைக்கிறார்கள். தமிழர்கள் சூரியன் என்று குறிப்பிடுகிறார்கள். அப்படி வெவ்வேறு மொழிகளில் சூரியனை வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடுகிறார்கள். வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டாலும் அனைவரும் ஒரே சூரியனைத்தான் குறிப்பிடப்ப்டுகிறார்கள். 


உதாரணமாக ஒருவரின் பெயர் மோகன் என்று வைத்துக்கொள்வோம். அவர் ஆசிரியராகப் பணிபுரிகிறார் என்றும் வைத்துக்கொள்வோம். பள்ளியில் அவரை 'ஆசிரியர்' என்று அழைக்கிறார்கள். வீட்டில் அவரது தந்தையும் தாயும் 'மகன்' என்று அழைக்கிறார்கள். அவரது பிள்ளைகள் 'அப்பா' என்று அழைக்கிறார்கள். மாமாவும் மாமியும் 'மருமகன்' என்று குறிப்பிடுகிறார்கள். நண்பர்கள் விரும்பியபடியெல்லாம் அழைக்கிறார்கள். 

ஆனால் அனைவரும் பல பெயர்களைப் பயன்படுத்துவது 'மோகன்' என்னும் ஒருவரையே. யாரும் அப்பா, மகன், ஆசிரியர், மாமா, மருமகன், அண்ணன், தம்பி என அழைக்கப்படுவது வேறு வேறு நபர் என்று நினைப்பதில்லை. சண்டையிடுவதுமில்லை. எல்லோரும் அவர்களது உரிமைக்கு அமையவே மோகனை அழைக்கிறார்க்ள். 

எப்படி அழைத்தாலும் வருவதும், பதிலளிப்பதும் மோகன் என்பவர்தான்.. 

அதுபோல் தான் இறைவனை நாம் நமக்கு விரும்பிய எந்தப் பெயராலும் அழைக்கலாம். அதனால் ஒவ்வொரு சமயத்தவரும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கும் இறைவன் வெவ்வேறானவர் என்று நினைக்கக்கூடாது. பெயர்கள் அனைத்தும் ஒரே இறைவனையே குறிக்கின்றன. 


பிரபஞ்சத்திலுள்ள அனைத்து உருவங்களும் இறைவனுடையதே. இறைவன் அன்பின் வடிவானவர். விருப்பு வெறுப்பற்றவர். அனைவரையும் நேசிப்பவர். அவர் நமது இதயத்திலதான் வசிக்கிறார். 


நமது உடலே இறைவனின் ஆலையம். எனவே நாம் அனைவரும் நமது உள்ளத்தையும் உடலையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். செய்யும் ஒவ்வொரு செயலும் இறைவன் விரும்பக்கூடிய செயல்களாகவே செய்ய வேண்டும்.

உலகம் முழுவதம் சாந்தியுடனுமும் மகிழ்வுடனும் சமாதானத்துடனும் வாழ இறைவைனை வேண்டிக்கொள்வோம்.

சமஸ்த லோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.


Sunday, March 6, 2022

உலகம் நலமாக வாழ நாம் தர்மநெறியைக் கடைப்பிடிப்பதன் அவசியம்

ஓம் ஸ்ரீ சாயிராம்.

நமது சாயிபகவான் தனது அருளுரைகளின்போது‌ திரிகரண சுத்தியைப்பற்றி‌த் தொடரந்தும் குறிப்பிட்டு வருகிறார்.

முதலில் திரிகரண‌சுத்தி என்றால் என்னவென்று அனைவரும் விளங்கிக்  கொள்ள வேண்டும்.

திரிகரண சுத்தி  என்பது மனதில் தோன்றும் எண்ணமும், வாயால் கூறும் சொல்லும், அதுசம்பந்தமான நமது செயலும் வேறுபாடற்று ஒன்றாகவே இருக்கவேண்டும்.

ஏதாவது ஒரு சூழ்நிலையில் ‌நமது மனதில்‌ ஏற்படும் எண்ணமும், அந்தச் சூழ்நிலையில் நமது வாயிலிருந்து நாம் வெளிப்படுத்தும் வார்த்தையும் ,‌அந்தச் சூழ்நிலையில் நாம் செய்யும் ‌செயலும் வேறு வேறாக இருக்கக் கூடாது.

அதே வேளை நமது மன எண்ணங்களும் சொல்லும் செயலும் தூய்மானதாகவும், தர்மநெறியின் அடிப்படையிலானதாகவும், பிறருக்கு நன்மையளிப்பதாகவும் இருக்க வேண்டும்.

ஒருவர் நம்மிடம்  ஒரு உதவி கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.‌ அந்த உதவியை நாம் செய்ய விரும்பவில்லை ‌என்று நினைக்கிறோம் என்றும் வைத்துக்கொள்வோம். ஆனால் கேட்பவரிடம் நாம் அவர் கேடகும் உதவியை நிசசயம் செய்து கொடுப்பதாக நமது வாயினால் உறுதியளிக்கிறோம் என்றும் வைத்துக் கொள்வோம். அதேவேளை உதவிகோரியவரிடம் அவர் கேட்ட உதவியைச் செய்யாமல் ஏதோ சாக்குப் போக்குக் கூறி ஏமாற்றிவிடுகிறோம். என்றும் வைத்துக் கொள்வோம். 

இங்கு நம் மனதிலிருந்த எண்ணமும், நாம் வாயால் கூறிய உறுதி மொழியும், அந்தச் சொல் மற்றும் நமது செயல் என்பனவும் வெவ்வேறாக இருக்கின்றன.
இங்கு திரிகரண சுத்தி என்பது இல்லவேயில்லை.

நம்மிடம் உதவி கேட்டவரிடம் உதவி செய்யவேண்டும் என்ற மன எண்ணமும், ஒரே நிலைப்பாட்டுடன்‌  இருக்கவேண்டும்.
.
இதனைக் குழந்தைகளுக்குச் சிறு பராயத்திலிருந்தே கற்றுக் கொடுக்கவேண்டும். அதனால் அவர்கள் வளர்ந்த பின்னரும் நற்குணங்களுடன் நற்செயல்களைத் தொடர்ந்து கடைப்பிடிப்பார்கள். 

தற்காலத்தில் பல குடும்பங்களில் பெரியவர்களே குழந்தைகளின் எதிரிலே தவறுகளைச் செய்கிறார்கள். 

குழந்தைகள் பெரியவர்களின் ஒவ்வொரு செயலையும் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. 

உதாரணமாக,  தனது தகப்பனாரைத் தேடி அவருக்கு வேண்டாதவர்கள் யாராவது வந்தால், வீட்டினுள் இருந்தபடியே தான் வீட்டில் இல்லையென்று சொல்லும் படி குழந்தையிடம் கூறச்சொல்வது போன்ற சம்பவங்கள் பல குடும்பங்களில் நடைபெறுகின்றன. 

அப்பொழு குழந்தை தகப்பன் பொய்சொல்வதை அவதானிக்கிறது. 

அதே போல் ஆசிரியாரோ , தந்தை போன்ற பெரியவர்களோ புகைபிடிப்பதைக் குழந்தைகள் பார்கிறார்கள். 

அப்போது இவை கெட்ட பழக்கங்கள் என்று தம்மிடம் சொல்லும் பெரியவர்களே தவறான காரியங்களைச் செய்வது, குழந்தைகளின் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

எனவே குழந்தைகளுக்கு முன்மாதிரியாக நாம் நடந்துகொள்ள வேண்டும். அப்படியானால்தான் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது நற்குண, நற்செய்கைகளையே கடைப்பிடிப்பார்கள் என்பதை மனதில் கொண்டு நாம் நடந்துகொள்ளவேண்டும்.

நாம் நமது குழந்தைகள் மற்றும் இளம் சந்ததியர் மற்றும் பிறர் அனைவரின் முன் நமது மனச்சாட்சிப்படி நல்ல நடத்தையுடன் வாழ்ந்தால், நம்மமுடன் பழகும் மற்றும் நம்மை அவதானிக்கும் அனைவரும் மனம் திருந்தி நல்லவர்களாக வாழத் தொடங்குவார்கள். 

இப்படியான நமது நன்நடத்தையின் மூலம் அனைவரையும் நல்லவர்களாக மாற்றி எதிர்காலத்தைச் சத்திய யுகமாக மாற்றுவோம். 

உலகத்திலுள்ள அனைவரும் சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சை, தியாகம் என்பவவற்றை உலக மக்கள் அனைவரும் கடைப்பிடித்து நலமாக வாழ இறைவனை வேண்டிக்கொள்வோம்.

சமஸ்த லோகா சுகினோ பவந்து.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.


கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...