இறைவன் மனிதனைப் படைக்கும்போது மனிதனில் 85 விகிதம் இறைவனின் தன்மையும் 15 விகிதம் சுய புத்தியைப் பயன்படுத்தி முழுமையாக இறைவனை அடையும் வழியையே காட்டினார்.
ஆனால் மனிதன் தன் புலன்களைக் கட்டுப்படுத்தி முழுமையான இறை நோக்கத்தைத் தவறவிட்டதன் காரணத்தால் இறைத்தன்மை குறைந்து மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து சம்சார சாகரத்தில் சிக்கித் தவிக்கிறான்.
மனிதப்பிறவியின் உண்மை நோக்கமான இறைவனையடையும் வகையறியாது தவிக்கிறான்.
எனவே தொடர்ந்து இறை சிந்தனையில் மனதைச் செலுத்தி நமக்கு அளிக்கப்பட்ட இம்மனிதப்பிறவியின் பயனையடைவதே நமது ஒரே நோக்கமாக இருக்க வேண்டும்.
ஓம் சறி சாயி ராம்.
No comments:
Post a Comment