Sunday, February 7, 2021
உங்களுக்கு இறைவன் வேண்டும் என்ற உண்மையான உணர்வு மட்டும் இருக்குமானால், இறைவனே நேரில் உங்களிடம் வந்து பேசுவார்.
அன்பின் திருவுருவங்களே,கரங்கள், கண்கள், காதுகள், மூக்கு போன்றவை தேகத்தின் அங்கங்கள். அது போலவே மனிதர்கள் இந்த சமுதாயத்தின் அங்கங்கள். சமுதாயம் இந்த பிரக்ருதியின் அங்கம், பிரக்ருதி கடவுளின் அங்கம். இதன் மூலம், தனிப்பட்ட மனிதனுக்கும், இறைவனுக்கும் இடையே உள்ள அத்தியந்த உறவைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்ளலாம். உயிரற்ற ஜடங்களான தொலைபேசி போன்றவைக்கே இணைப்புகள் ஏற்படுத்த முடியுமென்றால்> மனிதனுக்கும், இறைவனுக்குமிடையே இணைப்பு இருக்க வேண்டாமா? முதலில் சொன்ன இணைப்புகள் எல்லாம் செயற்கை. ஆனால் இந்த இணைப்பு இதயம் சம்பந்தப்பட்டது. இதயத்துக்கு இதயம் இணையும் இணைப்பு இரண்டு வகை. ஒன்று நம்பர் மூலம் அழைப்பது. அதனை யார் வேண்டுமானாலும் ஏற்றுப் பேசலாம். இரண்டாவது தனிப்பட்ட நபருக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்டது. அதைப்போல உங்களது இணைப்புகள் எல்லாம் நேராக இறைவனோடு இருக்க வேண்டும். உங்களுக்கு இறைவன் வேண்டும் என்ற உண்மையான உணர்வு மட்டும் இருக்குமானால், இறைவனே நேரில் உங்களிடம் வந்து பேசுவார். நீங்கள் நம்பர் கோல் போல பேசினால், இறைவன் பதில் கூறமாட்டார். இங்கே நம்பர் கால் என்பது எதிர் மறையான எண்ணங்கள். ஆகவே எதிர் மறையான (நெகடிவ்) எண்ணங்களை விட்டு விட்டு பாஸிட்டிவ் எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். அகில உலகும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே
ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...
-
அன்பின் திருவுருவங்களே, நமக்குள்ளே இருக்கும் தெய்வீக இயல்பை நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். இதன் காரணமாகத் தேவையற்ற துன்பங்களுக்கு உட்ப...
-
ஓம் ஸ்ரீ சாயி ராம். நமது வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள்அனத்துக்கும் நாம் தான் காரணம். நமது வாழ்க்கையில் நடைபெறும் நல்லதோ கெட்டதோ அனைத்துக்க...
-
ஓம் சிறி சாயி ராம். தர்மசேத்திரம் எனப்படும் குருச்சேத்திரத்தில் பாண்டவர்களின் ஏழு அக்குரோணிச் சேனைகள் ஒருபுறமும் துரியோதனின் பதினொரு அக்க...
No comments:
Post a Comment