Monday, February 22, 2021

கரங்கள் சமூகத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் அதே வேளை சிந்தனை, மனம் இறைவன்மீது இருக்கவேண்டும்

சதுர்யுகங்களில் கடைசியான கலியுகத்தில் மனிதவாழ்க்கை லௌகிகத்தில் அமைகிறது. முந்தைய யுகங்களில் கடவுளை அடைய நோன்புகள். துறவறம் போன்ற விஷயங்களில் ஈடுபடவேண்டியிருந்தது. ஆனால் கலியுகத்தில் நாமஸ்மரணம், பஜனை மூலமாக மனதை இலகுவாக்கலாம். அதுமட்டுமன்றி துறவறத்தில் இருக்கக்கூடிய கடுமைகளை மாற்றி, லௌகீகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் சமுதாயத் தொண்டு புரிந்து இறைவனை அடையலாம் என்று சுவாமி கூறியிருக்கிறார். துறவறம் போன்றவை நமக்கு அவசியம் இல்லை. அனால் தனிப்பட்ட நபர்கள் சமுதாயத்தை மேம்படுத்துவதற்குத் தியாகம் செய்து தம்மை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்று சுவாமி சொல்கிறார். HANDS THAT SERVE ARE HOLIER THAN THE LIPS THAT PRAY என்று சுவாமி கூறுகிறார். பிரார்த்தனை செய்யும் உதடுகளைவிடச் சமுதாயத்துக்குச் சேவை செய்யு கரங்களே புனிதமானவை என்பதே சுவாமியின் வாக்கு. தனி மனிதனுக்கு ஆசைகள் இருக்கின்றன. ஆசைகளுக்கு வரம்பு கிடையாது. அளவும் கிடையாது. ஆனால் ஆசையின் பின்னே ஓடுகின்ற ஒரு மனிதன் தனது வாழ்நாளில் இன்பத்தையும், சுகத்தையும் சாந்தியையும் அனுபவிப்பது இல்லை. அவன் சுக துக்கங்களுக்கு இடையே மாட்டிக்கொண்டு விழிக்கிறான். அவன் தன்னை உயர்த்திக் கொள்ளவேண்டுமென்றால், ஆசையைக் களையவேண்டும். துறவு நிலையை ஏற்கவேண்டும். சாதாரண வாழ்க்கையில் துறவறத்தை எப்படி ஏற்கமுடியும் என்று கூறும்போது HANDS IN THE SOCIETY AND HEDS IN THE FOREST என்று கூறுகிறார். கரங்கள் சமூகத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் அதே வேளை சிந்தனை, மனம் இறைவன்மீது இருக்கவேண்டும் என்பது இதன் பொருள். குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டே துறவற நிலையை நம்மால் அடைய முடியும் என்று சுவாமி வழிகாட்டுகிறார்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...