Friday, February 5, 2021

அன்பையும், தியாகத்தையும் உங்களது மூச்சுக் காற்றாகக் கடைப்பிடியுங்கள்

அன்பின் அவதாரங்களே,அன்பையும், தியாகத்தையும் உங்களது பிராணனாக, மூச்சுக் காற்றாக எண்ணுங்கள். உங்கள் புலன்களை அடக்குங்கள். எந்த ஒரு ஆன்மீக சாதனை வெற்றி பெற வேண்டுமானாலும், புலனடக்கத்தின் மூலம் தெய்வீகமாக உயரமுடியும். கோபம் என்பது நாயின் இயல்பு. சலனப்படுத்திக் கொண்டே இருப்பது குரங்கின் குணம். உங்களுக்குக் கோபம் வரும் போது நான் நாயல்ல, நான் மனிதன் என்று நினைவு படுத்திக் கொள்ளுங்கள். அதைப் போலவே மனம் அலை பாயும் போது உங்களுக்குள் திரும்பத் திரும்பச் நான் குரங்கல்ல, நான் மனிதன் என்ற திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள்ளுங்கள். சத்தியம். தர்மம். சாந்தி. பிரேமை. அஹிம்சை ஆகியவை தான் உண்மையான மனித உயர் குண நலன்கள். இந்தக் குணநலன்களைப் பஞ்ச பிராணன்களுக்கு ஒப்பிடலாம். பிராண. அபான. வ்யான. உதான மற்றும் சமான என்பவையே பஞ்சப்பிராணன்கள். இந்தக் குணநலன்கள் ஏதாவது ஒன்றை இழந்தாலும் கூட வாழ்க்கையையே துறந்து விடுவதைப் போன்றது. ஒரு குணநலனும் மற்றொன்றின்றி வாழ இயலாது. இக் குணநலன்களை இழந்து விட்டதால் மனிதன் இன்று வாழும் பிணமாக இருக்கிறான். இக்குண நலன்களின் மேல் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். அவற்றைப் போற்றி வளர்த்து, அவற்றிடமிருந்து கிடைக்கும் ஆனந்தத்தை அனுபவியுங்கள். எங்கே நம்பிக்கை இருக்கிறதோ, அங்கே அன்பிருக்கிறது. எங்கே அன்பிருக்கிறதோ, அங்கே அமைதியிருக்கிறது. எங்கே அமைதியிருக்கிறதோ, அங்கே ஸத்யம் இருக்கிறது. எங்கே ஸத்யம் இருக்கிறதோ, அங்கே கடவுள் இருக்கிறார். எங்கே கடவுள் இருக்கிறாரோ, அங்கே ஆனந்தம் நிறைகிறது. அகில உலகும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...