Wednesday, February 3, 2021
நாம் பிறந்த நோக்கத்தை உணர்ந்து நல்வழியில் வாழ்வோம்.
அன்பின் வடிவங்களே,
குத்திய பிறகுதான் முள் என்று தெரிகிறது. தடுக்கிய பின்புதான், கல் என்று தெரிகிறது.வழுக்கிய பிறகுதான் அது வழுக்கல் நிலம் என்று புரிகிறது. சில சமயம் உண்டபின்தான் அது உறைப்பு என்று உணருகின்றோம். நமது செயல்பாடுகள் மகிழ்ச்சியாக ஆரம்பித்து பின் துக்கத்தில் முடிவதுண்டு . சொர்க்கத்துக்குள் நுழைவதுபோல் இருக்கும் பின்னர்தான் அது நரகம் என்று எண்ணிக் கலங்க முடிகிறது.
சுமைகளைச் சுமந்துகொண்டு அதை இறக்க முடியாமல் தவிக்கும் பலர் நம் மத்தியில் வாழ்கின்றார்கள். கால்களில்,கைகளில் எல்லாம் விலங்குகள், கழற்ற முடியாத நிலை. வாழமுடியாத, சாகமுடியாத குழப்பம். பலர் இன்று துயரங்களின் மொத்த வியாபாரியாக வாழ்கின்றார்கள். வாழ்வது எப்படி என்று பலர் சொல்லிச் சென்று இருக்கிறார்கள். ஆனால் அதைத் தெரிந்து கொள்ள நாம் தவறுகின்றோம். அல்லது தெரிந்தும் அதை உதாசீனம் செய்து துன்பத்தில் உழலுகின்றோம். மனிதனின் இந்த நிலையை அழகாகப் பாடி இருக்கிறார் பட்டினத்தார்.
" நாப்பிளக்க பொய் பேசி
நவநிதியம் தேடி
நலமொன்று மில்லாத
நாரியரைக் கூடி
பூப்பிளக்க வருகின்ற
புற்றீசல் போலப்,
புலபுலெனக் கலகலெனப்
புதல்வர்களை பெறுவீர்,
காப்பதற்கும் வழியறியீர்,
கைவிடவும் மாட்டீர்,
கவர் பிளந்த மரத்துளையில்
கால் நுழைத்துக் கொண்டே,
ஆப்பதனை அசைதிட்ட
குரங்கு நிலைபோல.
அகப்படீர் கிடந்துழல
அகப்படீர் நீரே "
எனவே நாம் பிறந்த நோக்கத்தை உணர்ந்து நல்வழியில் வாழ்வோம். அகில உலகும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்,
Subscribe to:
Post Comments (Atom)
கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே
ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...
-
அன்பின் திருவுருவங்களே, நமக்குள்ளே இருக்கும் தெய்வீக இயல்பை நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். இதன் காரணமாகத் தேவையற்ற துன்பங்களுக்கு உட்ப...
-
ஓம் ஸ்ரீ சாயி ராம். நமது வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள்அனத்துக்கும் நாம் தான் காரணம். நமது வாழ்க்கையில் நடைபெறும் நல்லதோ கெட்டதோ அனைத்துக்க...
-
ஓம் சிறி சாயி ராம். தர்மசேத்திரம் எனப்படும் குருச்சேத்திரத்தில் பாண்டவர்களின் ஏழு அக்குரோணிச் சேனைகள் ஒருபுறமும் துரியோதனின் பதினொரு அக்க...
No comments:
Post a Comment