Tuesday, February 2, 2021

நாடுகள், உடல்கள், உணர்வுகள் வேறு வேறாயினும் ஆத்ம தத்துவம் மட்டும் ஒன்றே

அன்பின் வடிவங்களே, நீங்கள் அனைவரும் ஒன்றே. எந்தத் தேசத்தைச் சேர்ந்தவராயினும் சரி. பல்புகள் வேறானாலும் அவற்றினுள் பாயும் மின்சாரம் ஒன்றே. அதைப் போலவே நாடுகள், உடல்கள், உணர்வுகள் இவையெல்லாம் வேறு வேறாயினும் ஆத்ம தத்துவம் மட்டும் அனைத்திலும் ஒன்றே. ஆகவே ஜாதி. மதம். தேசியம் ஆகியவற்றின் பெயரால் வேறுபாடுகளைத் துறந்து. ஒற்றுமையின் செய்தியை எல்லோரிடத்தும் பரவச் செய்யுங்கள். நாடுகள் பல ஆயினும் மண் ஒன்றே! நகைகள் பல ஆயினும் தங்கம் ஒன்றே! பசுக்கள் பல ஆயினும் பால் ஒன்றே! உடல்கள் பல ஆயினும் மூச்சு ஒன்றே!. இவ்வாறு அனைத்து உயிரினங்களிலும் ஒற்றுமை கண்டு நீங்கள் சேவை புரியும் போது தான் ஆனந்தம் அனுபவமாகிறது. நீங்கள் அன்பிலேயே பிறந்தீர்கள், அன்பிலேயே வளர்க்கப்பட்டிருக்கிறீர்கள். அன்பிலேயே ஐக்கியமாகிறீர்கள். பஞ்சபூதங்கள் சுயநலமற்ற தன்மைக்கு முழுமையான வடிவங்கள். சூரியன், சிருஷ்டிக்கப்பட்ட உயிரினங்களுக்கு ஒளியும், வெப்பமும், வாழ்வும் தந்து போஷிக்கிறது. மரங்கள் கரியமில வாயுவைத் தன்னுள்ளே ஏற்று மனித வாழ்க்கைக்குத் தேவையான பிராண வாயுவைத் தருகின்றன. தாய் போன்ற மண்ணோ, பொறுமைக்கும், தியாகத்துக்கும் எடுத்துக்காட்டாய் பாடம் போதிக்கிறது. எந்த விதமான பிரதியுபகாரமும் எதிர் பாராமல் இவை மனித குலத்திற்குத் தொண்டாற்றுகின்றன. இயற்கையை விடச் சுயநல மற்ற அன்பிற்குச் சிறந்த உதாரணம் வேறெதுவும் இல்லை. இயற்கையில் பிறந்து, இயற்கையினாலேயே போற்றிப் பாதுகாக் கப்படும் மனிதன், இயற்கை வெளிப்படுத்தும், இத்தகைய நற்குணங்களைத் தன்னககத்தே கொள்ளாமல், சுயநலமும், சுயலாபமும் கொண்ட வாழ்க்கை வாழ்வது மிகவும் அவமானகரமானது. இளைய தலைமுறையினர் சுயநலத்தையும், சுயலாபத்தையும் ஒரு சிறிய துளி கூட மிச்சமிராமல் வேரோடு களையவேண்டும். உலக மாந்தர் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் எனவும் விரும்பவேண்டும். ஸமஸ்த லோகா ஸூகினோ பவந்து (உலகம் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்) எனவும் வாழ்த்துவோம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...