Saturday, February 27, 2021
வணங்கும் கடவுளின் பெயரையோ வடிவத்தையோ மாற்றிக்கொண்டிருக்கக் கூடாதெனப் பகவான் கூறுகிறார்.
அன்பின் வடிவங்களே, ஆத்மாவுக்கு உருவம் இல்லை. கடவுளிடம் நீங்கள் யார் என்று யாராவது கேட்டால், நான் ராமர். நான் கிருஷ்ணர், நான் யேசு, நான் புத்தர் நான் சாயிபாபா என்றெல்லாம் சொல்ல மாட்டார். சாயி பாபா என்பது இவ்வுடலின் பெயர் மட்டுமே. ராமா என்பதும் உடலின் பெயர். சாயி பாபா என்னும் பெயர் தாய் தந்தையரால் வைக்கப்பட்டது. பெயர் என்பது வைக்கப்பட்டதே தவிர நம்முடன் பிறந்தது இல்லை. உடல் பிறந்தது. ஆனால் அதற்குப் பெயர் இல்லை. பிறந்த பின்னர் தான் பெயர் சூட்டப்படுகிறது. பிறந்த உடல் ஒருநாள் அழிந்தே தீரும். உடலுடன் பெயரும் அழிந்து விடும். பிறக்காததும் அழியாததும் ஒன்றே ஒன்றுதான். அது தான் ஆத்மா.
நீங்கள் யாரென்று கேட்டால் நான் கடவுளே , அஹம் ப்ரம்மாஸ்மி, என்றுதான் பகவான் சொல்வார். நான் ப்ரம்மம் என்றுதான் அவர் கூறுவாரே தவிர, நான் சாயி பாபா என்று கூற மட்டார். அதே வேளை நீங்களும் கடவுளே என்றும் கூறுவார். நான் அல்லது கடவுள் என்பதற்கு எந்தப் பெயரும் கிடையாது. அகம் என்பது ஆத்மாவின் பெயர். அதனால் ஆத்மாவைத் தான் போற்றவேண்டும். வடிவத்தையல்ல. இந்த ஆத்மாவிற்குப் பல பெயர்களை வைத்து மகிழ்கிறீர்கள். சாதாரண சிறியதான் சிருஷ்டிக்கு இவ்வளவு பெயர்களை வைக்கிறீர்கள். ஏதாவது கஷ்டம் வந்தால் ஐயோ கடவுளே என்கிறார்கள். அவ்வேளையில் யாரும் வடிவத்தை நினைப்பதில்லை. எனவே உங்களுக்கு விரும்பிய ஒரே பெயரையும் அதே உருவத்தையும் மனதில் பதிய வைத்து அவற்றையே பிரார்த்தித்து வந்தால் உங்களுக்கு விருப்பமான உருவத்தில் கடவுள் உங்கள் முன் தோன்றுவார். அவ்வடிவத்தை இதயத்தில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும். வணங்கும் பெயரையோ வடிவத்தையோ மாற்றிக்கொண்டிருக்கக் கூடாதெனப் பகவான் கூறுகிறார். உலகம் அனைத்தும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே
ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...
-
அன்பின் திருவுருவங்களே, நமக்குள்ளே இருக்கும் தெய்வீக இயல்பை நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். இதன் காரணமாகத் தேவையற்ற துன்பங்களுக்கு உட்ப...
-
ஓம் ஸ்ரீ சாயி ராம். நமது வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள்அனத்துக்கும் நாம் தான் காரணம். நமது வாழ்க்கையில் நடைபெறும் நல்லதோ கெட்டதோ அனைத்துக்க...
-
ஓம் சிறி சாயி ராம். தர்மசேத்திரம் எனப்படும் குருச்சேத்திரத்தில் பாண்டவர்களின் ஏழு அக்குரோணிச் சேனைகள் ஒருபுறமும் துரியோதனின் பதினொரு அக்க...
No comments:
Post a Comment