Friday, February 26, 2021
கண்களை மூடிக்கொண்டு உங்களுக்குள் இருக்கும் கடவுளைப் பிரார்த்தனை செய்யுங்கள். கடவுள் உங்கள் முன் தோன்றி வரத்தை அருள்வார்.
அன்பின் வடிவங்களே,பணத்தைக் கொண்டு கடவுளைப் பெற முடியாது. கடவுள்தான் எல்லாச் செல்வங்களையும் அருள்பவர். கடவுளுக்கு உங்கள் பணம் எதற்காகத் தேவைப்படுகிறது. அந்தப் பணத்தை உங்கள் நல்வாழ்வுக்காகச் செலவிடவேண்டும். ஏழை எளிய மக்களுக்கு உதவிசெய்ய வேண்டும். நாம் நாமஸ்மரணையில் மாத்திரம் திருப்தியடைவதாகச் சுவாமி சொல்கிறார். அதனால் இறைநாமத்தில் அக்கறை செலுத்தவேண்டும். அதுதான் இறைவனை அடைவதற்கு ஒரே வழி. கடவுளை அவரது திருநாமத்தினால் மட்டுமே எளிதில் அடைய முடியும். திரௌபதி எவ்வளவு பெயர்களைக் கூறிக்கதறினாள். இறுதியில் இருதயவாசி என்றாள். அக்கணமே கிருஷ்ணர் தோன்றினார். உண்மையில் இதயமே கடவுள். கடவுள் இதயத்தில் இருக்கிறார். கடவுள் உங்களுக்குள்ளே இருந்தும் கூட நீங்கள் அவரை வெளியில் தேடுகிறீர்கள். உங்களால் பணத்தின் மூலம் வெளியில் உள்ள பொருட்களைத்தான் அடைய முடியுமே தவிரக் கடவுளை அடைய முடியாது. கடவுளை நீங்கள் உங்களுக்குள்ளே தான் தேடவேண்டும். உள்ளத்துக்குள் பாருங்கள். வெளியில் தேடாதீர்கள். கண்களை மூடிக்கொண்டு உங்களுக்குள் இருக்கும் கடவுளைப் பிரார்த்தனை செய்யுங்கள். கடவுள் உங்கள் முன் தோன்றி வரத்தை அருள்வார். அதனால் திருநாமத்தால் கடவுளை வர்ணிக்கலாம், அறியலாம், அடையலாம். உலகம் அனைத்தும் நலமாக வாழ வாழ்த்துவோம்
Subscribe to:
Post Comments (Atom)
கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே
ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...
-
அன்பின் திருவுருவங்களே, நமக்குள்ளே இருக்கும் தெய்வீக இயல்பை நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். இதன் காரணமாகத் தேவையற்ற துன்பங்களுக்கு உட்ப...
-
ஓம் ஸ்ரீ சாயி ராம். நமது வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள்அனத்துக்கும் நாம் தான் காரணம். நமது வாழ்க்கையில் நடைபெறும் நல்லதோ கெட்டதோ அனைத்துக்க...
-
ஓம் சிறி சாயி ராம். தர்மசேத்திரம் எனப்படும் குருச்சேத்திரத்தில் பாண்டவர்களின் ஏழு அக்குரோணிச் சேனைகள் ஒருபுறமும் துரியோதனின் பதினொரு அக்க...
No comments:
Post a Comment