Wednesday, February 24, 2021
நலனை விரும்புபவர்கள் எப்பொழுதும் அன்பையும் சத்தியத்தையும் கடைப்பிடித்து வாழவேண்டும்
அன்பின் வடிவங்களே, சத்தியத்தைவிட உயர்ந்த தர்மம் எதுவும் இல்லை. அதனால் எப்பொழுதும் உண்மையையே பேசவேண்டும். சத்தியமே இறைவனின் திருவுள்ளம். எப்பொழுதும் இறைவனின் திருப்பெயரைச் சொல்லுங்கள். வழிபாட்டுக்கென வீண்செலவு செய்யாதீர்கள். உணவற்றவர்களுக்கு உணவு அளித்திடுங்கள். உடையற்றவர்களுக்கு உடை கொடுங்கள். ஆனால் கடவுளின் பெயரைச் சொல்லாமல். எதையும் செய்யக்கூடாது. வெளியில் உரக்கச் சொல்லத்தேவையில்லை. மனதுக்குள்ளாகவே சொன்னால் போதும். பிச்சயிடும்போதுகூட உங்கள் மனுதுக்குப் பிடித்த இறைவனின் பெயரைச் சொல்லிக் கொண்டே கொடுக்கவேண்டும். மனம்தான் எல்லாவற்றுக்கும் ஆதாரம். மனம் தான் அடிமைத்தனத்துக்கும் வீடுபேற்றுக்கும் காரணம். எதை மறந்தாலும் கடவுளின் திருப்பெயரை மாத்திரம் மறக்கக்கூடாது. திருநாமத்தால் துன்பம் விலகும். அமைதியின்மை, கோபம், துன்பம், துயரம் அனைத்தையும் கடக்க இறைவனின் நாமம் ஒன்றே போதுமானது. காமம், குரோதம், மோகம், கோபம் போன்ற அனைத்துமே இராட்சச குணம் கொண்டவை. இராட்சசர்களை நாம் அண்டவிடக்கூடாது. கோபம் என்னும் அரக்கனை அனுமதித்தால் அது எல்லாவற்றையும் அழித்துவிடும். கோபமுடைய மனிதனை நம்பி எந்தவேலையையும் கொடுக்கக்கூடாது. அவனிடமிருந்து உறவினர்கள் கூட விலகிவிடுவார்கள். கோபம் , பொறாமை ஆகியவை நம்மை அணுகவிடக்கூடாது. எப்பொழுதும் அன்பு வடிவமாகக் கடவுளின் நாமத்தை உச்சரித்தவண்ணமே இருக்கவேண்டும். இவ்வாறு சத்தியத்தை அனைவரும் கடைப்பிடித்தால் நாடு வளம்பெறும். நாட்டு நலனை விரும்புபவர்கள் எப்பொழுதும் அன்பையும் சத்தியத்தையும் கடைப்பிடித்து வாழவேண்டும். யாருக்கும் எவ்வித துன்பமும் தராமல் வாழவேண்டும். உலகதின் அனைவரும் சுகமாக வாழவேண்டுமெனப் பிரார்த்திக்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே
ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...
-
அன்பின் திருவுருவங்களே, நமக்குள்ளே இருக்கும் தெய்வீக இயல்பை நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். இதன் காரணமாகத் தேவையற்ற துன்பங்களுக்கு உட்ப...
-
ஓம் ஸ்ரீ சாயி ராம். நமது வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள்அனத்துக்கும் நாம் தான் காரணம். நமது வாழ்க்கையில் நடைபெறும் நல்லதோ கெட்டதோ அனைத்துக்க...
-
ஓம் சிறி சாயி ராம். தர்மசேத்திரம் எனப்படும் குருச்சேத்திரத்தில் பாண்டவர்களின் ஏழு அக்குரோணிச் சேனைகள் ஒருபுறமும் துரியோதனின் பதினொரு அக்க...
No comments:
Post a Comment