Tuesday, February 23, 2021

யாரை நீங்கள் வணங்கினாலும் உங்கள் பிரார்த்தனை கடவுள் ஒருவரையே அடையும்

அன்பின் வடிவங்களே,கடவுளின் சங்கல்பம் என்ன என்று யாராலும் அறிந்துகொள்ள முடியாது. கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார். நீங்கள் எங்கு பார்த்தாலும் அங்கெல்லாம் கடவுள் வியாபித்துள்ளார். அப்படிப்பட்ட கடவுளை ஜபம், யாகம், தியானம் போன்றவை மூலமாக மாத்திரம் அடைந்துவிட முடியாது. மனிதன் பலவீனங்களின் வடிவானவன். கடவுள் எப்படிப்பட்டவர் என்று யாராலும் சொல்லமுடியாது. யாரை நீங்கள் வணங்கினாலும் ஒருவரான கடவுளையே அடையும். இந்த ரகசியத்தை மனிதர்கள் புரிந்துகொள்வதில்லை. அதிகமான மக்களுக்கு ஆன்மீகத்தில் நோக்கம் இல்லை. சாதாரண மனிதர்களிலிருந்து மகான்கள் வரையில் யாக யக்ஞங்களில் திருப்தியடைந்து விடுகிறார்கள். கடவுள் நன்நடத்தையையும் ஆன்மீகத்தையும் தான் எதிர்பார்க்கிறார். இவ்வுலகில் செல்வமும் சிபார்சும் தான் முதலிடம் பெறுகின்றன. இது மிகுந்த அறியாமையாகும். இந்த அறியாமையிலிருந்து வெளியேறாத வரை கடவுளைப் புரிந்துகொள்ள முடியாது. நான் என்னும் ஆணவமும் என்னுடையது என்னும் அகம்பாவமும் உள்ள இதயங்களைக் கடவுள் விரும்பமாட்டார். உலகில் சேர்த்துவைப்பதெல்லாம் ஒருநாள் அழியத்தான் வேண்டும். மனித உடலும் ஒருநாள் அழிந்துவிடும். எனவே பிறந்து இறக்கும் இவ்வுலக வாழ்வின் துயரங்களிலிருந்து விடுதலைபெற்று இறைவனுடன் இரண்டறக்கலப்பதற்கான சத்தியம், தர்மம், சாந்தி, பிரமை, அகிம்சை, திரிகரணசுத்தி என்பவற்றைக் கடைப்பிடித்து பிறவிப்பெருங்கடலிலிருந்து மீட்சியடைவோம். உடலுக்கு உணவளிப்பது போன்று நமது ஆத்மாவுக்குரிய உணவையும் அளித்து இறைவனுடன் ஒண்றிணைந்து பேரின்பத்தை அடைவோம். உலகம் அனைத்தும் நலமாக வாழ வாழ்த்துவோம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...