Monday, February 1, 2021
நேர்மையாக நடக்கும் போது தான் சமத்துவம். சகோதரத்துவம். சுதந்திரம் ஆகியவை நிலவும்.
அன்பின் வடிவங்களே,
இவ்வுலகின் எதிர் காலம், நன்மையோ அன்றித் தீமையோ - எதுவானாலும் உங்களது நடத்தையைப் பொறுத்தே அமையப் போகிறது. இவ்வுலகம் பாதுகாப் பாகவும், பத்திரமாகவும், அமைதியாகவும், வளமாகவும் இருக்க வேண்டுமானால் உங்கள் நடத்தையும் ஒழுக்கமும் நல்லதாக இருக்க வேண்டும். இவ்வுலகத் திற்குத் தற்போதய தேவை, ஆடம்பரமும், உலகியல் சுகங்களும் அல்ல, மேன்மையான குணங்களும், நல் ஒழுக்கமும் நிறைந்த ஆடவரும், பெண்டிரும் தான். சரியான வழிமுறைகளில், இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் நடவடிக்கைகள் அமையாமல் போகுமானால் எதிர்காலத்தில் மகிழ்ச்சியும் சமாதானமும் இருக்காது
சத்யம், தர்மம், தியாகம் ஆகியவற்றைப் பின்பற்றி நடப்பவனே உண்மையான மனிதன். சத்யம் என்பது நீதி, தர்மம் என்பது ரீதி, தியாகம் என்பது க்யாதி. இவை மூன்றும் சேர்ந்ததே மானவஜாதி. (மனித குலம்). இந்த மனித குலம் சத்தியத்திலிருந்து உருவாயிற்று.
இந்தப் படைப்பு அனைத்தும் சத்தியத்திலிருந்தே பிறந்து உருவாகிக் கடைசியில் சத்தியத்திலேயே ஐக்கியமாகிறது. சத்தியம் இல்லாத இடமே இவ்வுலகில் இல்லை. இந்தத்தூய கலப்பற்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.
இதை ஆதாரமாகக் கொண்டே உண்மையே பேசு, இனிமையாகப் பேசு, என்று அறிஞர்களும், ஞானிகளும் கூறியுள்ளார்கள். 'ஸத்யம் ப்ருயாத்' என்பது நேர்மை என்னும் குணநலனைக் குறிப்பிடுகிறது. மானவ ஜாதி (மனித குலம்) நீதி (நேர்மை, ஒழுக்கம்) இன்றி வாழ முடியாது. அநியாயம். பொய்மை. அதர்;மம். இவற்றால் எல்லாம் சூழப்பட்டு இன்றைய உலகம் தத்தளிக்கிறது. சரிந்து வரும் மனித உயர்குண நலன்களை மீட்டு வந்து நிலை நாட்ட இளைஞர்களாலும். யுவதிகளாலும் மட்டுமே முடியும். மனிதன் நேர்மையைப் போற்றி அதன் வழி நடக்கும் போது தான் சமத்துவம். சகோதரத்துவம். சுதந்திரம் ஆகியவை சமுதாயத்தில் நிலவும். நேர்மையைத் தன் வழிமுறையாகக் கொள்ள வேண்டுமானால் மனிதன் சத்தியத்தை ஒட்டி நடக்க வேண்டும். இதனால் தான் ‘சத்தியம் ப்ருயாத்’ எனக் கூறுகிறார்கள். இது தான் மனிதனின் தலையாய கடமை. இரண்டாவது ‘ப்ரியம் ப்ருயாத்’ (இனிமையாகப் பேசுங்கள்). இது தர்மம் என்னும் குண நலனைக் குறிக்கிறது.
இதை அடிப்படையாகக் கொண்டுதான் பகவத் கீதையில் “சத்தியத்தை இனிமையாகவும் முழுமையாகவும் பேசுங்கள், உங்களது பேச்சு. மற்றவர்களது உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் தூண்டிவிடுவதாக அமையக் கூடாது, ஆன்மீக குண நலனைக் கடைப்பிடிக்கவேண்டும், ஆன்மீகப் பாதையில் செல்ல இந்தக் குணநலன்களை மனிதன் கைக்கொள்ள வேண்டும்" என்று சொல்லப்பட்டுள்ளது. அகில உலகும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே
ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...
-
அன்பின் திருவுருவங்களே, நமக்குள்ளே இருக்கும் தெய்வீக இயல்பை நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். இதன் காரணமாகத் தேவையற்ற துன்பங்களுக்கு உட்ப...
-
ஓம் ஸ்ரீ சாயி ராம். நமது வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள்அனத்துக்கும் நாம் தான் காரணம். நமது வாழ்க்கையில் நடைபெறும் நல்லதோ கெட்டதோ அனைத்துக்க...
-
ஓம் சிறி சாயி ராம். தர்மசேத்திரம் எனப்படும் குருச்சேத்திரத்தில் பாண்டவர்களின் ஏழு அக்குரோணிச் சேனைகள் ஒருபுறமும் துரியோதனின் பதினொரு அக்க...
No comments:
Post a Comment