Monday, February 1, 2021
சமுதாயத் தொண்டு புரிந்து இறைவனை அடையலாம் என்று பகவான் கூறியிருக்கிறார்
அன்பின் திர் உருவங்களே,
கலியுகத்தில் நாமஸ்மரணம், பஜனை மூலமாக மனதை இலகுவாக்கலாம். அதுமட்டுமன்றி துறவறத்தில் இருக்கக்கூடிய கடுமைகளை மாற்றி, லௌகீகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் சமுதாயத் தொண்டு புரிந்து இறைவனை அடையலாம் என்று சுவாமி கூறியிருக்கிறார். துறவறம் போன்றவை நமக்கு அவசியம் இல்லை. அனால் தனிப்பட்ட நபர்கள் சமுதாயத்தை மேம்படுத்துவதற்குத் தியாகம் செய்து தம்மை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்றும்,. HANDS THAT SERVE ARE HOLIER THAN THE LIPS THAT PRAY என்று சுவாமி கூறுகிறார். பிரார்த்தனை செய்யும் உதடுகளைவிடச் சமுதாயத்துக்குச் சேவை செய்யும் கரங்களே புனிதமானவை என்பதே சுவாமியின் வாக்கு. தனி மனிதனுக்கு ஆசைகள் இருக்கின்றன. ஆசைகளுக்கு வரம்பு கிடையாது. அளவும் கிடையாது. ஆனால் ஆசையின் பின்னே ஓடுகின்ற ஒரு மனிதன் தனது வாழ்நாளில் இன்பத்தையும், சுகத்தையும் சாந்தியையும் அனுபவிப்பது இல்லை. அவன் சுக துக்கங்களுக்கு இடையே மாட்டிக்கொண்டு விழிக்கிறான். அவன் தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டுமென்றால், ஆசையைக் களையவேண்டும். துறவு நிலையை ஏற்கவேண்டும். சாதாரண வாழ்க்கையில் துறவறத்தை எப்படி ஏற்கமுடியும் என்று கூறும்போது HANDS IN THE SOCIETY AND HEAD IN THE FOREST என்று கூறுகிறார். கரங்கள் சமூகத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் அதே வேளை சிந்தனையும் மனமும் இறைவன்மீது இருக்கவேண்டும் என்பது இதன் பொருள். குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டே துறவற நிலையை நம்மால் அடைய முடியும் என்று சுவாமி வழிகாட்டுகிறார். மனிதனுடைய வாழ்வில் நான்கு நிலைகள் இருக்கின்றன. பிரம்மச்சரியம், சம்சாரம், வானப்பிரஸ்தம் சன்னியாசம் என்பனவே அவை. இவைகளில் சம்சார நிலை தவிர மற்ற மூன்று நிலைகளில் இருப்பவர்கள் பணத்தைக் கையாளக்கூடாது என்பது சனாதன தர்மத்தின் வழக்கமாகும். குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்கள் மற்ற மூன்று நிலைகளில் இருப்பவர்களை அரவணைத்து ஆதரவளித்து அவர்களைப் பேணவேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் சுவாமி இதனிலும் மேலாக சமூகத்தில் இருப்போர், சமுதாயத் தொண்டு புரிவோர்களது மன நிலை துறவிகளுடையதைப் போன்று இருந்தால் வாழ்க்கை சுகமாகும் என்று விளக்குகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே
ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...
-
அன்பின் திருவுருவங்களே, நமக்குள்ளே இருக்கும் தெய்வீக இயல்பை நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். இதன் காரணமாகத் தேவையற்ற துன்பங்களுக்கு உட்ப...
-
ஓம் ஸ்ரீ சாயி ராம். நமது வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள்அனத்துக்கும் நாம் தான் காரணம். நமது வாழ்க்கையில் நடைபெறும் நல்லதோ கெட்டதோ அனைத்துக்க...
-
ஓம் சிறி சாயி ராம். தர்மசேத்திரம் எனப்படும் குருச்சேத்திரத்தில் பாண்டவர்களின் ஏழு அக்குரோணிச் சேனைகள் ஒருபுறமும் துரியோதனின் பதினொரு அக்க...
No comments:
Post a Comment