Sunday, January 31, 2021

தியாக குணத்தைக் கடைப்பிடித்துவந்தால் மிகச் சிறந்த மனிதர்களாகிவிடுவீர்கள்

அன்பின் திரு உருவங்களே, பசியுள்ளவர்களுக்கு உணவு கொடுங்கள். ஆனால் பணம் கொடுக்காதீர்கள். அணிய ஆடையில்லாதவர்களுக்கு ஆடையைக் கொடுங்கள். பலர் பணத்தை வாரி வழங்கி நம்மை மற்றவர்களைச் சார்ந்து வாழும் கீழ் நிலைக்குத் தள்ளிவிட்டார்கள். இப்படிப் பணத்துக்கு அடிபணியும் கீழ் நிலைக்கு நாம் ஒருபோதும் சென்றுவிடக்கூடாது. எப்பொழுதும் கௌரவத்துடன் வாழவேண்டும். மனிதவாழ்க்கை கௌரவமானது. கௌரவம் விலைமதிப்பற்றது. சில நாட்களின் முன் ஒரு வெளிநாட்டுப் பக்தர் ஒரு புதிய காரை பவானிடம் கொடுத்து ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடினார். மூன்று நட்களாக அவர் முகத்தைக்கூடப் பகவான் பார்க்கவில்லை. வெளிநாட்டிலிருந்து பக்தியோடு அனுப்பியதால் மறுக்க மனமின்றி அதனை வைத்திருக்கிறேன். யார் எதைக்கொடுத்தாலும் சுவாமி வாங்கமாட்டார். அந்தப் பக்தர் மிக மனம் வருந்துவதால் அந்தக் காரைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று பக்தர்கள் மன்றாடினர். கொடுப்பதையெல்லாம் வாங்குவது பண்பல்ல. தியாக குணத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும். மற்றவர்களுக்காகத் தியாக குணத்தை வெளிப்படுத்த வேண்டும். சிறு வயதிலிருந்தே இப் பண்பை பகவான் கடைப்பிடித்து வருகிறார். நீங்களும் தியாக குணத்தைக் கடைப்பிடித்துவந்தால் மிகச் சிறந்த மனிதர்களாகிவிடுவீர்கள். சிறந்தவர்களாக மட்டுமன்றி மிகப் புண்ணியம் செய்தவர்களாகவும் ஆகிவிடுவீர்கள். புண்ணியசாலியாவது மட்டுமன்றி மோட்சமும் பெற்றுவிடுவீர்கள். மோட்சம் என்றால் என்ன. மோகத்தை விட்டுவிடுவதே மோட்சம். மோகத்தை முடிந்தளவு குறைத்துக்கொள்ளவேண்டும். எனவே அனைவரையும் அன்புடன் நேசியுங்கள். ஆனால் மனிதர்களைச் சார்ந்திருக்காதீர்கள். மனிதர்களை நேசியுங்கள். அனால் நம்பாதீர்கள். மற்றவர்களை நம்புவதால் மனரீதியில் மற்றவர்களைச் சார்ந்தவர்களாகிவிடுவீர்கள். அனைவரையும் அன்புடன் நேசியுங்கள். அனைவர்மேலும் அன்பு வையுங்கள். மற்றவர்களுக்குச் சேவை செய்யுங்கள். LOVE ALL: SERVE ALL. ஆனால் மற்றவரைச் சார்ந்தவராகிவிடாதீர்கள். Samastha Lokha Sukinoe Bavanthu.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...