Tuesday, January 26, 2021
உடல் பிறந்தது. பிறந்த உடல் ஒருநாள் அழிந்தே தீரும். பிறக்காததும் அழியாததும் ஆத்மா மத்திரமே
அன்பின் வடிவங்களே,
பணம் வரும் போகும்(MONEY COMS AND GOES), MORALITY COMES AND GROWS- நன்னடத்தை வரும் வளரும். ஆகவே நன்னடத்தையை வளர்த்துக்கொள்ளுங்கள். அதுதான் உயர்ந்த வரப்பிரசாதம். லட்சார்ச்சனை செய்தலும், கோடியர்ச்சனை செய்தாலும் அவற்றால் உங்களுக்குத் தற்காலிகத் திருப்திதான் கிடைக்கும். மக்கள் பலதரப்பட்ட வழிகளில் பணத்தை விரயம் செய்கிறார்கள். வீட்டுக்குப் பிச்சைக்காரர்கள் வந்தால் ஒருபிடி உணவுகூடக் கொடுக்கமாட்டார்கள். ஆனால் யாகங்கள் யக்ஞங்களுக்குக் கோடிக்கணக்கில் செலவுசெய்கிறார்கள். பணத்தைக் கொண்டு கடவுளைப் பெற முடியாது. கடவுள்தான் எல்லாச் செல்வங்களையும் அருள்பவர். கடவுளுக்கு உங்கள் பணம் எதற்காகத் தேவைப்படுகிறது. அந்தப் பணத்தை உங்கள் நல்வாழ்வுக்காகச் செலவிடவேண்டும். ஏழை எளிய மக்களுக்கு உதவிசெய்ய வேண்டும். நாம் நாமஸ்மரணையில் மாத்திரம் திருப்தியடைவதாகச் சுவாமி சொல்கிறார். அதனால் நாமத்தில் அக்கறை செலுத்தவேண்டும். அதுதான் இறைவனை அடைவதற்கு ஒரே வழி. கடவுளை அவரது திருநாமத்தினால் மட்டுமே எளிதில் அடைய முடியும். திரௌபதி எவ்வளவு பெயர்களைக் கூறிக் கதறினாள். இறுதியில் இருதயவாசி என்றாள். அக்கணமே க்ரிஷ்ணர் தோன்றினார். உண்மையில் இதயமே கடவுள். கடவுள் இதயத்தில் இருக்கிறார். கடவுள் உங்களுக்குள்ளே இருந்தும் கூட நீங்கள் அவரை வெளியில் தேடுகிறீர்கள். உங்களால் பணத்தின் மூலம் வெளியில் உள்ள பொருட்களைத்தான் அடைய முடியுமே தவிரக் கடவுளை அடைய முடியாது. கடவுளை நீங்கள் உங்களுக்குள்ளே தான் தேடவேண்டும். உள்ளத்துக்குள் பாருங்கள். வெளியில் தேடாதீர்கள். கண்களை மூடிக்கொண்டு உங்களுக்குள் இருக்கும் கடவுளைப் பிரார்த்தனை செய்யுங்கள். கடவுள் உங்கள் முன் தோன்றி வரத்தை அருள்வார். அதனால் திருநாமத்தால் கடவுளை வர்ணிக்கலாம், அறியலாம், அடையலாம். இப்படிப் பெயெரை உச்சரிப்பதற்கே நகர சங்கீர்த்தனங்கள் தொடங்கப்பட்டன. நகர சங்கீர்த்தனங்களில் இறைவனுடைய தோற்றங்களைப் போற்றவேண்டிய அவசியம் இல்லை. கடவுளை அளவற்ற ரூபங்களால் போற்றினாலும் பயனில்லை. கடவுள் ஆத்மசொரூபமானவர். ஆத்மாவுக்கு உருவம் இல்லை. கடவுளிடம் நீங்கள் யார் என்று யாராவது கேட்டால், நான் ராமர். நான் கிரிஷ்ணர், நான் சாயிபாபா என்றெல்லாம் சொல்ல மாட்டார். சாயி பாபா என்பது இவ்வுடலின் பெயர் மட்டுமே. ராமா என்பதும் உடலின் பெயர். சாயி பாபா என்னும் பெயர் தாய் தந்தையரால் வைக்கப்பட்டது. பெயர் என்பது வைக்கப்பட்டதே. பிறந்தது இல்லை. உடல் பிறந்தது. ஆனால் அதற்குப் பெயர் இல்லை. பிறந்த உடல் ஒருநாள் அழிந்தே தீரும். உடலுடன் பெயரும் அழிந்து விடும். பிறக்காததும் அழியாததும் ஒன்றே ஒன்றுதான். அது தான் ஆத்மா. சகல உலகும் நலமாக வாழப் பிரார்த்திப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே
ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...
-
அன்பின் திருவுருவங்களே, நமக்குள்ளே இருக்கும் தெய்வீக இயல்பை நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். இதன் காரணமாகத் தேவையற்ற துன்பங்களுக்கு உட்ப...
-
ஓம் ஸ்ரீ சாயி ராம். நமது வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள்அனத்துக்கும் நாம் தான் காரணம். நமது வாழ்க்கையில் நடைபெறும் நல்லதோ கெட்டதோ அனைத்துக்க...
-
ஓம் சிறி சாயி ராம். தர்மசேத்திரம் எனப்படும் குருச்சேத்திரத்தில் பாண்டவர்களின் ஏழு அக்குரோணிச் சேனைகள் ஒருபுறமும் துரியோதனின் பதினொரு அக்க...
No comments:
Post a Comment