Wednesday, January 6, 2021
நாம் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக நற்குண, நற்செய்கைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்
அன்பின் திரு உருவங்களே,
எப்பொழுதும் நமது எண்ணமும், சொல்லூம், செயலும் ஒன்றாக இருக்கவேண்டும். இதனைக் குழந்தைகளுக்குச் சிறு பராயத்திலிருந்தே கற்றுக் கொடுக்கவேண்டும். அதனால் அவர்கள் வளர்ந்த பின்னரும் நற்குணங்களுடன் நற்செயல்களைத் தொடர்ந்து கடைப்பிடிப்பார்கள். தற்காலத்தில் பல குடும்பங்களில் பெரியவர்களே தவறுகளைக் குழந்தைகளின் எதிரிலேயே செய்கிறார்கள். குழந்தைகள் பெரியவர்களின் ஒவ்வொரு செயலையும் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக தனது தகப்பனாரைத் தேடி அவருக்கு வேண்டாதவர்கள் யாராவது வந்தால், வீட்டினுள் இருந்தபடியே தான் வீட்டில் இல்லையென்று சொல்லும் படி குழந்தையிடம் கூறச்சொல்வது போன்ற சம்பவங்கள் பல குடும்பங்களில் நடைபெறுகின்றன. குழந்தை தகப்பன் பொய்சொல்வதை அவதானிக்கிறது. அதே போல் ஆசிரியாரோ , தந்தை போன்ற பெரியவர்களோ புகைபிடிப்பதைக் குழந்தைகள் பார்கிறார்கள். அப்போது இவை கெட்ட பழக்கங்கள் என்று தம்மிடம் சொல்லும் பெரியவர்களே தவறான காரியங்களைச் செய்வது, குழந்தைகளின் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே குழந்தைகளுக்கு முன்மாதிரியாக நாம் நடந்துகொள்ள வேண்டும். அப்படியானால்தான் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது நற்குண, நற்செய்கைகளையே கடைப்பிடிப்பார்கள் என்பதை மனதில் கொண்டு நாம் நடந்துகொள்வோம். அதன் மூலம் எதிர்காலத்தை சத்திய யுகமாக மாற்றுவோம். உலகத்திலுள்ள அனைவரும் சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சை, தியாகம் என்பவவற்றை உலக மக்கள் அனைவரும் கடைப்பிடித்து நலமாக வாழ இறைவனை வேண்டிக்கொள்வோம்.
Subscribe to:
Post Comments (Atom)
கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே
ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...
-
அன்பின் திருவுருவங்களே, நமக்குள்ளே இருக்கும் தெய்வீக இயல்பை நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். இதன் காரணமாகத் தேவையற்ற துன்பங்களுக்கு உட்ப...
-
ஓம் ஸ்ரீ சாயி ராம். நமது வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள்அனத்துக்கும் நாம் தான் காரணம். நமது வாழ்க்கையில் நடைபெறும் நல்லதோ கெட்டதோ அனைத்துக்க...
-
ஓம் சிறி சாயி ராம். தர்மசேத்திரம் எனப்படும் குருச்சேத்திரத்தில் பாண்டவர்களின் ஏழு அக்குரோணிச் சேனைகள் ஒருபுறமும் துரியோதனின் பதினொரு அக்க...
No comments:
Post a Comment