Monday, December 28, 2020
இறைவன் நம்முள் இருக்கும்பொழுது நாம் பயப்பட வேண்டிய அவசியமேயில்லை.
அன்பின் வடிவங்களே, தன்மீது நம்பிக்கை, கடவுளின்மீது நம்பிக்கை ஆகிய இரண்டுமிருந்தால் வாழ்க்கையில் எதைவேண்டுமானாலும் சாதித்து விடலாம். பயமற்று இருங்கள். எதற்கும் பயப்படாதீர்கள். சத்தியம் நம்முள் இருக்கும்பொழுது நாம் எதற்காகப் பயப்பட வேண்டும்? சத்தியம் எதைக்கண்டும் அஞ்சாது. வாய்மையே வெல்லும். இது ஆன்றோர் கூற்று. இந்தச் சத்தியத்தை அன்பின் வழியாக மட்டுமே அடைய முடியும். என்னுடைய உரைகளில் சத்தியத்தையும், அன்பையும் உரையின் ஆரம்பத்திலும், முடிவிலும் வலியுறுத்திக் கூறிவருகிறேன். ஏனென்றால் இவையிரண்டும் உயிருக்குச் சமமானவை. இவ்விரண்டும் மூச்சை உள்வாங்குவதும், வெளிவிடுவதும் போன்றது. இவ்விரண்டும் இல்லாமல் மனிதன் உயிர் வாழ முடியாது. அதாவது சோ……ஹம்…., இவற்றில் சோ…. உள்வாங்கும் மூச்சு. அது சத்தியம். ஹம் என்பது வெளிவிடும் மூச்சு. அது அன்பு. அதாவது சத்தியத்தை உள்வாங்கி அன்பை வெளிப்படுத்துங்கள். இளம்வயதிலிருந்தே சத்தியத்தையும் அன்பையும் வளர்த்துக்கொள்ளுங்கள். சத்தியத்தை நல்வழியில் பயன்படுத்தவேண்டும். இந்தச் சத்தியத்தைச் சுயநலநோக்குடன் பயன்படுத்தினால் அதன் தன்மையே மாறிவிடுகிறது. அந்நாளில் மன்னர் சத்திய அரிச்சந்திரன், பல இன்னல்களின் மத்தியில் சத்தியத்திலிருந்து மாறாமல் இருந்ததால்தான் இறுதியில் வெற்றியடைந்தார். யாராலும் அவரை மாற்ற முடியவில்லை. அதே அரிச்சந்திரன் தற்போது வந்தால் அவரையே மாற்றிவிடுமளவிற்கு இந்தக் கலியின் கொடுமை அதிகரித்துள்ளது. கலியின் ஆதிக்கத்துக்கு நாம் எந்தக் காலத்திலும் ஆளாகக் கூடாது. இந்தச் சத்தியத்தை நம் வாழ்க்கையில் ஆனந்தமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். எந்தச் சாதனைகளை மேற்கொள்ளாவிட்டலும் பரவாயில்லை, சத்தியத்தையும் அன்பையும் வளர்த்துக்கொள்ளவேண்டும். சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை இந்த நான்கிலும் ஹிம்சை என்கிற வன்முறை சிறிதுகூட இல்லை. ஆகவே சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை இந்த நான்கையும் முழுமையாக அனுசரித்தால், அஹிம்சை என்கின்ற கோட்பாடு முழுமையாக வெளிப்படுகிறது. இவ்வுயரிய கோட்பாடுகள் இல்லாமல் போனதால்தான் எங்கும் வன்முறை தலைவிரித்து ஆடுகிறது. வீட்டினுள்ளே வன்முறை, வெளியிலே வன்முறை, கடைத்தெருவில் வன்முறை, பஸ்ஸில். ரயிலில், விமானத்தில் எங்கும் வன்முறை. எங்கும் பயம். வாழ்க்கையே பயமாகிவிட்டது. வன்முறை பத்மவியூகம் போன்று எங்கும் அனைவரையும் திணறடிக்கிறது. இறைவனின் சந்நிதானமே பயம் அறவே அற்ற இடம். இறைவனின் முன் பயம் முழுமையாக அகன்றுவிடுகிறது.இறைவன் நம்முள் இருக்கும்பொழுது நாம் பயப்பட வேண்டிய அவசியமேயில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே
ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...
-
அன்பின் திருவுருவங்களே, நமக்குள்ளே இருக்கும் தெய்வீக இயல்பை நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். இதன் காரணமாகத் தேவையற்ற துன்பங்களுக்கு உட்ப...
-
ஓம் ஸ்ரீ சாயி ராம். நமது வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள்அனத்துக்கும் நாம் தான் காரணம். நமது வாழ்க்கையில் நடைபெறும் நல்லதோ கெட்டதோ அனைத்துக்க...
-
ஓம் சிறி சாயி ராம். தர்மசேத்திரம் எனப்படும் குருச்சேத்திரத்தில் பாண்டவர்களின் ஏழு அக்குரோணிச் சேனைகள் ஒருபுறமும் துரியோதனின் பதினொரு அக்க...
No comments:
Post a Comment