Tuesday, December 29, 2020

கடவுளை நம்புவோம். கிடைத்தற்கரிய இந்த மானிட வாழ்க்கையைப் புனிதமாகப் பயன்படுத்துவோம்.

“ அன்பின் திருவுருவங்களே, நம் மனம் தூய்மையாக இருக்கவேண்டுமென்றால் நல்லோர் சேர்க்கையை நாடவேண்டும். ஆனால் சில சமயங்களில் நல்லது தீயதாகவும், தீயது நல்லதாகவும் தென்படுகிறது. யார் நல்லவர் யார் தீயவர் என்று பிரித்தறிவது மிகவும் கடினம். நல்ல கலாச்சாரம், நல்ல நடத்தை, நல்ல வார்த்தைகளைக் கொண்ட இனிமையான பேச்சு, நன்முயற்சிகள் என்பவை ஒரு மனிதர் நல்லவர் என்று நமக்கு அடையாளம் காட்டுகின்றன. மனிதர்கள் ஆனைவருக்கும் நற்கலாச்சாரம் மிக அவசியம். நற்கலாச்சாராம் தீய குணங்களை அகற்றி நல்ல குணங்களை வளர்க்கிறது. அனைத்தும் தெரிந்திருந்தும் தெரியாதது போல் இருப்பதும், உரிய நேரத்தில், பக்தர்களுக்குத் தான் எல்லாம் அறிந்தவர் என்பதை உணர்த்தி நல்வழிப்படுத்துவதும் கடவுளின் திருவிளையாடல். கடவுளை நம்புவோம். கிடைத்தற்கரிய இந்த மானிட வாழ்க்கையைப் புனிதமாகப் பயன்படுத்துவோம். சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சை ஆகியவற்றையும், HELP EVER , HURT NEVER என்ற கொள்கையையும் கடைப்பிடிப்போம்.”

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...