Wednesday, December 23, 2020
இப்பிரபஞ்சமே இறைவனின் சொரூபம் என்பதை உணர்ந்து வாழ்வோம்.
அன்பின் வடிவங்களே,
தெய்வம் பூமியில் யேசு பகவானாக அவதரித்த தினத்தை அனைவரும் கொண்டாடுகிறோம். யேசு பகவான் அன்பே உருவானவர். அன்புடன் பூவுலக வாழ்வைத் தொடங்கினார். வாழ்நாள் முழுவதையும் அன்பால் நிறைத்தார். அனைவரையும் அன்பையே கடைப்பிடிக்குமாறு போதித்தார். அவரது போதனைகளை நாம் அனைவரும் நமது வாழ்வில் கடைப்பிடிப்பதே நம் அனைவரதும் கடமையாகும்.
எனவே நாம் அனைவரும் அன்புடன் நாளைத் தொடங்குவோம். நாள் முழுவதும் அன்புடன் செயல்புரிவோம். அன்பினால் நாளை நிறைப்போம். அன்புடன் நாளை முடிப்போம். உலகமே அன்பு மயமானது என்பதையும், இப்பிரபஞ்சமே இறைவனின் சொரூபம் என்பதையும் உணர்ந்து வாழ்வோம். உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழப் பிரார்த்திப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே
ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...
-
அன்பின் திருவுருவங்களே, நமக்குள்ளே இருக்கும் தெய்வீக இயல்பை நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். இதன் காரணமாகத் தேவையற்ற துன்பங்களுக்கு உட்ப...
-
ஓம் ஸ்ரீ சாயி ராம். நமது வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள்அனத்துக்கும் நாம் தான் காரணம். நமது வாழ்க்கையில் நடைபெறும் நல்லதோ கெட்டதோ அனைத்துக்க...
-
ஓம் சிறி சாயி ராம். தர்மசேத்திரம் எனப்படும் குருச்சேத்திரத்தில் பாண்டவர்களின் ஏழு அக்குரோணிச் சேனைகள் ஒருபுறமும் துரியோதனின் பதினொரு அக்க...
No comments:
Post a Comment