Wednesday, December 23, 2020

இப்பிரபஞ்சமே இறைவனின் சொரூபம் என்பதை உணர்ந்து வாழ்வோம்.

அன்பின் வடிவங்களே, தெய்வம் பூமியில் யேசு பகவானாக அவதரித்த தினத்தை அனைவரும் கொண்டாடுகிறோம். யேசு பகவான் அன்பே உருவானவர். அன்புடன் பூவுலக வாழ்வைத் தொடங்கினார். வாழ்நாள் முழுவதையும் அன்பால் நிறைத்தார். அனைவரையும் அன்பையே கடைப்பிடிக்குமாறு போதித்தார். அவரது போதனைகளை நாம் அனைவரும் நமது வாழ்வில் கடைப்பிடிப்பதே நம் அனைவரதும் கடமையாகும். எனவே நாம் அனைவரும் அன்புடன் நாளைத் தொடங்குவோம். நாள் முழுவதும் அன்புடன் செயல்புரிவோம். அன்பினால் நாளை நிறைப்போம். அன்புடன் நாளை முடிப்போம். உலகமே அன்பு மயமானது என்பதையும், இப்பிரபஞ்சமே இறைவனின் சொரூபம் என்பதையும் உணர்ந்து வாழ்வோம். உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழப் பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...