Wednesday, December 30, 2020
மனிதர்களுக்குத் தியாகம் மிக அவசியம். தியாகம் யோகத்தை அளிக்கும்.
அன்பின் திருவுருவங்களே, நீங்கள் எதற்கும் பயப்படவேண்டாம். நான் இருக்கிறேன். என்னைப் பின்பற்றி நடவுங்கள். கடவுள் உங்களுக்கு எபொழுதும் உதவி புரியவே உங்களைச் சுற்றிச் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார். கடவுள் ஒவ்வொரு நொடிப்பொழுதும் பக்கபலமாக இருந்து நமக்கு நிலையான ஆனந்தத்தை அளித்துக் கொண்டிருக்கிறார். ஆகையால் நாம் எக்காரணத்தைக் கொண்டும் மனத்தளர்ச்சி அடையலாகாது. உண்மையைச் சொல்லப்போனால் மனிதன் மனைதனேயல்ல. மனிதன் தெய்வமே. உடல்மீது பற்றுக் கொள்ளாதீர்கள். உடலைக் கடவுள் தந்த கருவியாக மாத்திரமே உபயோகித்துக் கடமையாற்றுங்கள். கடமையாற்றுவதற்கே உடல் வழங்கப்பட்டுள்ளது. சமுதாயத்தில் நுழைந்து சேவை செய்யுங்கள். சமூக முன்னேற்றத்துக்குப் பாடுபடுங்கள். திக்கற்றவர்கள் மற்றும் துயரப்படுபவர்களின் துயரைத் துடைக்கச் சேவை செய்யுங்கள். கடவுளிடம் எக்காரணம் கொண்டும் வெறுப்புக் கொள்ளாதீர்கள். கடவுளை நேசியுங்கள். உங்களுக்குப் பிடிக்காதவரொருவரை வழியில் சந்திக்க நேரும்போது அவரிடம் வெறுப்பாகப் பேசினால், அவரும் வெறுப்படைந்து நிலமை மோசமாகும். ஆனால் அவரிடம், நண்பரே, எப்படியிருக்கிறீர்கள் என்று அன்போடு விசாரித்தால் அவரிடமிருக்கும் வெறுப்புக் குறையும். நல்லெண்ணம் ஏற்படும். நல்லுறவும் ஏற்படும். மனிதர்களுக்குத் தியாகம் மிக அவசியம். தியாகம் அல்லது நற்குணங்கள் அல்லாதவற்றைத் துறத்தல் யோகமாகும். மாறாகப் போகம் இச்சைக்கு வழிவகுக்கும். தியாகம் யோகத்தை அளிக்கும். போகம் வியாதிக்கு வழிவகுக்கும். தியாகம் யோகமாகும். போகம் வியாதியாகும். எனவே ஒவ்வொரு மனிதரும் எப்பொழுதும் கடவுள் சிந்தனையுடன் செயல்புரியவேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே
ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...
-
அன்பின் திருவுருவங்களே, நமக்குள்ளே இருக்கும் தெய்வீக இயல்பை நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். இதன் காரணமாகத் தேவையற்ற துன்பங்களுக்கு உட்ப...
-
ஓம் ஸ்ரீ சாயி ராம். நமது வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள்அனத்துக்கும் நாம் தான் காரணம். நமது வாழ்க்கையில் நடைபெறும் நல்லதோ கெட்டதோ அனைத்துக்க...
-
ஓம் சிறி சாயி ராம். தர்மசேத்திரம் எனப்படும் குருச்சேத்திரத்தில் பாண்டவர்களின் ஏழு அக்குரோணிச் சேனைகள் ஒருபுறமும் துரியோதனின் பதினொரு அக்க...
No comments:
Post a Comment